அகத்தியர் பன்னிருகாண்டம் 286 - 290 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 286 - 290 of 12000 பாடல்கள்


286. நன்றான புலஸ்தியனே இன்னங்கேளு
    நாதாந்த சித்தொளிவின் நூல்களெல்லாம்
குன்றான மலைபோல இருக்குதப்பா
    கூறவுந்தான் என்னாலு முடியாதல்லோ
என்றாலும் எந்தனால் அறிந்தமட்டும்
    எழிலாக எடுத்துரைப்பேன் இன்னங்கேளு
பன்றான பலகோடி சாத்திரங்கள்
    பாலித்தார் பாரினிலே உண்மையாமே.

விளக்கவுரை :


287. உண்மையாம் கொங்கணவர் காண்டம்பார்
    உத்தமனே ஐநூறு தானும்பாரு
நண்மையாம் செகசால மெண்ணூறும்பார்
    நலமான நாற்காண்ட சாலம்பாரு
திண்மையாற் தன்வந்திரி ஆயிரம்பாரு
    திறமான நிகண்டு முன்னூறும்பாரு
வண்மையாம் புலிப்பாணி ஐநூம்பாரு
    வாகான சாலமது முன்னூறுபாரே.


விளக்கவுரை :


288. பார்ப்பதற்கு சிவஜால முன்னூறும்பார்
    பாங்கான பூரணம் ஆயிரந்தான்பாரு
சேர்க்கவே வொட்டியமா யிரந்தான்பாரு
    சிறப்பான சல்லியமுங் கூடப்பாரு
ஏர்க்கவே பஞ்சகாவியந்தான் பாரு
    எழிலான சம்பூர்ண காவியம்பார்
மார்க்கமுடன் பிரணவமாம் லட்சணகாவியந்தான்
    மயங்காமல் சிறுகாவிய முழுதும்பாரே.

விளக்கவுரை :


289. முழுதுமே பார்க்கையிலே மோசமில்லை
    மூதுலகி லின்னம்வெகு நூல்கள்சொல்வேன்
பழுதுபடாப் பெருநூல்கள் பார்த்தபின்பு
    பாகமுடன் சிறு நூல்கள் பார்க்கவேண்டும்
வழுதுறவே சிறுநூலில் அனந்தஞ்சொல்வேன்
    வாகான சூத்திரங்கள் மிகவுஞ்சொல்வேன்
தொழுகைபட சூத்திரங்கள் கோடாகோடி
    தொல்லுலகில் கண்டமட்டுஞ் சொல்வேனே.

விளக்கவுரை :


290. சொல்லுவேன் சுப்பிரமணியர் முப்பத்திரெண்டு
    சொச்சமாங் கொங்கணவர் எட்டும்பாரு
வெல்லவே ராமதேவர் பத்தும்பாரு
    வேதாந்த வழலை சூத்திரந்தான்பாரு
கொல்லவே சுடலை சூத்திரந்தான்பாரு
    கொற்றவனே சஞ்சீவி யெண்ணைபாரு
புல்லவே நந்தி பதினாறும்பாரு
    புகழான சித்தாதி யெண்ணைபாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar