அகத்தியர் பன்னிருகாண்டம் 351 - 355 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 351 - 355 of 12000 பாடல்கள்


351. பார்த்தபின்பு திருமூல வர்க்கத்தார்கள்
    பாடிவைத்த மரபுநூ லாயிரந்தான்
நேர்த்தியுடன் ஆயிரத்துச் சொச்சமப்பா
    நேரான சுருக்கமது நூறும்பாரு
பூர்த்தியாய்ப் பதினெண்பேர் ஜாதிவர்க்கம்
    பூட்டினார் திருமூல வர்க்கத்தார்கள்
சாத்திரங்கள் பலநூலுங் கண்டாராய்ந்து
    சட்டமுடன் நூல்தனையே பாடினாரே.

விளக்கவுரை :


352. பாடினார் பதினெண்பேர் சித்தர்தாமும்
    பாருலகில் சமாதியது பூண்டவண்ணம்
தேடியே பார்க்கும்மந்தக் காலந்தன்னில்
    தெளிவாக போகரே ழாயிரத்தில்
கூடியே பதினெண்பேர் சமாதியெல்லாம்
    கொப்பெனவே போக ரேழாயிரத்தில்
நாடியே காலாங்கி நாதர்தம்மால்
    நயமுடனே பாடிவைத்தார் போகர்தாமே.

விளக்கவுரை :


353. தாமான போகரே ழாயிரந்தான்
    தாரணியில் பெருநூலாம் மற்றொன்றில்லை
பூமான மானதொரு காலாங்கிநாதர்
    புண்ணியனார் வரம்பெற்ற போகநாதர்
நேமமுடன் தானுரைத்த சத்தகாண்டம்
    நேர்மையுடன் வையகத்தில் பெருநூலப்பா
ஆமெனவே கண்டவர்கள் யோகவானாம்
    அவனியிலே யவனுமொரு சித்தனாமே.

விளக்கவுரை :


354. சித்தனா மவர் நூல்போல் மறுநூலில்லை
    செகதலத்தில் பதினெண்பேர் சொன்னதில்லை
சத்தமுடன் காண்டமது யேழாயிரத்தில்
    சாற்றினார் லோக வதிசயங்களெல்லாம்
புத்தியுடன் போகரிடி யனேகநூல்கள்
    புகழாகப் பாடிவைத்தார் சீஷருக்கு
முத்தியுடன் பெருநூ லேழாயிரந்தான்
    முதன்மையாம் நூலென்று சொல்லலாமே.

விளக்கவுரை :


355. சொல்லலாம் அந்நூலுக் கெந்நூலப்பா
    தோறாத பெருநூல் காவியந்தானாகும்
வெல்லவே பனிரெண்டு காண்டமப்பா
    விருப்பமுடன் பாடிவைத்தே னின்னூல்தானும்
பல்லவே பன்னீராயிரக் காவியந்தான்
    புகட்டினேன் லோகத்தின் மார்க்கமெல்லாம்
நல்லதொரு சிவராச யோகிமார்கள்
    நண்புபெற யென்னூலைப் போற்றுவாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar