அகத்தியர் பன்னிருகாண்டம் 36 - 40 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 36 - 40 of 12000  பாடல்கள்


36. காணவென்று மெய்ஞ்ஞானம் வரவேவேண்டும்
    கருவான சிவசக்தி காணவேண்டும்
தோணவே மகாரத்தில் குண்டலியைப்போற்று
    தொந்தமுடன் மகாரத்தின் பொருளைப்போற்றி
வேணவே யைங்காயப் பொருளேயுன்னி
    விண்ணுலகில் சிவபதத்தை மனதிலுன்னி
பூணவே வோங்காராச் சத்தங்கண்டு
    புகழான சத்திநீ மாயம்பாரே.

விளக்கவுரை :


37. பாரேதான் பஞ்சகர்த்தா ளாடுங்கூத்து
    பாங்கான வாறாதார..................கனைநோக்கி
நேரேதான் தொண்ணூற்று வாறுகொச்சம்
    நேர்மையுள்ள தத்துவங்கள் காணவேண்டும்
சீரேதான் முப்பூவைக் காணவேண்டும்
    சிறப்பான பொதிகைமுனி சொன்னேனப்பா
ஆரேதா னுந்தமக்குச் சொல்வாரப்பா
    அப்பனே பட்சம்வைத்துச் சொன்னேன்பாரே.

விளக்கவுரை :


38. சொன்னேனே சஞ்சீவி முதல்கள்யாவும்
    தோற்றமுடன் நாதவித்தை யறியச்சொன்னேன்
மன்னேகேள் திரிமூர்த்தி யானபேர்கள்
    மகத்தான ருத்திரனும் விஷ்ணுபிரம்மா
பன்னவே கமலமென்ற பீடந்தன்னைப்
    பாருலகில் அறியாத சித்துயென்ன
அன்னேதான் நடுமூலம் உள்மூலந்தான்
    அப்பனெ மேல்மூல மென்னலாமே.

விளக்கவுரை :


39. என்னவே அமுர்தமென்ற காட்டைக்கண்டு
    யெழிலான வாலைதனைப் பூசித்தேதான்
பன்னவே நகாரமுடன் வகாரசித்திப்
    பரிவுடனே சிகாரமென்ற அகாரந்தானும்
முன்னவே மகாரமென்று மூலவட்டம்
    முப்பாழுக் கப்பாலு மறியவேண்டும்
சொன்னபடி தப்பாது புலஸ்தியாகேள்
    சொரூபமென்ற பிண்டமதை யறியவென்ற.

விளக்கவுரை :


40. அறியவே பிண்டமென்ற நாதவிந்தை
    அப்பனே வஷ்டாங்கந் தன்னிற்றானும்
முறியவே யாதியந்த முடிவுகண்டு
    முப்பான முப்பூவைக் காணவேண்டும்
குறிபொருளாய் ஆராய்ந்து குவலயத்தில்
    கூர்மையுடன்............தேகத்தின் நிலையைக்கண்டு
வெறிபடவே உலகநடை காணவேண்டும்
    வருமையுட னிருந்தவர்க் கொன்றில்லைதானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar