அகத்தியர் பன்னிருகாண்டம் 276 - 280 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 276 - 280 of 12000 பாடல்கள்


276. தாமான நசகாண்டங் கண்டபின்பு
    சார்பான அசுவகாண்ட மறியவேண்டும்
வாமென்ற பூரண சூத்திரந்தா நூறு
    வண்மையுள்ள யிருநூறு மறிவேண்டும்
தாமென்ற பெருநூ லாயிரந்தானப்பா
    தாக்கான கருக்கிடையு மைநூறுமாகும்
மேமென்ற கரிசலையு முன்னூறு வேண்டும்
    வியர்வான சொந்தூர முன்னூறும்பாரே.

விளக்கவுரை :


277. பாரேதான் கருக்கிடையா மைநூறுமாகும்
     பாங்கான பாண்டுவைப்பு வறுநூறும்பார்
நேரேதான் செனகாறு நூறும்பாரு
    நேரான கமலம் ஆயிரம்பார்
கூரேதான் சட்டமுனி யெண்ணூறும்பார்
    குறிப்பான கபிலரது காவியம்பார்
சீரேதான் சிந்தாமணி ஆயிரம்பார்
    சிறப்பான யந்நூலாம் வேதமாமே.

விளக்கவுரை :


278. வேதமாம் ஆயுறு வேதந்தானும்
    வீணாக வாயிரத்தி யிருநூறுபார்
போதமாம் போதரிடி பெருநூலப்பா
    பொங்கமுடன் காவியமா யிரந்தான்பாரு
நீதமென்ற கற்பமது வெண்ணூறும்பார்
    நிலையான கருக்கிடையு மைநூறும்பார்
வாதமென்ற காவியமா யிரந்தான்பாரு
    வளமையுள்ள திராவகமு மெண்ணூர்தானே.

விளக்கவுரை :


279. தானான வெண்ணூறு பார்த்தபின்பு
    தகைமையுள்ள பற்பமது வெண்ணூறும்பார்
தேவான மணிநாலா யிரந்தான்பாரு
    தெளிவான திருமந்திர மாயிரம்பார்
பானான கருக்கிடையும் முன்னூறும்பார்
    பாங்கான பள்ளு நாடகமும்பாரு
மானான பிறையோக காரமென்னும்
    மகத்தான காவிய மாயிரந்தான்காணே.

விளக்கவுரை :


280. காணவே செயகண்டி வாயிரம்பார்
    கருவான வாகடிய மைநூறும்பார்
பூணவே பெருனூ லாயிரத்தைன்னூற
    புகழான காவியமும் பார்க்கவேண்டும்
தோணவே யூகிமுனி பெருங்காவியந்தான்
    துப்புரவாய்ப் பார்த்தபின்பு சொச்சம்பாரு
வேணவே பெருந்திரட்டு குறுந்திரட்டுதானும்
    மிக்கான மாந்திரிய காவியந்தானாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar