அகத்தியர் பன்னிருகாண்டம் 181 - 185 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 181 - 185 of 12000 பாடல்கள்


181. செல்லுகையில் மனோன்மணியாள் முன்னேநிற்பாள்
    சுந்தரம் போலுந்தனுக்கு உருவந்தோன்றும்
வெல்லவே யம்பாளின் பாதம்தொட்டு
    விருப்பமுட னஞ்சலிகள் மிகவுஞ்செய்து
கொல்லவே யமனுக்கு விடங்கொடாமல்
    கொப்பெனவே முப்பூவைக் கண்டுதேறு
புல்லவே முப்பூவைக் கண்டபோது
    புகழான வஷ்டசித்தி கைக்குள்ளாச்சே.

விளக்கவுரை :


182. ஆச்சப்பா புலஸ்தியனே யின்னங்கேளு
    ஆகாகா நாதாக்கள் மார்க்கஞ்சொல்வேன்
பேச்சுமுன்னே முப்பூவைக் சொல்லிசொல்லி
    ........................காட்டகத்தைக் கொண்டுசென்று
மாச்சலுடன் முப்பூவைப் ................சொல்லி
    மறையநின்று பட்சமுடன் வார்த்தைபேசி
ஏச்சியே மு.............ன் கதிரையெல்லாம்
    யெழிலாக வாரியல்லோ போவார்தாமே.

விளக்கவுரை :


183. போவாரே சித்தர்முனி ரிடிகள்தாமும்
    பொங்கமுடனுந்தனுடன் நேதஞ்செய்து
சாவார்போல் தாமிருந்து வேடம்பூண்டு
    தாரணி வொன்றறியாச் சித்தன்போல
ஆவலுடன் காத்திருந்து கதைகள்பேசி
    அன்பாக யேவலுக்கு ஆளதாக்கி
நாவதனில் பிசகாத வார்த்தைகூறி
    ...............நன்மையுடன் வழிபேசி யேகுவாரே.

விளக்கவுரை :


184. ஏகவே சித்தருட மோசங்கண்டு
    யெழிலுடனே யவர்வலையிற் சிக்கவேண்டாம்
பாகமுடன் முன்சொன்ன பதத்தைப்போல
    பட்சமுடன் தானெடுத்து விதியறிந்து
சோகமுடன் வழலையது பூர்க்கும்போது
    சுத்தமுடன் நடுச்சாம வேளைதன்னில்
ஆகமங்கள் சொன்னபடி முறைதப்பாமல்
    அப்பனே முப்பூவை யெடுக்கநன்றே.   

விளக்கவுரை :


185. நன்றான முப்பூவை யெடுக்கும்போது
    நாதாந்த சித்தர்களு...................
.... ..... ...... .......மனதிற்பூண்டு
    பட்சமுடன் ...............யெடுக்கும்போது
தன்றான சித்தர்களு மொதிங்கிநிற்பார்
    சார்பான வழலைதனை யெடுத்துக்கொண்டு
பன்றான சீசாவில் பதனம்பண்ணு
    பக்குவமாய்ச் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar