அகத்தியர் பன்னிருகாண்டம் 321 - 325 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 321 - 325 of 12000 பாடல்கள்


321. ஆமேதான் கொங்கணவர் காவியத்தில்
    அப்பனே சுருக்கமது நூரும்பாரு
நாமேதான் சொன்னபடி வாயிரந்தான்
    நலமான பூரண காவியத்துக்கப்பா
வேமேதான் சுருக்கமது நூறும்பாரு
    மிக்கான ஜெயகண்டி வாயிரந்தான்
தாமேதான் சுருக்கமது நூறும்பாரு
    தாக்கான சூத்துரமும் பத்தும்பாரே.

விளக்கவுரை :


322. பாரப்பா போகரது கருமானந்தான்
    பாங்கான வெண்பதுவம்பாருபாரு
நேரப்பா கொங்கணவர் புடபாகந்தான்
    நெருக்கமுடனன்பதுவும் பார்க்கவேண்டும்
சேரப்பா கொங்கணவர் கண்டசுத்தி
    சீரான வன்பதுவும் பார்த்தால்நன்று
கூரப்பா புசண்டரத வன்பதுந்தான்
    கொப்பெனவே பார்த்தாக்கால் சுத்தியாமே.

விளக்கவுரை :


323. சுத்தியாம் காயசுத்தி பெறவேண்டும்
    சூட்சாதி பிரணவத்தை அறியவேண்டும்
நித்தியமாம் சரக்குசுத்தி யறியவேண்டும்
    நீயான சத்துருமித்துரு பார்க்கவேண்டும்
புத்தியாய் கும்பமுனி வன்பதப்பா
    புகழுடனே பார்த்தாலே யெல்லாஞ்சித்தி
சித்திபெற தட்சணா மூர்த்திநாயன்
    சிறப்பான லோக மாரணத்தைப்பாரே.

விளக்கவுரை :


324. பார்க்கவென்றால் யெந்தனது கருமானந்தான்
    பரிவான திருக்கூத்து யறுபத்துநாலு
தீர்க்தமுட னகஸ்தியர் அட்சர ஞானம்
    திறமுடனே முப்பதுவும் பார்க்கவேண்டும்
ஏர்க்கவே வசுவனிப் பிரயோகந்தான்
    எழிலான பாணமது நாற்பத்திரண்டு
மார்க்கமுடன் ஞான காவியச்சுருக்கம்
    மதிப்புடனே யிருபதுந்தான் பார்த்திடாயே.

விளக்கவுரை :


325. மதிப்பான போகர்பல திரட்டுத்தானும்
    மகத்தான வன்பதுவும் பார்க்கவேண்டும்
துதியான இடைக்காடார் வல்லாதியப்பா
    துப்புரவாம் முப்பதுவும் பார்க்கவேண்டும்
விதியான சண்டமா ருதந்தானப்பா
    விருப்பமுடன் பதினாறுங் காணவேண்டும்
பதியான கருவூரார் அஞ்சனந்தான்
    பாண்மையுடன் பதினாறு பார்த்திடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar