பத்திரகிரியார் பாடல்கள் 126 - 130 of 231 பாடல்கள்


பத்திரகிரியார் பாடல்கள் 126 - 130 of 231 பாடல்கள்

126. சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிக் காற்று
ஊதும் துருத்தியைப் போட்டு உனை அடைவது எக்காலம்?

விளக்கவுரை :

127. ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

128. கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
புல்லாய் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம்?

விளக்கவுரை :

129. தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் நின் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

130. தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :

பத்திரகிரியார், பத்திரகிரியார் பாடல்கள், pattrakiriyar, pattrakiriyar paadalkal, siththarkal