அகத்தியர் பன்னிருகாண்டம் 301 - 305 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 301 - 305 of 12000 பாடல்கள்


301. பாரப்பா என்சூத்திரம் பத்தும்பாரு
    பாங்கான கொங்கணவர் முப்புபாரு
சீரப்பா மதிவெண்பா வகாரம்பாரு
    சிறப்பான மதிவெண்பா நூறும்பாரு
கூரப்பா மூலவர்க்கம் பத்தும்பாரு
    குறிப்பான கக்கிஷமும் பத்தும்பாரு
சேரப்பா யெந்தனது சூத்திரந்தான் 
    திறமான அன்பதுதான் பார்க்கநன்றே.

விளக்கவுரை :


302. நன்றான வேதாந்த சூத்திரந்தான்
    நலமான பெருங்குழம்பு யிருபத்தைந்து
குன்றான சொச்ச சூத்திரந்தானப்பா
    கொற்றவனே அன்பத்தி ஒன்றும்பாரு
தன்றான பதினாறு காரசாரம்
    தகைமையுடன் பார்ப்பதுவே மெத்தநன்று
பன்றான வாசமுனி சூத்திரந்தான்
    பாங்குபெற எழுபதுந்தான் பார்த்திடாயே.

விளக்கவுரை :


303. பார்த்திடவே போதமென்ற சூத்திரந்தான்
    பளிங்குபோல் முப்பத்தி ரெண்டும்பாரு
சேர்த்திடவே ஞான முப்பத்திரெண்டும்
    செவ்வையுடன் பார்ப்பதுவே மெத்தநன்று
பூர்த்தியாய்க் கொங்கணவர் சூத்திரந்தான்
    புகழான முப்பத்தி ரெண்டும்பாரு
நேர்த்தியாய்க் கொங்கணவர் சரக்குவைப்பு
    நேர்மையுடன் நூறுகவி பார்க்கநன்றே.
           
விளக்கவுரை :


304. நன்றான கொங்கணவர் காயகற்பம்
    நலமுடனே இருபத்தி யைந்தும்பாரு
குன்றான கருவூரார் நொண்டியப்பா
    கொற்றவனேழ் நூறுமது பார்க்கவேண்டும்
சென்றதொரு சுந்தரா நந்தர்தாமும்
    சிறப்பான நூறுகவி பின்னும்பாரு
வென்றிடவென் சூத்திரமு மைம்பதுபார்
    வெற்றியுடன் செயகண்டி நூறும்பாரே.

விளக்கவுரை :


305. நூறான சிவவாக்கியர் நொண்டிபத்து
    நுட்பமுள்ள நந்திபதி னாறும்பாரு
கூறான யென்தன்னூல் பதினாறும்பார்
    குறிப்புடனே வாசியது யெட்டும்பாரு
தேறவே யூர்வசி பதினாறும்பார்
    தெளிவான வாசமுனி யெட்டும்பாரு
மீறவே கொங்கணவ ரிருபத்தைந்து
    மேன்மையுள்ள முப்பூவும் பதினாறுதானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar