அகத்தியர் பன்னிருகாண்டம் 406 - 410 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 406 - 410 of 12000 பாடல்கள்


406. சொல்லவே டில்லிக்குக் குடபாகத்தில்
    சொற்பெரிய தேவதாஸ் தலமொன்றுண்டு
புல்லவே தடாகமென்ற பொய்கையுண்டு
    புகழான மஞ்சள் தாமரையுமுண்டு
மல்லான மனவரஞ் சிதமுமுண்டு
    மகத்தான தேவதா புட்பமுண்டு
கல்லான கடகமது பொய்கைதன்னில்
    கண்டவர்க ளாயிருந்தான் யில்லைதானே.

விளக்கவுரை :


407. இல்லையே தேவதாஸ் தலத்திலப்பா
    எழிலான புலஸ்தியனே சொல்வேன்பாரு
கல்லையே கணியாக்கி கவுண்டுசெய்து
    கடிதான வாலயமாம் நடுமையத்தில்
வில்லைப்போல் நாணியது பூட்டியேதான்
    வீரான சூத்திரமாந் தானமைத்து
எல்லைக்குக் காவலாய் மதியம்பூண்டு
    எழிலாகத் தான்சமைந்து யிருக்கும்பாரே.

விளக்கவுரை :


408. பாரப்பா சித்தருள்ள தேவஸ்தானம்
    பளிங்கான குண்டுக்கல் பாணமுண்டு
மேரப்பா நடுமையந் தன்னிலப்பா
    மேலான சித்தருட கைமறைப்பு
ஆரப்பா யறிவார்க ளிந்தப்போக்கு
    அப்பனே சத்துரு சங்காரப்போக்கு
சேரப்பா ராஜாதி ராஜர்தம்மை
    செயிக்கின்ற குண்டுக்கல் பாணமாமே.

விளக்கவுரை :


409. பாணமாங் கோட்டைக்குள் ளிருக்குங்குண்டு
    பாங்கான தேவதாஸ் தலத்தின்குண்டு
மாணவே வையகத்து மாண்பர்தாமும்
    மகத்தான தேவதாஸ் தலத்தின்நேர்மை
காணவே வந்தவரைக் கொல்லுங்குண்டு
    கருவான சித்தரென்றா லழைக்குங்குண்டு
தோணவே சித்தாதி முனிவர்தாமும்
    தோற்றமுடன் தானிருக்குங் கோயிலாமே.

விளக்கவுரை :


410. கோயிலாம் தேவதாஸ் தலமுமாகும்
    குறிப்பான கோட்டையது சொல்லொண்ணாது
வாயிலாம் ராஜாஜி ராஜர்மெச்சும்
    வகுப்பான கோயிலுள்ளே சித்தர்கூட்டம்
பேயான ராட்சத பூதம்யாவும்
    பேரான கோட்டைக்குக் காவலுண்டு
தாயான மனோன்மணியாள் வீற்றிருக்கும்
    தகைமையுள்ள கோட்டையென்று செப்பலாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar