அகத்தியர் பன்னிருகாண்டம் 6 - 10 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 6 - 10 of 12000 பாடல்கள்



agathiyar-panniru-kandam

6. வந்தித்தேன் கோடிமுறை அஞ்சலித்து
    வாகுடனே அவா்மனதுக்கிசையவென்றூ
சிந்தித்தேன் பலகாலும் நாதா்தம்மை
    சிறப்புடனே நவகோ டிரிடிகள்மெச்ச
தொந்தித்த யான்செய்த பெருநூல்தன்னை
    தொல்லூலகில் சித்தா் முனிமாந்தா்யாவும்
நிந்தித்த தோஷங்கள் கூறொண்ணாதூ
    நீணிலத்தில் சாபமதை நீக்கவென்ற.

விளக்கவுரை :

7. நீக்கவென்றூ கேட்கையிலே அசுவனிதாமும்
    நிட்சயமா யெந்தனூக்கு வுண்மைகூறி
அக்கமுடன் குகைக்குள் யேயிருந்த நூலை
    அவனியிலே யாவருக்கும் போதித்தேதான்
தாக்கமுடன் சதாகாலந் தரணிமீதில்
    சதகோடி யுகவருஷம் அழியாவென்று
நோக்கமுடன் வரமொன்றுங் கொடுத்தாரப்பா
    நுணுக்கமுடன் பாரினிலே நிறைத்திட்டேனே.

விளக்கவுரை :

8. நிறைத்திட்ட நூலதுதான் குருநூலாகும்
    நீடாழி யுலகமெல்லாம் இதற்குள்ளாச்சு
வறைத்திட்டேன் மூன்றுலட்சங் கிரந்தத்தன்னை
    வாகுடனே ஆராய்ந்து உளவுகண்டு
பறைத்திட்ட பலுநுலும் பார்த்தாராய்ந்து
    பாரினிலே சிவயோகி மாந்தருக்கு
மறைத்திட்ட சாத்திரத்தின் மார்க்கமெல்லாம்
    மதிப்புடனே புவியோர்க்கு விரித்திட்டேன்.

விளக்கவுரை :

9. விரித்திட்டேன் மூன்றுலட்சங் கிரந்தந்தன்னை
    விவரமுடன் பெருநுலாய்க் குருநூலாக
குரித்திட்டேன் சூத்திரங்கள் கருக்கிடையாவும்
    கூறினேன் கெடுக்கிடைக ளனந்தங்கண்டேன்
தரித்திட்டேன் பெருநுல்கள் சிறுநுல்கள்யாவும்
    தகமையுடன் ஒன்றுமுதல் பதினாறுமாகும்
முரித்திட்டைன் கோர்வைகளு மனந்தங்கோடி
    முசியாமல் பார்த்துமல்லோ மொழிந்திட்டேனே.

விளக்கவுரை :

10. மொழிந்திச்டேன் யான் செய்த நூலங்கண்டு
            முதன்மையுடன் பதினெண்பேர் நூலும்பார்த்து
வழிந்திட்டேன் நவகோடிரிகள் நூலும்
             வண்மையுடன் கண்டுமே மிகவராய்ந்து
வழிந்திட்ட நாற்பத்தி யெட்டுபேர்கள்
             அன்புடனே செய்ததொரு நூலையெல்லாம்
பழிந்திட்ட சாபமதுவும் நீக்கியேல்லோ
             பாரினிலே பாடிவிட்டேன் காண்டந்தானே,

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar