அகத்தியர் பன்னிருகாண்டம் 261 - 265 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 261 - 265 of 12000 பாடல்கள்


261. முன்னின்ற  வகஸ்தியரை வேலர்பார்த்து
    மோனமென்ற ஞானவுப தேசந்தன்னை
தன்மனையில் தேடிவந்த அகஸ்தியர்க்குத்
       தாஷ்டிகமாய் தானுரைப்பார் வேலர்தாமும்
கன்மவினை முன்னகற்றி கர்த்தாதானும்
    கைலகிரி நாதரைத் தொழுதுபோற்றி
தன்மனது யெந்நாளும் பூணவேதான்
    சட்டமுடன் வாக்கதுவு மளித்தார்தாமே.

விளக்கவுரை :


262. தாமான வடிவேலர் முருகன்றானும்
    சாற்றலுற்றா ரகஸ்தியர்க்கு மின்னஞ்சொல்வேன்
நாமான யிதிகாச புராணமெல்லாம்
    நலமுடனே கற்றறிந்த வகஸ்தியர்க்கு
கோமான்போல் தென்பொதிகை வீற்றிருந்த
    குருபரனாம் அகஸ்தியனார் முனிவருக்கு
பூமாது மனோன்மணியாள் கடாட்சத்தாலே
           புகழுடனே உபதேசஞ் சொன்னார்பாரே.

விளக்கவுரை :


263. பரேதான் நாலுயுக அதிசயங்கள்
    பாலகனே எந்தனுக்குச் சொன்னாரப்பா
நேரேதான் துவாபர யுகத்தில்தானும்
    நேரான யெந்தனுக்குச் சமைந்தசாபம்
கூராகத் தீர்த்தத்தின் கரையினோரம்
         குறிப்பான சடாயுவென்ற பட்சிதன்னால்
வீரமுடன் நேரிட்ட சாபந்தன்னை
    விருப்பமுட னெந்தனுக்கு தீர்த்தார்காணே.

விளக்கவுரை :


264. காணவே சடாயுவின்றன் சாபந்தன்னை
    காசினியில் தீர்த்ததோரு கதைகள்தன்னை
பூணவே கலியுகத்தில் சித்துதாமும்
    புகழாய்ச் சாத்திரத்தில் சொல்லவில்லை
வேணவே யான்றானும் யிந்தநூலில்
    விபரமுடன் சொல்லிவிட்டே னுந்தனுக்காய்
வாணர்முதல் யின்னூலைக் கண்டிட்டாலும்
    வளமான சாபமதை யறியார்தாமே.
            
விளக்கவுரை :


265. அறியாதே யிந்நூலில் தோஷஞ்சொல்லி
        வப்பனே யநேகம்பேர் வரமும்பெற்றார்
குறிபோலே வடிவேலர் உபதேசத்தைக்
    கொற்றவனே புலஸ்தியனே அடியேன்றானும்
முறிபடவே ஞானோப தேசந்தன்னை
    முதன்மையாய் எந்தனுக்கு உபதேசித்தார்
நெறியுடனே யானுமுப தேசம்பெற்று
    நேர்மையுடன் வெகுகால மிருந்தேன்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar