அகத்தியர் பன்னிருகாண்டம் 356 - 360 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 356 - 360 of 12000 பாடல்கள்


356. போற்றுவார் பதினெண்பேர் சிவராசயோகி
    பொங்கமுடன் பாடிவைத்த நூலையெல்லாம்
மார்க்கமுடன் கண்டுமிக வாராய்ந்தேதான்
    மானிலத்தில் மயக்கமது தெளியாமற்றான்
தீர்க்கமுடன் யென்னூலைப் பார்த்தபேர்கள்
    திறமான நூலிதுதான் பெருநூலென்பார்
ஆற்கமுடன் யெனதைய்ய ரசுவனியாந்தேவர்
    அவருடைய புசபலந்தா லறைந்திட்டேன்.

விளக்கவுரை :


357. அறையவே பெருநூல் காவியத்திலப்பா
    அப்பனே யான்சொன்ன முறைகளெல்லாம்
குறையாமல் செய்துமல்லோ முடிப்பாரானால்
    குவலயத்தி லவருமொரு சித்தனாவார்
முறைபோல செய்பவனே சிவராசயோகி
    மூதுலகில் கறைகண்ட சித்தனப்பா
திறைகடலுஞ் சத்த சாகரமுமான
    திறமான காண்டமிது பெருநூலாமே.

விளக்கவுரை :


358. ஆமேதா னின்னூலி லடக்கஞ்சொல்வோம்
    அப்பனே யஷ்டசித்து மிதிலடக்கம்
நாமேதான் சொன்னபடி கருவனந்தம்
    நாதாக்கள் கைமறைப்பு யனந்தமுண்டு
போமெனவே கூடுவிட்டுக் கூடுபாய்தல்
    பொருங்கமுடன் கருவிகர ணாதியெல்லாம்
தாமேதான் சிவயோக மிதிலேதோன்றும்
    சட்டமுடன் அஷ்டமா சித்துபாரே.

விளக்கவுரை :


359. பார்க்கையிலே மோகனமு மிதிலடக்கம்
    பாங்கான பேதனமு மிதிலேதோயும்
ஏர்க்கவே வித்வேஷணம் இதிலேகாட்டும்
    யெழிலான வுச்சாடன மிதிலடக்கம்
தீர்க்கவே வசியமுத லாக்குருஷணமாகும்
    திறமான மாரணமும் ஸ்தம்பனமுமாகும்    
மார்க்கமுடன் ஞானமுதல் யோகமிதுபாரும்
    மகத்தான கிரியையெல்லா மிதறகுள்ளாச்சே.

விளக்கவுரை :


360. ஆச்சப்பா வாதமுதல் வயித்தியபாகம்
    அருமையுள்ள சாலமுதல் சிமிட்டுப்போக்கு
நீச்சப்பா கருவித்தை யனேகங்கோடி
    நிலையான கைமசக்கு மாதுதந்திரம்
காச்சப்பா சொக்குபொடி பிரணவமந்திரம்
    கருவான நோக்குவித்தை குறளிசாலம்
மாச்சலென்ற மூலியிட வசியப்போக்கு
    மகத்தான டமகரங்கள் காணலாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar