போகர் சப்தகாண்டம் 3091 - 3095 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3091. தஅனான வீரியனும் ஆரியனாய்வேண்டும் தகமையுள்ள வீரியனாயிருப்பானானால்
வேனான மந்திரத்தை மிகவும்பேசும் மிக்கான கிரமவிதி தானடத்தும் 
பானான குருமுறைபோல் யாகஞ்சொல்லும் பாலகனே யாகமது குறுதிகூறும்
தேனான வீரியனாங் குட்டிதன்னை தெளிவுபெற லோகமதில் வசியஞ்செய்யே

விளக்கவுரை :


3092. செய்யவே குட்டியெனும் வசியமானால் ஜெகத்திலே கோடிவித்தை யாடலாகும்
பையவே மாந்தர்மேலேவதாகும் பாங்குடனே கல்லதனை எறியலாகும்
மெய்யுடனே ஜெகஜால வித்தையப்பா மேதினியில் ஆருந்தான் செய்யவில்லை
பெய்யவே சங்கலீயன் கறுப்பன்தானும் பேரான வண்ணமா ரேழுமாமே

விளக்கவுரை :

[ads-post]

3093. ஏழான வண்ணமார் காவலாளர் எழிலான ஜாலமென்ற மாளிதன்னில்
பாழான வையன்மார் பிடாரிதானும் பச்சையென்ற தேவதையும் காளியோடு
வாழாத குமரிகளாஞ் சத்தகன்னி வளமுடனே பச்சையென்ற பல்லக்குதன்னை
தாழாமல் தோலதனில் எடுத்துக்கொண்டு தகமையுடன் காளிதனை தூக்குவாரே

விளக்கவுரை :


3094. தூக்கியே ஜாலமென்ற மாளிதன்னில் துப்புரவாய் காவலுடன் இருந்துகொண்டு
நோக்கமுடன் தேவதையை வசியஞ்செய்து நொடிக்குள்ளே கோடிவித்தை யாடலாகும்
பார்க்கவென்றால் லோகமதில் மாந்தர்யாவும் பதபதைத்து நடுநடுங்கி கதருவார்கள்
வாக்குடனே வரமுனக்கு பதமுந்தந்து வாகுடனே செல்லுமென செப்புந்தானே

விளக்கவுரை :


3095. சொல்லவென்றால் இன்னம்வெகு கூத்துகேளிர் செயலான நாதர்முனி ரிஷிகள்தாமும்
வெல்லவே பூதமதை வசியஞ்செய்து வேணவுபசாரமது வதன்கையாலே
புல்லவே யேவல்தனைச்செய்யவென்று புகழாக வசியமது செய்துகொண்டு
மெல்லமே தம்பணிக்கு ஆனதாக்கி மேன்மையுடன் சித்துகளு மாடினாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3086 - 3090 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3086. தீட்டையிலே கருமான மின்னமொன்று திறமுடனே செப்புகிறேன் மைந்தர்க்காக
வாட்டமுடன் ஜெகஜால கொள்ளிதன்னை வாகுடனே தானழைத்து திட்டங்கூறி
தேட்டமுடன் பிரணவத்தை முன்பின்னாகத் தெளிவுடனே ஓதிவைத்த படிநீதானும்
சசட்டியே குறளிக்கு பிரணவத்தைக்கூறி சூட்சமுடன் அட்சரத்தை சுறுக்கிமாறே

விளக்கவுரை :


3087. மாறப்பா வஞ்சமாய் வீட்டுக்குள்ளே மன்னவனே நடுமையம் நின்றுகொண்டு
கூறப்பா செத்தவரைக்காணவென்று குறிப்புடனே பட்சம்வைத்து காண்பதற்கு
நேரப்பா வந்தவர்பேர் வூர்தானென்ன நிலையான இருப்பிடமும் ரூபமென்ன
ஊரப்பா முன்னிருந்த ரூபமென்ன வுத்தமனே இறந்தபின்பு ரூபங்கேளே 

விளக்கவுரை :

[ads-post]

3088. கேளவே வடவத்தின் வரணங்கேளு கெடியான வாடையென்ற ரூபங்கேளு
நீளவே வாபரணப் பெயருங்கேளு நிலையான கைத்தொழிலை யின்னங்கேளு
மீளவே மரபினிடவாச்சாரந்தான் மிக்கான ஒழுக்கமென்ற வாச்சாரங்கேள்
மாளவே மாண்டதோர் வருஷங்கேளு மன்னவனே மாதமென்ற முடிவுங்கேளே

விளக்கவுரை :


3089. கேட்கையிலே இறந்ததோர் நாளுஞ்சொல்லும் கெவுனமுடன் நாழிகையும் முன்னேகூறும்
நீட்கமுடன் அடையாளம் சொல்லும்போது நிஷ்களங்கமாகவல்லோ உண்மைதோன்றும்
சூட்சமுடன் குறளிக்கு திலகவித்தை சுத்தமுடன் சொல்லுகின்ற தன்மையுண்டு
வேட்கமுடன் பில்லைதனை வசியங்செய்து லோகமதில் வெகுசித்து வாடலாமே

விளக்கவுரை :


3090. ஆடலாம் வெகுதந்திரம் குறளிகொண்டு அப்பனே சூனியமும் இதனாலுண்டு
தேடவே குட்டியது மலைக்குட்டிதானும் தெளிவுடனே நாம்சொன்ன காரியத்தை
ஊடவே ஒளிந்திருந்து வதையச்செய்யும் உத்தமனே இருள்மாளி காணலாகும்
நாடவே ஜாலக்காள் மோகினியுந்தானும் நலமான குட்டியென்ற வீரியந்தானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3081 - 3085 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3081. குறளியாம் ஜாலமென்ற மாளிதன்னில் குறிப்பான நடுவாசல் திட்டுவாசல்
திறமுடனே கூட்டமது எட்டுபேராய் தீரமுடன் எணதிசையாம் திக்குபாலர்
மறளுடைய மேல்வாசல் முன்னேநின்று மதிப்புடைய நாகமென்ற குழல்சந்தாலே
சுறளுடனே மேல்வட்ட பரிதிமுன்னே சூட்சமுடன் செத்தவரைக்காணலாமே

விளக்கவுரை :


3082. காணலாம் அவரவர்கள் அடையாளத்தை கண்டுமே மகத்தெதிரே பேசலாகும்
தோணவே பேசுதற்கு முன்னேதானும் தோற்றமுடன் மயினமது நிறம்போல்நிற்கும்
பூணவே அந்தவண்ணம் என்னலாகும் புகழான ரூபமது கண்ணிற்றோற்றும்
வேணவே உபசாம் மிகவும்பேசும் விருப்பமுடன் முன்னின்று மறையும்பாரே  

விளக்கவுரை :

[ads-post]

3083. மறையிலே நாம்நினைத்த ரூபம்தோற்றும் மன்னவனே மயங்காதே மதிகொள்ளாதே
திரையுடனே முடியல்லோ கண்ணாடிக்குள் தீரமுடன் முன்னின்று வார்த்தைகூறும்
முறையுடனே தான்புகலும் முனிநாதாகேள் முன்னின்று போவதற்கு பின்னேசென்று
குறையன்றி குன்னடந்த காரியத்தை கூறிடுமே மனிதரைப்போல் கூறுமாமே

விளக்கவுரை :


3084. கூறவென்றால் எழுநூற்று இருபதுக்குள் கொப்பெனவே மந்திரத்தை உச்சாடித்து
தீரமுடன் குறளிதனை கிட்டழைத்து திகழுடனே ஞானோபதேசஞ்சொல்லி
கோதமுடன் கைதனிலே மையைப்பூசி கொப்பெனவே கண்ணாடிமேலேவைத்து
பாறமுடன் வட்டமொத்தம் விண்ணைப்பார்க்க பருவமுடன் உருவமது தெரியும்பாரே

விளக்கவுரை :


3085. தோணுமே ஜெகஜால மாளிதன்னில் தோற்றமுடன் கருவெல்லாம் இதற்குள்ளாடும்
காணுமே கையொளியில் வட்டந்தானும் களிப்புடனே மையுருவாய் காணலாகும்
ஏணவே கருமறைப்பை காணலாகும் எழிலான சமயமது வாய்க்கும்பாரு
வூணவே வட்டமென்ற பக்கம்நின்று உத்தமனே நடுமையத்தி லர்தந்தீட்டே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 3076 - 3080 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3076. கூறயிலே மங்சிங் என்றேயோது கொடிதான வுருவதுதான் லட்சமாகும்
தீறமுடன் நிருவாணமாயிருந்து திறமுடனே முக்கோண வட்டத்துள்ளே
சீறலுடன் வராகிதன்னை வரவழைத்து சிறப்புடனே பூசையது செப்பக்கேளும்
நேரமுடனே நடுச்சாம வேளைதன்னில் நேர்மையுடன் மசானகரையிருந்து செய்யே

விளக்கவுரை :


3077. செப்பவென்றால் பூசையது வின்னங்கேளு தெளிவுடனே மசானமதில் சக்கரந்தான்
மெய்யுருவங் கொண்டுமல்லோ புவனைவாலை மேதினியில் கைவசமாய் செய்துகொண்டு
பொய்யுடலை மெய்யென்று நம்பியேதான் புகழான வஞ்சனத்தை மாற்றுதற்கு 
மைவிழியாள் பாசமதை மிகவும்நீங்கி மார்க்கமுடன் தவவிலையில் நின்றிடாயே

விளக்கவுரை :

[ads-post]

3078. நின்றுமே வராகமென்ற சிரசின்மேலே நிலையான பதிவிளக்கை ஏற்றிவைத்து
தன்னுடனே மசானத்தின் சவத்தின்மேல் சட்டமுடன் தீயெரிந்து வேகும்போது
வென்றிடவே வராகத்தின் சிரசின்மேலே வினையமுடன் பதிவிளக்கே யேற்றிவைத்து
சென்றிடவே குறளிதனை வரவழைத்து சிறப்புடனே கொள்ளிதனை காவல்வையே

விளக்கவுரை :


3079. வைத்தவுடன் கொள்ளிவாய் பிசாசுதானும் வாகுடனே குறளிக்கு காவல்நின்று
செத்ததொரு சவத்தின்மேல் இருந்தபன்றி சேரவே சிரசதுவும் எகிரித்தானும்
மெத்தவே ஓங்காரமிட்டுமேதான் மேன்மையுடன் குறளிக்கு எதிர்முன்னாக
சத்தமுடன் கூச்சலிட்டு வராகன்தானும் சதுர்முகமாய் குறளிமுன் பேசும்பாரே

விளக்கவுரை :


3080. பாரேதான் மசானத்தில் பூசைசெய்து பட்சமுடன் குறளியைத்தான் வசியஞ்செய்து
நேரேதான் ஜாலமென்ற மாளிதன்னில் நேர்மையுடன் நாலுபுறம்காவல்வைத்து
சீரேதான் செத்தவர்பேர் கேட்கும்போது சிறப்புடனே குறளிவந்து முன்னேகூறும்
வேரேதான் சஞ்சார மனிதரில்லை வினாவுக்கு விடைகொடுக்கும் குறளியாமே

விளக்கவுரை :


Powered by Blogger.