அகத்தியர் பன்னிருகாண்டம் 341 - 345 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 341 - 345 of 12000 பாடல்கள்


341. ரெண்டான டமரகனார் தீட்சையப்பா
    யெழிலுடனே பதினாறும் பார்க்கவேண்டும்
கண்டுமே சிவயோகம் யெட்டும்பார்த்து
    கருவான வுட்கருவை யறியவேண்டும்
வண்டுறைந்து மதுவையுண்ணுங் கதையைப்போல
    மானிலத்தில் நூலதனை யறியவேண்டும்
உண்டான வுட்கருவை யறியாவிட்டால்
    உத்தமனே சாத்திரம் பார்த்தொன்றுங்காணே.

விளக்கவுரை :


342. காணார்க ளசுவனியாந் தீட்சையப்பா
    கருவான வறுபத்து நாலும்பாரு
தோணாத கருவெல்லா மதற்குள்தோணும்
    தொல்லுலகில் நூல்பார்க்க வொன்றுமில்லை
வேணபடி நசகாண்ட மாயிரந்தான்
    விருப்பமுடன் சுருக்கமது நூறும்பாரு
ஊணாத கருவெல்லா மதிலேதோற்றும்
    உத்தமனே பஞ்சகர்த்தா ளாடுங்கூத்தே.

விளக்கவுரை :


343. கூத்தான பஞ்சகர்த்தா ளொடுங்குமார்க்கம்
    குறிப்பான நசகாண்டச் சாத்திரம்
மாத்தானக் கிடமில்லா காயகற்பம்
    மகத்தான ஓருநூறு சொன்னாரப்பா
தீத்தமுடன் காயாதிக் கொண்டோர்தாமும்
    திறமுடனே வெகுகால மிருப்பாரென்று
சாத்தமுனி யாழ்வாரும் பிரபந்தத்தில்
    சாற்றினார் காயத்திரி நூலில்தாமே.

விளக்கவுரை :


344. தாமான சௌமிய மாயிரந்தான்
    தாக்கான சுருக்கமது நூறும்பாரு
நாமேதான் சொன்னபடி பத்தும்பாரு
    நலமான சுருக்கம் பதினாறும்பாரு
போமேதான் சோடசமும் முப்பத்திரெண்டு
    பொங்கமுடன் கைமறைப்பு யிருபத்தினாலு
ஆமோதான் பஞ்சபூத ரகசியங்கள்
    அப்பனே பதினாறில் யெட்டில்பாரே.

விளக்கவுரை :


345. எட்டான பஞ்ச காவியந்தானப்பா
    யெழிலான யேமதத்துவ மெண்ணூறாகும்
கட்டான காவியத்துச் சுருக்கமப்பா
    கருவான யெண்பதும் பாருபாரு
திட்டமுள்ள முப்பூவின் வழலைமார்க்கம்
    சிறப்புடனே கூட்டிவைத்தார் பெருமைமெத்த
மட்டியென்னு முழுமக்க ளறிவாரோசொல்
    மகிழ்ச்சியுடன் விதியாளி யறிவான்றானே. 

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar