அகத்தியர் பன்னிருகாண்டம் 146 - 150 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 146 - 150 of 12000 பாடல்கள்


146. காணவே சிவயோகம் வேடம்பூண்டு
    கனமான யோகத்தில் வுறுதிபூண்டு
பூணவே சிவயோக வேஷ்டிதண்டு
    புகழான மாத்திரைக்கோல் பிரம்புதானும்
வேணபடி ருத்திராட்ச மாலைகையில்
    விருப்பமுடன் றானணிந்து லாடமிதில்
தோணவே தளமாக பூசிக்கொண்டு
    தொல்லுலகில் பாசமற்று இருப்பார்தாமே.

விளக்கவுரை :


147. இருப்பாரே லோகபரி பூரணராக
    எழிலாகத் தானிருந்து நிர்த்தமாகி
பொருப்புடனே தபயோகிக் குறுதியாகிப்
    பொங்கமுடன் தட்சணா மூர்த்தியாக
வெருப்பகவு மகத்துவராய் யோகவானாய்
    மிக்கான சிவயோகி வேடம்கண்டு
துருப்புநிகர் தனைநிகர்த்த மெய்யனாகி
    துன்ப சாகரத்தைவிட்டு துயில்வார்தாமே.
          
விளக்கவுரை :


148. தானான பண்டிதற்கு நிறையேதென்றால்
    சாற்றுகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
நாமான புலஸ்தியனே மைந்தாபாரு
          நலமான பண்டிதனும் யோகவானாய்
காமான பரிசுத்த வாளனாகக்
          காசினியி லிருந்துமேயோகம் பார்த்து
பாமான மானதொரு கருமானத்தைப்
          பட்சமுடன் கண்டறிந்து பாலிப்பானே.

விளக்கவுரை :


149. பாலிப்பான் சிவயோகம் பூண்டுகொண்டு
    பாரினிலே வயித்தியங்கள் செய்வதற்கு
வாலிபமு மூப்பகற்றிப் புத்திவானாய்
    வல்லமையில்...................டியினா லறியவானாய்
மூலியுட வளமைகளுங் கண்டாராய்ந்து
    மூப்பகற்றும் மருந்துவகை தெளியவல்ல
சாலியனா யிருந்தாலுங் குற்றமில்லை
    சாற்புடனே புத்திவான் வயித்தியனாமே.

விளக்கவுரை :


150. வயித்தியனில் சிறந்ததோர் பேரும்பெற்று
    வானுலகத் தேவர்கட்கும் வயித்தியவானாய்
சைத்திய நோயதனை யகற்றும் புனிதனாக
    சர்வத்திராள் மெய்ச்சுவதற்கு பான்மைவானாய்
பைத்திய ரோகங்கள் தனை தரணிமீது
    பறப்பதற்கு வுறுதியுள்ள பாலனாக
நைத்தியமும் பூசையுட மார்க்கவானாய்
    நானிலத்தி லிருப்பவனே வயித்தியனாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar