அகத்தியர் பன்னிருகாண்டம் 351 - 355 of 12000 பாடல்கள்


351. பார்த்தபின்பு திருமூல வர்க்கத்தார்கள்
    பாடிவைத்த மரபுநூ லாயிரந்தான்
நேர்த்தியுடன் ஆயிரத்துச் சொச்சமப்பா
    நேரான சுருக்கமது நூறும்பாரு
பூர்த்தியாய்ப் பதினெண்பேர் ஜாதிவர்க்கம்
    பூட்டினார் திருமூல வர்க்கத்தார்கள்
சாத்திரங்கள் பலநூலுங் கண்டாராய்ந்து
    சட்டமுடன் நூல்தனையே பாடினாரே.

விளக்கவுரை :


352. பாடினார் பதினெண்பேர் சித்தர்தாமும்
    பாருலகில் சமாதியது பூண்டவண்ணம்
தேடியே பார்க்கும்மந்தக் காலந்தன்னில்
    தெளிவாக போகரே ழாயிரத்தில்
கூடியே பதினெண்பேர் சமாதியெல்லாம்
    கொப்பெனவே போக ரேழாயிரத்தில்
நாடியே காலாங்கி நாதர்தம்மால்
    நயமுடனே பாடிவைத்தார் போகர்தாமே.

விளக்கவுரை :


353. தாமான போகரே ழாயிரந்தான்
    தாரணியில் பெருநூலாம் மற்றொன்றில்லை
பூமான மானதொரு காலாங்கிநாதர்
    புண்ணியனார் வரம்பெற்ற போகநாதர்
நேமமுடன் தானுரைத்த சத்தகாண்டம்
    நேர்மையுடன் வையகத்தில் பெருநூலப்பா
ஆமெனவே கண்டவர்கள் யோகவானாம்
    அவனியிலே யவனுமொரு சித்தனாமே.

விளக்கவுரை :


354. சித்தனா மவர் நூல்போல் மறுநூலில்லை
    செகதலத்தில் பதினெண்பேர் சொன்னதில்லை
சத்தமுடன் காண்டமது யேழாயிரத்தில்
    சாற்றினார் லோக வதிசயங்களெல்லாம்
புத்தியுடன் போகரிடி யனேகநூல்கள்
    புகழாகப் பாடிவைத்தார் சீஷருக்கு
முத்தியுடன் பெருநூ லேழாயிரந்தான்
    முதன்மையாம் நூலென்று சொல்லலாமே.

விளக்கவுரை :


355. சொல்லலாம் அந்நூலுக் கெந்நூலப்பா
    தோறாத பெருநூல் காவியந்தானாகும்
வெல்லவே பனிரெண்டு காண்டமப்பா
    விருப்பமுடன் பாடிவைத்தே னின்னூல்தானும்
பல்லவே பன்னீராயிரக் காவியந்தான்
    புகட்டினேன் லோகத்தின் மார்க்கமெல்லாம்
நல்லதொரு சிவராச யோகிமார்கள்
    நண்புபெற யென்னூலைப் போற்றுவாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 346 - 350 of 12000 பாடல்கள்


346. தானேதான் சௌமியந்தான் சுருக்கமப்பா
    தகைமையுள்ள பதினாறும் பாருபாரு
மானேதான் சோடசமாந் தன்னைப்பாரு
    மகத்தான யெட்டுடனே நாலுமேபார்
நானேதான் சொன்னபடி கருவுமேபார்
    நாயகனே வாதார மெட்டுமேபார்
மோனேதான் முப்பத்தி ரெண்டுமேபார்
    உத்தமனே கோசபீசம் பத்துதானே.

விளக்கவுரை :


347. பத்தான வேதமுனி யெட்டுமேபார்
    பாகமுடன் சோடசமும் பதினாறும்பார்
முத்தான கலைக ளிறுபதுவுமேபார்
    முனையான தீட்சையது சுருக்கமேபார்
சித்தான காயகற்ப மைன்பதும்பார்
    சிறப்பான வுடற்கூறு யெட்டுமேபார்
சுத்தமுடன் ஞானமது முப்பதுவும்பார்
    சுருக்கமாய் ஞானமது யெட்டுதாமே.

விளக்கவுரை :


348. எட்டான திலர்துமது ரெண்டுமேபார்
    யெழிலான வஞ்சனமு முப்புபத்து
கட்டான சமாதியது சுருக்கம்பத்து
    கருவான மாற்றமது பத்தும்பார்
திட்டமுடன் சகாதேவன் காவியந்தான்
    திறமான வழகான சுருக்கமப்பா
வட்டமுடன் பதினாறு பார்த்தபின்பு
    வளமான தீட்சையது பாருபாரே.        

விளக்கவுரை :


349. பாரேதான் ஞானமது நூறும்பாரு
    பாங்கான காயகற்பம் பத்துபாரு
நேரான முக்காண்டம் பார்க்கவேண்டும்
    நேர்மையுடன் காண்டமது சுருக்கந்தானும்
சீரேதா னன்பதுமே பார்க்க வேண்டும்
    திறமான தருக்க நூல் பதினாறும்பார்
தீரேதான் முப்பூவின் தீ்ட்சைமார்க்கம்
    திறமுடனே பதினாறும் பார்க்கநன்றே.

விளக்கவுரை :


350. நன்றான தருமநூல் பதினாறும்பார்
    நலமான சித்தருட மரபுநூலாம்
குன்றான காவியந்தா னாயிரமப்பா
    குருவான நந்திசொன்ன நூல்தானாகும்
தென்றிசையாம் பொதிகைதனில் யானுரைத்த
    திறமான மரபுநூ லாயிரந்தான்
சென்றிடவே பாடிவைத்த சுருக்கமப்பா
    செவ்வையுடன் நூறதுவும் பார்க்கநன்றே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 341 - 345 of 12000 பாடல்கள்


341. ரெண்டான டமரகனார் தீட்சையப்பா
    யெழிலுடனே பதினாறும் பார்க்கவேண்டும்
கண்டுமே சிவயோகம் யெட்டும்பார்த்து
    கருவான வுட்கருவை யறியவேண்டும்
வண்டுறைந்து மதுவையுண்ணுங் கதையைப்போல
    மானிலத்தில் நூலதனை யறியவேண்டும்
உண்டான வுட்கருவை யறியாவிட்டால்
    உத்தமனே சாத்திரம் பார்த்தொன்றுங்காணே.

விளக்கவுரை :


342. காணார்க ளசுவனியாந் தீட்சையப்பா
    கருவான வறுபத்து நாலும்பாரு
தோணாத கருவெல்லா மதற்குள்தோணும்
    தொல்லுலகில் நூல்பார்க்க வொன்றுமில்லை
வேணபடி நசகாண்ட மாயிரந்தான்
    விருப்பமுடன் சுருக்கமது நூறும்பாரு
ஊணாத கருவெல்லா மதிலேதோற்றும்
    உத்தமனே பஞ்சகர்த்தா ளாடுங்கூத்தே.

விளக்கவுரை :


343. கூத்தான பஞ்சகர்த்தா ளொடுங்குமார்க்கம்
    குறிப்பான நசகாண்டச் சாத்திரம்
மாத்தானக் கிடமில்லா காயகற்பம்
    மகத்தான ஓருநூறு சொன்னாரப்பா
தீத்தமுடன் காயாதிக் கொண்டோர்தாமும்
    திறமுடனே வெகுகால மிருப்பாரென்று
சாத்தமுனி யாழ்வாரும் பிரபந்தத்தில்
    சாற்றினார் காயத்திரி நூலில்தாமே.

விளக்கவுரை :


344. தாமான சௌமிய மாயிரந்தான்
    தாக்கான சுருக்கமது நூறும்பாரு
நாமேதான் சொன்னபடி பத்தும்பாரு
    நலமான சுருக்கம் பதினாறும்பாரு
போமேதான் சோடசமும் முப்பத்திரெண்டு
    பொங்கமுடன் கைமறைப்பு யிருபத்தினாலு
ஆமோதான் பஞ்சபூத ரகசியங்கள்
    அப்பனே பதினாறில் யெட்டில்பாரே.

விளக்கவுரை :


345. எட்டான பஞ்ச காவியந்தானப்பா
    யெழிலான யேமதத்துவ மெண்ணூறாகும்
கட்டான காவியத்துச் சுருக்கமப்பா
    கருவான யெண்பதும் பாருபாரு
திட்டமுள்ள முப்பூவின் வழலைமார்க்கம்
    சிறப்புடனே கூட்டிவைத்தார் பெருமைமெத்த
மட்டியென்னு முழுமக்க ளறிவாரோசொல்
    மகிழ்ச்சியுடன் விதியாளி யறிவான்றானே. 

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 336 - 340 of 12000 பாடல்கள்


336. எட்டான சோடசமாம் பதினாறும்பார்
    யெழிலான நந்தி பதினாறும்பாரு
மட்டான சோடசமாம் ரெண்டுபாரு
    மகத்தான கலைகள் பதினாறும்பாரு
திட்டமுடன் நந்திபதி னாறும்பாரு
    திறமான வழலையது முப்பத்திரெண்டு
சட்டமுடன் பார்த்தவர்க்குச் சிவயோகங்கிட்டும்
    சதாகாலஞ் சாயுச்சிய மெட்டுந்தானே.

விளக்கவுரை :


337. தானான சிவயோகம் பதினாறும்பார்
    தாக்கான சோடசமு முப்பத்திரெண்டு
வேனான தன்வந்திரி யிருபத்தினாலு
    மிக்கான கக்கிஷமு மொன்பதும்பார்
பானான பரம ரகசியந்தானெட்டு
    பாரினிலே பார்த்தவனுஞ் சித்தனாவான்
மோனான மோட்சவழி யறியலாகும்
    மூதுலகில் துறைகண்ட சித்தனாமே. 

விளக்கவுரை :


338. ஆமேதான் தன்வந்திரிக் காவியத்துக்
    காயிரத்துச் சுருக்கமது யிருபதாகும்
நாமேதான் சொன்னபடி யாராதாரம்
    அப்பனே சுருக்கமது பார்க்கவேண்டும்
தாமேதா னவரவர்கள் சொன்னவாக்கு
    தப்பாது ஒவ்வொரு கோர்வைதானும்
மோமேதான் வீண்காலம் போக்காமாற்றான்
    பொங்கமுடன் பார்ப்பவனே சொரூபனாமே.

விளக்கவுரை :


339. சொரூபமாங் கமலர்சொன்ன தீட்சையப்பா
    சுத்தமுட னறுபத்து நாலும்பாரு
அரூபமென்ற தன்வந்திரி கலைதான்பாரு
    அப்பனே பதினாறுக் குள்ளடக்கம்
உரூபமாம் நடராசர் சொன்னநீதி
    உகந்த தொருதீட்சையது யெட்டும்பாரு
நிரூபமென்ற காயாதி கற்பந்தானும்
    நிட்சையுடன் பார்த்தவனே புனிதனாமே.

விளக்கவுரை


340. புனிதனாம் சுப்பிரமணியர் தீட்சையப்பா
    புகழான மார்க்கமது பதினாறும்பார்
வனிதமுடன் கௌதம ரிடியார்தாமும்
    வாக்குறைத்த காயகற்ப மெட்டும்பாரு
கனிவுடனே யேகாந்தம் பதினாறும்பாரு
    காட்சியுடன் மாட்சிமைகள் பெறவேயாகும்
துணிதமுள்ள சுந்தரனார் தீட்சையப்பா
    சுத்தமுடன் முப்பத்தி ரெண்டும்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 331 - 335 of 12000 பாடல்கள்


331. சுருக்கமாம் பஞ்சரகசியஞ் சுருக்கமப்பா
    சொரூபமென்ற ஞானமது முப்பத்திரண்டு
சருக்கமாஞ் சட்டமுனி முன்ஞானம்பார்
    சதுரான சட்டமுனி பின்ஞானம்பார்
பொருக்கமுடன் ஞானமது வைன்பதாகும்
    போகருட யிருதலைக் கொள்ளியப்பா
பெருக்கமுடன் நடன சாத்திரந்தான்பத்து
    பேரான தீட்சாவிதி பத்தும்பாரே.

விளக்கவுரை :


332. பாரப்பா புண்ணாக்கர் சுருக்கம்பத்து
    பாங்குடனே மச்சமுனிக் காயகற்பம்
நேரப்பா வன்பதுமே பாருபாரு
    நிலையான சாத்திரமு மாறும்பாரு
ஆரப்பா மச்சமுனி சொன்னாற்போல
    அப்பனே காயகற்பஞ் சொன்னதில்லை
பேரப்பா பெருனூல்தான் வால்மூகர்தானும்
    பெருமையுள்ள சுருக்கமது முப்பதுவும்பாரே.

விளக்கவுரை :


333. பார்த்திடவே கமலமுனி நொண்டியப்பா
    கருவான யெண்பதுமே பாருபாரு
சேர்த்திடவே சிவவாக்கியர் நொண்டிதானும்
    சிறப்புடனே யெண்பதுவும் பாருபாரு
கோர்த்திடவே கொங்கணவர் நொண்டியப்பா
    கொற்றவனே நாற்பதுவும் பார்க்கவேண்டும்
ஏர்த்திடவே புண்ணாக்கர் நொண்டிதானும்
    எழிலாக வன்பதுமே கண்டிடாயே.

விளக்கவுரை :


334. கண்டிடவே ராமதேவர் நொண்டியப்பா
    கருவான செயகண்டி முப்பதுவும்பாரு
பண்டிதவான் பலமுனிவர் நொண்டிபார்க்க
    பாரிலே கண்டவனே யோகவானாம்
துண்டரிக மானதொரு தீட்சையப்பா
    துரையான யாக்கோபு சொன்னார்பாரு
கொண்டபடி வேதமுனி சொன்னவாக்கு
    குவலயத்தில் கூறவுந்தான் முடியாதன்றே.

விளக்கவுரை :


335. அன்றான பிரம்மமுனி நொண்டிதானும்
    அப்பனே யெண்பதுவும் பாருபாரு
நன்றான யிடைக்காடார் நொண்டிதானும்
    தாக்கான வறுபதுவும் பார்க்கநன்று
குன்றான ரோமரிடி தீட்சையப்பா
    குறிப்புடனே பார்ப்பதுவும் மெத்தநன்று
பன்றான புண்ணாக்கர் தீட்சையப்பா
    பதமுடனே பார்த்தவர்க்கு காட்சியெட்டே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 326 - 330 of 12000 பாடல்கள்


326. பதினாறு பார்க்கையிலே யெல்லாஞ்சித்தி
    பார்லோகம் வசியமதாய் கைக்குள்ளாகும்
மதியான பூரணமாம் கும்பமப்பா
    மகத்தான பதினாறும் பார்க்கவேண்டும்
விதியான கொங்கணவர் திருமந்திரந்தான்
    விட்டகுறை முப்பத்திரண்டு மறியவேண்டும்
சதியில்லா கருவூரார் சாலமப்பா
    சட்டமுடன் அறுபத்து நாலுங்காணே.

விளக்கவுரை :


327. காணவே நாலுகாண்டஞ் சுருக்கமப்பா
    கருவாக வறுபத்து நாலும்பாரு
தோணவே திருமூலர் யெட்டும்பாரு
    தோற்றமுடன் தேவிபூசை பதினாறும்பார்
வேணபடி சண்முகத்தின் பூசையப்பா
    விருப்பமுடன் பதினாறு பார்க்கவேண்டும்
பாணமுடன் ரோமரிடி சுருக்கமப்பா
    பாகமுடன் வறுபத்து நாலும்பாரே.
   

விளக்கவுரை :


328. நாலான ரோமரிடிக் கண்டசுத்தி
    நலமான சூத்திரமும் பதினாறும்பார்
காலான ரோமரிடி நாலும்பாரு
    கருவான வென்ஞானம் பதினாறும்பார்
சேலான போகருட வாதசூத்திரம்
    செம்மையுடன் பதினாறும் பார்க்கவேண்டும்
நூலான ராமதேவர் சூத்திரந்தான்
    நுணுக்கமுடன் நூல்பார்க்க வேண்டுந்தானே.

விளக்கவுரை :


329. தானான கொங்கணவர் பெருநூலப்பா
    தாக்கான காவியமாஞ் சுருக்கம்பாரு
வேனான கண்டசுத்தி நூறும்பாரு
    விருப்பமுடன் சுருக்கமது பத்தும்பாரு
கோனான பெருநூ லாயிரந்தானப்பா
    கொற்றவனே கருக்கிடையும் இருநூறும்பார்
தேனான புடபாக மைம்பதும்பார்
    தெளிவாக சுருக்கமது பத்தும்பாரே.

விளக்கவுரை :


330. பத்தான சுருக்கமென்ற கற்பம்நூறு
    பாங்கான சட்டமுனி நாதர்கற்பம்
சித்தான யாக்கோபு வன்பதும்பார்
    சிறப்பான ஞானமது பதினாறும்பார்
முத்தான ஆராதாரச் சுருக்கம்
    முனையான பூஜாவிதி யிருபதும்பார்
சத்தான சட்டமுனி ஞானம்பத்து
    சதுரான போகரது சுருக்கம்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 321 - 325 of 12000 பாடல்கள்


321. ஆமேதான் கொங்கணவர் காவியத்தில்
    அப்பனே சுருக்கமது நூரும்பாரு
நாமேதான் சொன்னபடி வாயிரந்தான்
    நலமான பூரண காவியத்துக்கப்பா
வேமேதான் சுருக்கமது நூறும்பாரு
    மிக்கான ஜெயகண்டி வாயிரந்தான்
தாமேதான் சுருக்கமது நூறும்பாரு
    தாக்கான சூத்துரமும் பத்தும்பாரே.

விளக்கவுரை :


322. பாரப்பா போகரது கருமானந்தான்
    பாங்கான வெண்பதுவம்பாருபாரு
நேரப்பா கொங்கணவர் புடபாகந்தான்
    நெருக்கமுடனன்பதுவும் பார்க்கவேண்டும்
சேரப்பா கொங்கணவர் கண்டசுத்தி
    சீரான வன்பதுவும் பார்த்தால்நன்று
கூரப்பா புசண்டரத வன்பதுந்தான்
    கொப்பெனவே பார்த்தாக்கால் சுத்தியாமே.

விளக்கவுரை :


323. சுத்தியாம் காயசுத்தி பெறவேண்டும்
    சூட்சாதி பிரணவத்தை அறியவேண்டும்
நித்தியமாம் சரக்குசுத்தி யறியவேண்டும்
    நீயான சத்துருமித்துரு பார்க்கவேண்டும்
புத்தியாய் கும்பமுனி வன்பதப்பா
    புகழுடனே பார்த்தாலே யெல்லாஞ்சித்தி
சித்திபெற தட்சணா மூர்த்திநாயன்
    சிறப்பான லோக மாரணத்தைப்பாரே.

விளக்கவுரை :


324. பார்க்கவென்றால் யெந்தனது கருமானந்தான்
    பரிவான திருக்கூத்து யறுபத்துநாலு
தீர்க்தமுட னகஸ்தியர் அட்சர ஞானம்
    திறமுடனே முப்பதுவும் பார்க்கவேண்டும்
ஏர்க்கவே வசுவனிப் பிரயோகந்தான்
    எழிலான பாணமது நாற்பத்திரண்டு
மார்க்கமுடன் ஞான காவியச்சுருக்கம்
    மதிப்புடனே யிருபதுந்தான் பார்த்திடாயே.

விளக்கவுரை :


325. மதிப்பான போகர்பல திரட்டுத்தானும்
    மகத்தான வன்பதுவும் பார்க்கவேண்டும்
துதியான இடைக்காடார் வல்லாதியப்பா
    துப்புரவாம் முப்பதுவும் பார்க்கவேண்டும்
விதியான சண்டமா ருதந்தானப்பா
    விருப்பமுடன் பதினாறுங் காணவேண்டும்
பதியான கருவூரார் அஞ்சனந்தான்
    பாண்மையுடன் பதினாறு பார்த்திடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 316 - 320 of 12000 பாடல்கள்


316. ஒன்றுடனே வியாசமுனி சொன்னநூலாம்
    உத்தமனே வாயிரத்துச் சொச்சநூலாம்
வென்றிடவே சொச்ச சூத்திரந்தான்நூறு
    வேதமுனி தானுரைத்த வாக்கியம்பார்
தென்றிசையில் தட்சணா மூர்த்தினாயன்
    தேசத்தில் மாந்தர்கள் பிழைக்கவென்று
முன்னுரைத்த பெருநூலாங் காவியந்தான்
    உத்தமனே ஆயிரத்து சொச்சம்பாரே.

விளக்கவுரை :


317. சொச்சமாய் சுருக்கமது நூறும்பாரு
    சோராமல் சூத்திரமாய் பத்தும்பாரு
மிச்சமாம் கைலாச சட்டநாதர்
    மீண்டுரைத்த நிகண்டுக்குச் சுருக்கமப்பா
அச்சுமில்லா எண்பதுவும் பதினாறும்பார்
    அப்பனே சிவவாக்கியர் குளிகைபாரு
கச்சலன்றி கருவூரார் சொன்னநீதி
    காசினியி லாராலும் பார்க்கொண்ணாதே.

விளக்கவுரை :


318. ஒண்ணாது மச்சமுனி யெண்ணூறுக்கு
    வுத்தமனே பதினாறு சுருக்கம்பாரு
எண்ணாது போகருக்கு சுருக்கம்பாரு
    யெழிலாகப் பாடிவைத்தேன் நூறதாகும்
நண்ணான வேதமுனி நூலுக்கப்பா
    நலமான ரெண் நூலும் பார்க்கவேண்டும்
விண்ணவே காவியம் பன்னீராயிரத்தில்
    விருப்பமுடன் பாடிவைத்த சூத்திரம் நூறுபாரே.

விளக்கவுரை :


319. சூத்திரமாம் வேதரிடி சொன்னநூலில்
    சுருதியுட குருக்கிடையுந் தன்னைப்பாரு
நேந்தியுடன் சிவானந்தர் சொன்னநூலில்
    நேர்மையுடன் தீட்சாவிதி முன்பின்பாரு
பூர்த்தியாய் காவியமா யிரந்தான்பாரு
    புகழான சூத்திரமும் பத்தும்பாரு
சாத்திரங்கள் தப்பாமல் விதியணியாய்ப்பாரு
    சட்டமுடன் பார்த்தவர்கள் சித்தராமே. 

விளக்கவுரை :


320. சித்தராஞ் சிவஜால மாயிரத்தில்
    தேர்ந்தெடுத்த சூத்திரமும் நூறும்பாரு
வித்தகனாய்ப் பிறந்தாலும் லாபமென்ன
    விதியறியான் முறையறியான் வீணாள்போக்கன்
சுத்தமுடன் சுப்பிரமணியர் சொன்னநீதி
    சூட்சமடா வாதாரக் கருவிபத்து
நித்தமுடன் பார்த்துமல்லோ வழியறிந்து
    நியமத்தில் நிற்பவனே முத்தனாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 311 - 315 of 12000 பாடல்கள்


311. பார்க்கவே கருவூரார் பரிசனந்தான்
    பாண்மைபெற எண்பதுவும் பண்பாய்நோக்கு
தீர்க்கமுடன் என்னூலு பதினாறப்பா
    திறமான பரிசனத்தைப் பாருபாரு
ஏர்க்கவே தூம்பிரமாம் யெந்தன்னூலு
    எழிலான அன்பதுவும் பார்க்கநன்று
சேர்க்கவே யெட்சணியா மைம்பதும்பார்
    சிறப்பான ரோமரிடி கூறும்வாறே.

விளக்கவுரை :


312. வாறான பட்சணியும் பார்த்தபின்பு
    வகுப்பான யெட்சணியும் பாருபாரு
கூறான தன்வந்திரி கியாழம்நூறு
    கொற்றவனே பார்த்தாலே சிந்தனாவாய்
தேறான நந்தீசர் பூசாவிதிதானும்
    தேற்றமுடன் பார்ப்பதுவு மெத்தநன்று
வேறான சட்டமுனி கியாழம்நூறூ
    விருப்பமுடன் பார்த்தாக்கால் காயசித்தி
சாரான தட்சணா மூர்த்திநாயன்
    சட்டமுட ணன்பதுதான் பார்ப்பாய்தானே.

விளக்கவுரை :


313. தானான புலஸ்தியனே சொல்லக்கேளுஞ்
    சார்பான வுன்மந்திரந் திருமந்திரந்தான்
தேனான அன்பதுவும் பார்த்தபின்பு
    தெளிவாக சோதிமா முனிவர்சொன்ன
பானான போகருட சடாட்சரந்தான்
    பட்சமுடன் எண்பதுவும் பார்க்க வேண்டும்
கோனான எண்பதுவும் பார்க்க வேண்டும்
    கொப்பெனவே காவியமாஞ் சுருக்கம்நூறே.

விளக்கவுரை :


314. நூறான போகருட மறப்புசூத்திரம்
    நுட்பமுடன் முப்பத்தி ரெண்டும்பாரு
வானான போகரது குளிகைமார்க்கம்
    வகுப்பணியாய் முப்பத்தி ரெண்டும்பாரு
தேனான போகரது மூலிகைவேதை
    தெளிவாக வறுபத்து நாலுபாரு
மீறான பெரு நூல் காவியந்தானப்பா
    மிக்கான சுருக்கம் பதினஞ்சும்பாரே.

விளக்கவுரை :


315. அஞ்சான வேதமுனி சொன்னநூலாம்
    அழகான காவியமா யிரந்தானாகும்
துஞ்சாத சுருக்கமப்பா இருபதாகும்
    துறைவான சூத்திரமு நூறதாகும்
கஞ்சமுனி தானுரைத்த பெருநூலப்பா
    காசினியி லாயிரமாங் காவியந்தான்
மிஞ்சான சூத்திரந்தான் காவியத்தின்சொச்சம்
    மிக்கான அன்பத்தி யொன்றும்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 306 - 310 of 12000 பாடல்கள்


306. தானான சூதமுனி அன்பத்தொன்று
    தாக்கான பிரம்மமுனி இருபத்தொன்று
கோனான கமலமுனி எண்பத்தொன்று
    கொற்றவனே அஷ்ட சூத்திரந்தான்பாரு
வேணான சட்டமுனி பதானாறும்பார்
    வேகமுடன் தன்வந்திரி பதினாறும்பார்
பானான புலிப்பாணி இருபத்தைந்து
    பாங்குடனே பார்ப்பதுவே மெத்த நன்றே.

விளக்கவுரை :


307. நன்றான புலிப்பாணித் திலர்தமப்பா
    நலமாக விருபத்தி யைந்தும்பாரு
குன்றான சோதிட மைம்பதும்பார்
    குறிப்பான புலிப்பாணி பதினாறும்பார்
தன்றான கோரக்க ரெண்பதும்பார்
    தகையுள்ள வால்மீகர் முப்பத்திரெண்டு
அன்றான வரரிடி அன்பதும்பார்
    அழகான யென்னூலு நூறும்பாரே.

விளக்கவுரை :


308. நூறூன சிவராஜ யோகமப்பா
    நுணுக்கமுள்ள கருவிகர ணாதிதோன்றும்
கூறான மச்சமுனி பாரிசாதங்
    கொப்பெனவே முப்பத்தி ரெண்டுமேபார்
நேரான யென்னூலாம் பதினாறும்பார்
    நேர்மையுடன் உட்கருவு வெளியாய்த்தோன்றும்
பாரான கொங்கணவர் சூத்திரந்தான்
    பாங்குபெற முப்பத்தி ரெண்டும்பாரே.
  
விளக்கவுரை :


309. ரெண்டான கமலமுனி சூத்திரந்தான்
    எழிலான பதினாறு சுருக்கமேபார்
துண்டான சூத்திரமாம் நூறுமேபார்
    துப்புரவாய் சட்டமுனி சூத்திரந்தான்
பண்டான அறுபத்து நாலுமேபார்
    பாங்குபெற தேரையர் நூறும்பாரு
உண்டான அன்பத்தி ரெண்டுசூத்திரம்
    உத்தமனே பார்ப்பதுவும் நன்மையாமே.
       
விளக்கவுரை :


310. ஆமேதான் பஞ்சாட்சரந்தான்
    அப்பனே அன்பது சூத்திரம்பா
தாமேதான் பிரம்மமுனி சிவராஜமப்பா
    தக்கான அறுபத்து நாலுமேபார்
நாமேதான் சொன்னபடி எந்தன்னூலு
    நலமான எமகாண்டம் பதினாறும்பார் 
போமேதான் யூகிமுனி சூத்திரந்தன்
    பொங்கமுடனன்பதுமே பார்த்திடாயே.

விளக்கவுரை :

Powered by Blogger.