இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 11 - 15 of 130 பாடல்கள்

நாராயணக்கோன் கூறுதல்

கொச்சகக் கலிப்பா

11. சீரார் சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
          பாராதி வான்பொருளைப் பஞ்சவுரு வானவொன்றைப்
பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை
          நேராக எந்நாளும் நெஞ்சிருத்தி வாழ்வேனே.

விளக்கவுரை :

12. கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப்
          பெண்ணுருவப் பாதியனைப் பேசரிய முப்பொருளை
விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத்
          தண்ணளியை யுள்ளில்வைத்துச் சாரூபஞ் சாருவனே. 

விளக்கவுரை :

கண்ணிகள்

13. மனமென்னும் மாடடங்கில் தாண்ட வக்கோனே, முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்ட வக்கோனே.

விளக்கவுரை :

14. சினமென்னும் பாம்பிறந்தாற் தாண்டவக்கோனே யாவுஞ்,
சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே.

விளக்கவுரை :

15. ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
அண்டமெல்லாங் கண்டறிவாய் தாண்ட வக்கோனே.

விளக்கவுரை :



இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 6 - 10 of 130 பாடல்கள்

6. காலா காலங் கடந்திடு சோதியைக்
          கற்பனை கடந்த அற்புதத்தை
நூலாற் பெரியவர் சொன்னநுண் பொருளை
          நோக்கத்திற் காண்பது கோனாரே. 

விளக்கவுரை :

7. சொல்லருஞ் சகல நிட்கள மானதைச்
          சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலு மகத்தி லிருந்திடிற்
          அந்தகன் கிட்டுமோ கோனாரே.

விளக்கவுரை :

8. சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்
          தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாரியிடப்பாகன் தான்நெஞ்சிற்போற்றியே
          நற்கதி சேர்ந்திடும் கோனாரே.

விளக்கவுரை :

9. மும்மலம் நீக்கிட முப்பொறிக் கிட்டாத
          முப்பாழ் கிடந்ததா மப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமைத்துஞ்
          சிந்தையில் வைப்பீரே கோனாரே.

விளக்கவுரை :

10. பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
          பற்ற நின்றதைப் பற்றி யன்பாய்
நெஞ்சத் திருத்தி யிரவு பகலுமே
          நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே.

விளக்கவுரை :
Powered by Blogger.