அகத்தியர் பன்னிருகாண்டம் 381 - 385 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 381 - 385 of 12000 பாடல்கள்


381. காணவென்றால் கைலாயங் காணவேண்டும்
    காணாட்டால் கோபுரத்தைக் காணவேண்டும்
பூணவே சித்தொளிவு முனிதானப்பா
    பொங்கமுடன் றானிருக்குங் கோபுரந்தான்
வேணபடி சித்தர்கள்தான் யிருக்கும்ஸ்தானம்
    விருப்பமுடன் யானுரைத்தேன் மைந்தாகேளு
தோணவே தடாகமென்று அதிலேயுண்டு
    தோற்றமுடன் மஞ்சள் தாமரையுண்டாமே.

விளக்கவுரை :


382. உண்டாமே மனோன்மணியா ளிருக்கும்பொய்கை
    ஓகோகோ நாதாக்கள் வணங்கும்பொய்கை
அண்டர்முனி ராட்சதர்கள் நடுங்கும்பொய்கை
    அழகான மண்டபந்தான் மத்திபத்தில்
குண்டலம்போல் வயிரக்கல் லிங்கமுண்டு
    கூறான வஞ்சுதலை நாகமுண்டு
சண்டமா ருதம்போல தொனிகள்கேட்கும்
    சட்டமுள்ள தேவாதி ஸ்தலமென்பாரே.

விளக்கவுரை :


383. என்பாரே வயோத்திக்கு வடக்கேயப்பா
    எழிலான நதியொன்று மலையொன்றுண்டு
குன்றான மலைதனிலே சுனையொன்றுண்டு
    குருக்களாஞ் சித்துவர்க்க சேனையுண்டு
வென்றிடுவார் ராட்சதாள் கூட்டமப்பா
    வீரமுனி லாடமுனி கறுப்பன்சாமி
நன்றான பிடாரிமுதல் தேவதைகள்கூட்டம்
    நலமான மலையோரம் நிற்பார்பாரே.

விளக்கவுரை :


384. பாரேதான் டில்லிக்கு மேற்கேயப்பா
    பாங்கான வளர்நாடு சித்துநாடு
நேரேதான் பூமிக்குள் சுரங்கமப்பா
    நெடுந்தூர மாயிரமாங் காதங்காணும்
சூரமுனி சித்துகளும் ரிடிகள்கூட்டம்
    சொற்பெரிய வகிலமென்ற கோட்டைதன்னில்
ஊரேதான் பாதாள பூமியாகும்
    உத்தமனே சித்தர்முனி வாசம்பாரே.

விளக்கவுரை :


385. வாசமாங் கோட்டைக்குப் பூதங்காவல்
    வளம்பெரிய கோட்டைநக ரெல்லாஞ்சுத்தி
பாசமுடன் கிடாரங்கள் கோடாகோடி
    பார்தீர்ந்து வைத்ததுபோல் நிற்கும்பாரு
நேசமுடன் யார்சென்று யெடுத்தாலுந்தான்
    நேர்மையுடன் பூதங்க ளறைந்துகொல்லும்
மோசமது வருகுமல்லோ முனிவர்தாமும்
    முசியாமல் காத்திருந்தார் கோடியாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar