அகத்தியர் பன்னிருகாண்டம் 291 - 295 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 291 - 295 of 12000 பாடல்கள்


291. எண்ணையாம் பதினாறு சூத்திரம்பாரு
    யெழிலான கருணை வாகடமும்பாரு
திண்ணமுடன் பால வாகடந்தானப்பா
    சூத்திரமாம் இருபதும் முன்னேபாரு
தண்ணமுடன் காவியமாஞ் சுருக்கந்தானும்
    தகைமையுடன் பதினாறும் பார்க்கவேண்டும்
வண்ணமுடன் சோதிமணிக் குளிகையெட்டு
    வாகான திருமந்திர மெட்டுமாமே.

விளக்கவுரை :


292. எட்டான திருமந்திர மஞ்சும்பாரு
    யெழிலான ரோமரிடி பதினாறுபார்
கட்டான யென்நூலில் பதினாறுதன்னில்
    கருவான கெந்தகத்தின் தைலம்பாரு
திட்டான சரக்குசுத்தி முழுதும்பாரு
    திறமான ராசாங்க நாடிபாரு
வட்டான அகஸ்தியர் ஞானமப்பா
    வளமுடனே பதினாறு பார்ப்பாய்தானே.

விளக்கவுரை :


293. பார்க்கவே சூதமுனி நாடிபாரு
    பாங்கான ஞானமது எட்டும்பாரு
ஏர்க்கவே சுருக்கம் பன்னிரண்டும்பாரு
    எழிலான வாத சூத்திரந்தான்பாரு
ஆர்க்கவே திருமூலர் இருபதப்பா
    அப்பனே உபதேசம் பாருபாரு
ஊக்கமுடன் அகஸ்தியனார் முப்புபாரு
    முப்பதிலே முப்பூவின் வழிசொன்னேனே.

விளக்கவுரை :


294. சொன்னேனே தட்சணா மூர்த்தியைப்பார்
    சுத்தமுள்ள வகாரமது பத்தும்பாரு
முன்றான தீட்சையது பதினாறும்பார்
    முதலான சுருக்கமது வொன்றும்பாரு
பன்னவே கொங்கணவர் முக்காண்டந்தான்
    பாகமுடன் கண்டறிவாய் புலத்தியா நீ
வின்னமில்லா முக்காண்டத் திருமந்திரந்தான்
    வேகமுடன் பார்ப்பதுதான் மெத்தநன்றே.

விளக்கவுரை :


295. நன்றான பதினைந்து சூத்திரந்தான்
    நலமுடனே பூசாவிதி பார்க்கவேண்டும்
குன்றான் ரோமரிடி சூத்திரங்கள்
    குறையாம லிருபதுதான் பார்க்கவேண்டும்
நன்றுள்ள பதினாறு வகாரசூத்திரம்
    தாக்குடனே கொங்கணவர் குளிகையப்பா
வென்றிடவே யெட்டுமது பார்க்கவேண்டும்
    வேதாந்த நந்தீசர் குளிகையெட்டே.
    
விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar