அகத்தியர் பன்னிருகாண்டம் 251 - 255 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 251 - 255 of 12000 பாடல்கள்


251. செப்பவென்றால் அண்டமென்ற கல்லைத்தானும்
          தெளிவுடனே நாதாக்கள் சொற்படிக்கி
ஒப்பமுடன் அண்டமென்ற கல்லைத்தானும்
          வுத்தமனே காரமென்ற செயநீர்தன்னால்
சிப்பியுட செயநீர்தான் கடுங்காரமாச்சு
           யிப்புவியி லாரறிவார் அண்டப்போக்கு
தப்பாமல் அண்டக்கல் காரமேற்றி
           தகைமையுடன் கெஜபுடத்தில் போட்டிடாயே.

விளக்கவுரை :


252. போடவே யண்டக்கல் சுண்ணாம்பாகி
          பொங்கமுடன் சுண்ணமென்ற நெடிதான்வீகம்
நீடவே சரக்குக்குக் காலனாகும்
          நெடிதான சத்துருவைக் கொல்லுமித்திரன்
சாடவே பாஷாண முப்பத்திரெண்டும்
          சாங்கமுடன் பொருமியது
தேடவே வழலையென்ற வண்டமுப்பை
          தெளிவுடனே சீசாவிற் பதனம்பண்ணே.

விளக்கவுரை :


253. பண்ணவே சுண்ணமதை கடுகளவுதானும்
           கருவான வெண்ணைதனில் கொண்டாயானால்
நண்ணமுடன் காயாதி கற்பமாகும்
           நாதாக்க ளுந்தனையும் நவிலுவார்கள
எண்ணமுடன் நாதாக்க ளும்மைத்தானும்
            யெழிலாக முப்பூவைக் கேட்டபோது
வண்ணமுடன் முப்பூவைக் கொடுக்க்கவேண்டாம்
            வளஞ்சொல்லி சித்தர்களுங் கேட்பார்தாமே.

விளக்கவுரை :


254. கேட்டவுடன் மனமகிழ்ந்து கொடுக்கவேண்டாம்
           கெடியான வார்த்தைக்கு அஞ்சவேண்டாம்
நீட்டமுடன் முப்பூவைக் கண்டபோது
           நீயுமொரு சித்தனாய் ஆகிவிட்டாய்
நாட்டமுடன் வழலைதனை அறிந்ததாலே
           நலமான அஷ்டசித்து மாடலாகும்
தாட்டிகமாய் பற்பமதை தேனிலுண்ண
          தாரணியில் வெகுகால மிருக்கலாமே.

விளக்கவுரை :


255. இருக்கலாம் கோடிவரை யுகாந்தகாலம்
    யெழிலுடனே நாலுயுகங் காணலாகும்
பொருக்கவே தேகமது கற்றூணாகும்
    பொங்கமுடன் சட்டையது தள்ளும்பாரு
வகுக்கவே தேகமது பொன்போல்வீசும்
    வளமான வாசியது கீழ்நோக்காகும்
இருக்கவே  கோடியுகம் சமாதிதன்னில்
    யெழிலாக தேகமது அழியாதென்றே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar