அகத்தியர் பன்னிருகாண்டம் 201 - 205 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 201 - 205 of 12000 பாடல்கள்


201. பாரேதான் வேதைமுகம் இன்னஞ்சொல்வேன்
    பாலகனே புலஸ்தியா சொல்லக்கேளீர்
நேரேதான் முன்சொன்ன குருவாமுப்பை
    நெடிதாந ரவிதனிலே பத்துக்கொன்று
சீரேதான் கொடுத்துருக்கக் களங்கமாகும்
    சிறப்பான களங்கமதை எடுத்துக்கொண்டு
தீரேதான் செப்புதனை ஊதிப்போடு
    திறமான செம்பதும் ஏமமாமே.

விளக்கவுரை :


202. எமமென்ற செம்பதவுந் தங்கச்செம்பாம்
    எளிதான பொன்னதனை எடுத்துக்கொண்டு
வாமமென்ற பொன்னதனை ஆறுமாற்று
    வகையுடனே தானுருக்கி குருவொன்றீய
நேமமென்ற பொன்னதுவு மெட்டேகாலம்
    நேர்மையுடன் ஆணிக்குக் குறையாதப்பா
ஏமமென்ற பொன்னதுவும் மாற்றுமெத்த
    எழிலான பசுமையது சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


203. சொல்லவென்றால் நாவில்லைப் பாவுமில்லை
    துரைராஜ சுந்தரர்க்கு வாய்க்கும்பாரு
வெல்லவே வறுமைவருங் காலத்தன்னில்
    மேதினியில் மாறியுண்ண வேதையாச்சு
புல்லவே இவ்வேதை பூதலத்தில்
    புகழுடனே யார்செய்வாள் சித்தர்தாமும்
நல்லதொரு நாதாக்கள் முனிவர்தாமும்
    நயம்பெறவே தாமுறைத்த வேதையாமே.

விளக்கவுரை :


204. வேதையா மின்னதொரு மார்க்கம்பாரு
    வேதாந்தத் தாயினது அருளினாலே
போதையாம் அசுவனியின் கடாட்சத்தாலும்
    பொலிவான சித்தர்முனி  கிருபையாலும்
பாதையாஞ் சமுசாரிக் கானபாதை
    பாரினிலே சொல்லுகிறேன் பண்பாய்க்கேளும்
சூதையாம் கவுனமென்ற சூதந்தன்னை
    துப்புரவாய் மூசையிலே களஞ்சிவாரே.

விளக்கவுரை :


205. வாரேதான் களஞ்சிரசந் தன்னைத்தானும்
    வண்மையுடன் முன்சொன்ன முப்புதன்னை
நேரேதான் சூதமிடை களஞ்சிசுண்ணம்
    நேர்புடனே தான்போட்டுக் கரிதான்கொட்டி
சீரேதான் நெருப்பென்ற அனல்தான்தாக்க
    சிறப்பான சூதமது வெண்மையாகும்
கூரேதான் வெண்ணையது பதனம்பண்ணு
    கொற்றவனே மேல்போக்குக் கூறுவேனே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar