அகத்தியர் பன்னிருகாண்டம் 96 - 100 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 96 - 100 of 12000 பாடல்கள்



96. வாழவென்றால் முப்பூவை அறியவேண்டும்
    வையகத்தில் முப்பூவை அறியாவிட்டால்
 தாழவே சாத்திரங்கள் கற்றுமென்ன
    சதகோடி சூரியர்போ லிருந்துமென்ன
வீழவே முப்பூவைக் காணாப்பேர்க்கு
    விருதாவாய்ச் சாத்திரங்கள் பொய்யாப்போகும்
ஆழவே முப்புநூ லறியவேண்டும்
    அறியாட்டால் யோகமெல்லாம் பாழாய்ப்போமே.
         
விளக்கவுரை :


97. போமேதான் முப்பினிடனூலைப்பார்த்து
    பொலிவான முதலேடுங் கடையும்பார்த்து
நாமேதான் சொன்னபடி முப்புமார்க்கம்
    நாதாக்கள் செய்தமுறை ப........பார்த்து
தாமேதான் வைரவர்கள் நூல்கள் சொன்ன
    தகைமையுள்ள....... கருவை ......................
வேமேதான் மறைபொருளில் வினயங்
    வேதத்.... ..... ..... ........ ........ ...................

விளக்கவுரை :


98. உன்னவே நூலினுட விவரஞ்சொல்வேன்
    உத்தமனே புலஸ்தியனே செப்பக்கேளும்
பன்னவே சதுர்காண்டம் நாலாயிரந்தான்
    பாடிவைத்தேன் பற்பமது வைந்நூறாகும்
சொன்னேனே செந்தூரம் முன்னூறாகும்
    சொர்ணமென்ற திராவகமு மெண்ணூறாகும்
மன்னேகேள் காவியம் ஆயிரத்தைந்நூறாகும்
    மகத்தான நசகாண்டம் முன்னூறாமே.

விளக்கவுரை :


99. ஆமேதான் அசுவகாண்ட மைநூறாகும்
    அப்பனே கலைக்கியான மாயிரந்தானாகும்
தாமேதான் பூரணமும் நா நூறாகும்
    தாக்கான கருக்கிடையிரு நூறாகும்
நாமேதான் பூரண காவியந்தானாகும்
    நலமான ஆயிரத்துச் சொச்சமப்பா
போமேதான் தைலமது வை நூறாகும்
    பொங்கமுடன் சரக்குசுத்தி முந்நூறுதானே.

விளக்கவுரை :


100. தானான கருமகாண்டம் முந்நூறாகும்
    தகைமையுள்ள வல்லாதியை நூறாகும்
கோனான குருசொன்ன பாண்டுவைப்பு
    கொற்றவனே அறு நூறு யென்னலாகும்
தேனான ஜெனகருக்கு வுபதேசிக்க
    தெளிவான வறு நூறு வொன்றேயாகும்
பானான எட்சணியு மிருனூறாகும்
    பாங்கான சூத்திரமும் முந்நூற்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar