அகத்தியர் பன்னிருகாண்டம் 161 - 165 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 161 - 165 of 12000 பாடல்கள்


161. நன்றான குருமொழியைக் கொள்ளவேண்டும்
    நலமில்லாப் பலவழியைத் தள்ளவேண்டும்
அன்றாடங் குருபூசை செய்யவேண்டும்
    அப்பனே மறுபூசைக் கொள்ளலாகா
பன்றான நதிக்கரையில் முழுகவேண்டும்
    பாலான வபிஷேகஞ் செய்யவேண்டும்
வென்றிடவே வினையகற்றி நீங்கவேண்டும்
    வேதாந்தச் சற்குருவை நண்ணவொப்பே.

விளக்கவுரை :


162. ஒப்பான பிராணாயன் தன்னினின்று
    வோங்கார முள்ளடக்கி முனையில்நின்று
தப்பாமல் ரேசக பூரகத்தைக் கொண்டு
    தகைமையுடன் வாசிதனை நடத்தவேண்டும்
செப்பமுடன் பூரணத்திலிருந்து கொண்டு
    ஜெபமாலைக் கைதனிலே பூண்டுகொண்டு
எப்போதுஞ் சதாநிஷ்டை தனிலிருந்து
    யெழிலான குடும்பத்தி லிருக்கநன்றே.

விளக்கவுரை :


163. இருக்கவே யனாகதத்தை வாசியிலேமாட்டி
    யெழிலான ரேசகத் தைசுழித்தியிலேகொண்டு
பெருக்கமுடன் சதாகாலஞ் சிவயோதந்தான்
    பேரான வெட்டவெளி காண்பதற்கு
விருப்பமுடன் செகஜோதி தன்னைக்கண்டு
    வீரான சுவாசமதை மடக்கிக்கொண்டு
சுருக்கமுடன் லாடமதில் விபூதிபூண்டு
    துப்புறவா யிருப்பவனே சித்தனாமே.

விளக்கவுரை :


164. சித்தருடன் மொழிதனையே மனதிலெண்ணி
    சிதாபாசத் தன்னுடனே யிருக்கவேண்டும்
மெத்தநல்ல வேதாந்தி பெரியோர்போலே
    மேன்மையுடன் செகதலத்தி லிருக்கவேண்டும்
செத்தாலுங் கீர்த்தியது கொள்ளவேண்டும்
    செம்மையுடன் பலபேரும் துதிக்கவேதான்
வெத்திபெற வுலகமதில் யிருப்பவன்றான்
    வேதாந்த சிவத்தொளிவு யென்னலாமே.

விளக்கவுரை :


165. ஆமேதான் புலஸ்தியனே யின்னங்கேளு
    அப்பனே யுலகமதில் பண்டிதங்கள்
தாமேதான் செய்வதற்கு வினயங்கொண்டு
    தண்மையுட..........னுமந்த வயித்தியோர்க்கு
நாமேதான் சொன்னபடி பலநூல்கற்று
    நலமுடனே பரிகாரஞ் செய்யவேண்டும்
போமேதான் சிவயோகஞ் செய்யாராகில்
    பூதலத்தில் நகரமதுக் கெய்துவாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar