அழுகணிச் சித்தர் பாடல்கள் 36 - 40 of 40 பாடல்கள்


அழுகணிச் சித்தர் பாடல்கள் 36 - 40 of 40 பாடல்கள்

36. வாகாதி ஐவரையும் - ஆத்தாடி
மாண்டுவிழக் கண்டேண்டி
தத்துவங்க ளெல்லாம் - ஆத்தாடி
தலைகெட்டு வெந்ததடி.

விளக்கவுரை :

37. மஞ்சன நீராட்டி - ஆத்தாடி
மலர்பறித்துத் தூவாமல்
நெஞ்சு வெறும்பாழாய் - ஆத்தாடி
நின்றநிலை காணேண்டி.

விளக்கவுரை :

38. பாடிப் படித்து - ஆத்தாடி
பன்மலர்கள் சாத்தாமல்
ஓடித் திரியாமல் - ஆத்தாடி
உருக்கெட்டு விட்டேண்டி.

விளக்கவுரை :

39. மாணிக்கத்து உள்ளொளிபோல் - ஆத்தாடி
மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் - ஆத்தாடி
பேசாப் பெருமையன் காண்.

விளக்கவுரை :

40. புத்தி கலங்கியடி - ஆத்தாடி
போந்தேன் பொரிவழியே
பதித்தறியாமல் - ஆத்தாடி
பாழியில் கவிழ்ந்தேனே.

விளக்கவுரை :

தோற்றம் மொடுக்கம் இல்லா - ஆத்தாடி
தொல் பொருளை அறியார்கள்...

விளக்கவுரை :

(முடிந்தது)

அழுகணிச் சித்தர், அழுகணிச் சித்தர் பாடல்கள், azhuganni siththar, azhuganni siththar paadalkal, siththarkal