சட்டை முனி சித்தர் பாடல்கள்  86 - 90 of 200 பாடல்கள்

86. பொங்குகின்ற காமமென்ன? சிவத்தின் கூறு;
          பொல்லாத ஆசையென்ன? மாலின் கூறு.
மங்குகின்ற மோகமென்ன? மகேசன் கூறு;
          மருவியந்த மூன்றாலு முலகம் பாழாய்த்
தங்குகின்ற யோகம்போய் ஞானம் பாழாய்ச்
          சமாதியெல்லா மிந்திரியச் சார மூடித்
தொங்குகின்ற மோட்சத்தின் தரைபோ லாகச்
          சூனியமாய் ஞானமெல்லாந் தோற்று மாறே.

விளக்கவுரை :

87. மாறான பெண்ணாசை விட்டே னென்பார்;
          மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்
தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்
          சதாசிவனால் முடியாது; மற்றோ ரேது?
கூறான விந்துவிடக் கோப மோகங்
          குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்
வீறான விந்துவுக்கு மேலே நின்று
          விருதுபெற்ற மௌனியல்லோ வெட்டி னாரே.

விளக்கவுரை :

88. வெட்டினார் மௌனியந்த விந்து பாம்பை
          வேதாந்த மென்றதொரு வாளி னாலே
தட்டினார் மாய்கையைத்தான் சண்ணிக் கீழே
          சச்சிதா னந்தவெள்ளச் சார்பி னாலே;
ஒட்டினா ரொட்டினநிர்க் குணத்தின் மட்டும்
          உத்தமனே யதுவல்லோ ஞான வீதி?
தெட்டினார் தெட்டினார் சகல ரெல்லாம்
          செகசால வித்தையென்று தெளிந்து பாரே.

விளக்கவுரை :

89. தெளிவதுதா னெளிதல்ல வாய்ப்பேச் சல்ல;
          சிங்காரப் பெண்கண்டால் ஞானம் போச்சு
அழிவதுதான் சடலத்துக்கே யடுத்த கூறாம்
          அதரமுண்டு கூடுது போக மென்பார்
கழிவதுதான் காலேது வாசி யேது
          கைவிட்ட மைதுனத்திற் கலப்ப தேது?
ஒழிவதுதா னெந்நாளோ வென்று லோகர்
          ஒருகோடி மாண்டார்க ளூன்றிக் காணே.  

விளக்கவுரை :

90. காணப்பா பிறப்பிறப்புப் பெண்ணா லாச்சு;
          கைகடந்த மாயமெல்லாம் பெண்ணா லாச்சு;    
பூணப்பா இந்திரியம் பெண்ணா லாச்சு;
          புகழ்பெரிய வாசனையும் பெண்ணா லாச்சு;
தோணப்பா மனம்புத்தி யாங்கா ரத்தில்
          சொக்கிச்சுப் பெண்ணாலே சூட்டிப் பாரு;
ஊணப்பா வூணப்பா வுரைக்கச் சொன்னேன்;
          உலகத்திற் றிரியாதே விண்ணி லாடே.

விளக்கவுரை :



சட்டை முனி சித்தர் பாடல்கள்  81 - 85 of 200 பாடல்கள்

81. ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன்
          அறிந்துகொண்டே அறிவாலே நின்று பாரு;
சேமப்பா திரோதாயி யாரென் றக்கால்
          செகமெலாம் பெண்ணான வுருத்தா னப்பா!
ஓமப்பா பொன்மண்வா சனையி னாசை
          ஒற்றிநின்ற விந்திரிய மயக்கத் தாசை
நாமப்பா வென்றுசொன்ன ஆண்மை யாசை
          நல்வினைக்குந் தீவினைக்கும் வித்து மாச்சே.

விளக்கவுரை :

82. வித்துக்குள் பாவமென்ன புண்ய மென்ன
          வெகுகோடி புண்ணியத்தால் புருட சன்மம்        
புத்துக்குள் வெகுகோடி பாவ புண்யம்
          பாழான பெண்செனன மெடுத்த வாறு
கொத்துக்கு ளிவையறிந்து பாவ மான
          குழிக்குள்ளே வீழ்ந்தாரே கோடி யையோ!
எத்துக்கு ளிவையறிந்து வேறாய் நின்றே
          இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான வீச னாமே. 

விளக்கவுரை :

83. பூரணமே யகண்டமே யகத்தி னந்தம்
          பொங்கிநின்ற நிர்க்குணமே யென்னை யீன்ற
காரணமே யலகிற்பெண் ணாசை போலக்
          கலந்துநின்ற சுகமில்லை கருதிக் கொண்டேன்.
ஆரணமே யதீதத்தில் சுகந்தா னென்ன
          அப்பவே சொல்லுகிறே னறிந்து கொள்ளு;
காரணமாங் குவிமுலையா ளாசை விட்டால்
          மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே.

விளக்கவுரை :

84. நேரான பெண்ணாசை நீங்கிற் றானால்
          நிலையான திரோதாயி மாய்கை போச்சு
தூரான வேதாந்த வெளியிற் சொல்வார்
          சும்மென்ற சகஞ்சொல்வா யோகி யல்லை
வாராய்நீ யென்மகனே பெண்ணாற் சிக்கி
          மகத்தான ரிடிகள்சித்தர் கோடி கெட்டார்;
தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள்
          தயங்கி நின்று படும்பாடு சாற்று வேனே. 

விளக்கவுரை :

85. சாற்றுவேன் வீதிபடு குழிதா னுண்டு
          தன்மேலே புல்லோடு செடியு மூடி
மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்த
          வாறொக்கும் பெண்ணான மாயக்கூபம்
ஆற்றுவே னென்றாலு மாற்றப் போகா
          அரகரா பெண்ணரவு கடித்த தானால்
போற்றுவே னென்றாலும் பொல்லாக் காமம்
          பொறிவிட்ட நெய்போலப் பொங்கும் பாரே.

விளக்கவுரை :
Powered by Blogger.