அகத்தியர் பன்னிருகாண்டம் 271 - 275 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 271 - 275 of 12000 பாடல்கள்


271. வைத்தாரே நூல்களின்மேல் தோஷஞ்சொல்லி
    வளமையுடன் யென்னூலைக் குருநூலென்று
கைத்ததொரு சீஷாக்கள் நூலைத்தானும்
    கடினமுடன்  குகைமுன்னே வைத்தபோது
வைத்ததொரு நூலெல்லாம் பிரளயத்தில்
    தாரணியில் மிதந்துவிடக் கண்டோர்தாமும்
தைத்ததொரு பெருநூல்கள் கருவியெல்லாம்
    நலமாக மிகுந்துவிடக் கண்டிட்டோமே.

விளக்கவுரை :


272. கண்டிட்ட நூல்களெல்லாம் பார்த்தாராய்ந்து
    கருவான காண்டமது பனிரெண்டாய்ச் சொன்னேன்
பண்டிதங்கள் பொய்யாமல் மெய்யாய்த்தானும்
    பாருலகில் பெருநூலாய்ச் சொல்லிவிட்டேன்
துண்டிதமாய் சில நூல்கள் சாகரத்தில்
    சுருதிசொரு ளானதுவும் மறைந்துபோச்சு
அண்டியே கடலோர மிதந்தநூல்கள
    வகுப்பட்ட மட்டுமல்லோ வறிந்தோம்யாமே.

விளக்கவுரை :


273. அறிந்ததொரு நூலையெல்லாஞ் சித்தர்தாமும்
    அன்புடனே மாறாட்ட மிகவுஞ்செய்து
செறிந்ததொரு குகைக்குள்ளே கொண்டுசென்று
    சிறப்புடனே தான்மறைத்தார் ரிடிகள்தாமும்
வறிந்ததொரு நூல்களிலே வுட்கருவையெல்லாம்
    மறைப்புடனே காட்டாமல் வொளித்தார்தாமும்
குறிந்ததொரு மூலமுத லனைத்தும்யாவுங்
    கொப்பெனவே வெளியிட்டார் சித்துதாமே.

விளக்கவுரை :


274. சித்தான சித்துமுனி புலஸ்தியாகேள்
    சீருடனே நூல்பார்க்க விதியுஞ்சொன்னேன்
பத்தியுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
    பாலித்தேன் நூல்விபரம் பண்பதாக
முத்திபெற வழிநூலாங் கண்டாராய்ந்து
    முனையான நூல்தொகுப்பு விபரஞ்சொல்வேன்
சத்தியென்ற மனோன்மணியாள் காமரூபி
    சட்டமுட னுறைத்தபடி சாற்றுவேனே.

விளக்கவுரை :


275. சாற்றுவேன் முந்நூல்தான் சிமிட்டுரத்தினம்
    சார்பான பின்னூல்தான் பூரணந்தானாகும்
போற்றுவேன் பின்னூல்தான் பூரணந்தானாகும்
    பொங்கமுடன் பின்னூல்தான் திருமந்திரமாகும்
ஆற்றவே வறுநூறும் பார்க்கவேண்டும்
    அப்பனே யெண்ணூறில் பெருநூலப்பா
சீற்றமுடன் முந்நூறில் சதுர்காண்டமப்பா
       சிறப்பான நசகாண்டம் முன்னூர்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar