அகத்தியர் பன்னிருகாண்டம் 391 - 395 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 391 - 395 of 12000 பாடல்கள்


391. பார்க்கலாங் கன்னிடைய சித்தரப்பா
    பாருள்ள நிதிகளுக்குக் காவலுண்டு
தீர்க்கமுடன் கிங்கிலிய ராயிரம்பேர்
    தீரமுட னணியணியாய்க் காலலுண்டு
ஏர்க்கவே சித்தர்முனி ரிடிகள்தாமும்
    எழிலுடனே போவதும் வருவதுண்டு
மார்க்கமுடன் தலைவாசல் காளிகாவல்
    மகத்தான யிடமெல்லாம் வயிரவனாமே.

விளக்கவுரை :


392.  ஆமேதான் அரண்வாசல் கோட்டைதன்னில்
    ஆயிரம் பெருங்காதம் வழிகள்தோறும்
நாமேதான் சொன்னபடி சித்தர்கூட்டம்
    நாதாந்த சீடவர்க்கங் கூறப்போமோ
போமேதான் செனகமுனி கோட்டையப்பா
    பொங்கமுடன் சொல்வதற்கு நாவுண்டோசொல்
தாமேதான் பொன்னகர மிதற்கீடுண்டோ
    தாரணியில் சேடனவன் சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


393. சொல்லவென்றா லின்னமொரு மார்க்கம்பாரு
    துரைராச சுந்தரனே சொல்லக்கேளும்
நல்லதொரு அயோத்திக்கு மேற்கேயப்பா
    நலமான புல்லாணி தீர்த்தமுண்டு
வெல்லவே தீர்த்தமது நடுமையத்தில்
    வேதாந்தக் கூடமென்னும் மாளியுண்டு
புல்லவே திருமூலக் கூட்டத்தார்கள்
    புகழான கோட்டைக்குள் ளிருப்பார்தாமே.

விளக்கவுரை :


394. இருப்பாரே திருமூல வர்க்கத்தார்கள்
    எழிலாக யெண்ணாயிரம் மாந்தரப்பா
பொறுப்பான யவர்மரபு மெத்தவுண்டு
    புகழான திருமாலிக் கோட்டைக்குள்ளே
குருக்கள்மார் சிலதுபேர் முன்னேநிற்பார்
    குருவானத் திருமூலத் தீசர்முன்னே
திருப்புலவும் பொங்கனயி னார்களப்பா
    திருவாசல் கோட்டைக்குக் காவலுண்டே.

விளக்கவுரை :


395. காவலுடன் சீடவர்க்க மாயிரம்பேர்
    கனமான திருமூலத் தீசர்முன்னே
ஆவலுடன் ஞானோப தேயம்பெற்று
    அன்புடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
பாவமது தனையகற்றித் தவசியோர்கள்
    பான்மையுட னணியணியாய்த் தவமிருப்பார்
சாவதுவு மெப்போது மில்லையப்பா
    சட்டமுடன் கற்பங்கொண்டிருப்பார்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar