அகத்தியர் பன்னிருகாண்டம் 296 - 300 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 296 - 300 of 12000 பாடல்கள்


296. எட்டான  குளிகையது அறியவேண்டும்
    எழிலான என்னூலில் ஞானமப்பா
திட்டமுடன் பதினாறு ஞானந்தானும்
    தீரமுடன் யானுறைத்தேன் புலஸ்தியாகேள்
வட்டமுடன் வான்மூகர் பத்தும்பாரு
    வாகன சிவயோகம் பதினாறும்பார்
சட்டமுடன் யென்னூலாஞ் சுத்தஞானம்
    சதுரான நவநீதம் ஒன்பதாமே.

விளக்கவுரை :


297. ஒன்பதாம் வயித்தியக் கும்மிதானும்
    ஒப்பான அண்டக்கல் சுண்ணம்பத்து
அன்பதாம் மச்சமுனி சொச்சம்பாரு
    அப்பனே சூத்திரமும் எட்டும்பாரு
துன்பகற்றுந் திருமூலர் கிரந்தியெண்ணை
    துப்புரவாய் எட்டுடனே ரெண்டும்பாரு
இன்பமுடன் ரோமரிடி கருமானந்தான்
    எழிலாக அன்பத்தி யொன்றும்பாரே.

விளக்கவுரை :


298. பாரேதான் கௌபால சித்தரப்பா
    பண்புடனே ஆணியென்ற கோர்வைதானும்
நேரேதான் அன்பத்தி யொன்றுதானும்
    நேர்மையுடன் சூத்திரத்தைப் பார்க்கவேண்டும்
சீரேதான் சட்டமுனி நாதர் தாமும்
    சிறப்பான கற்பவிதி நூறும்பாரு
கூரேதான் கேசரிநூல் அன்பத்தொன்றும்
    குற்றமில்லா சூத்திரமும் பத்தும்பாரே.

விளக்கவுரை :


299. பத்தான குளிகையது எட்டும்பாரு
    பாங்கான குருக்கிடை சூத்திரந்தான்சொச்சம்
முத்தான சூத்திரமும் முப்பத்தாறு
    முடிவான பச்சைவெட்டு பதினாறும்பார்
சித்தான வாதமது ஆறும்பாரு
    சிறப்பான பதஞ்சலியார் இருபதும்பார்
மத்தான யென்னூல்முன் னெண்பதும்பார்
    மகத்தான பின்னூல் எண்பதுதான்பாரே.

விளக்கவுரை :


300. எண்ணான சுந்தரா நந்தர்தானும்
    யெழிலாகத் தானுறைத்த நூல்தானப்பா
கண்ணான பூஜாவிதி முன்பின்பாரு
    கருவான வென்னூல் பட்சணிதான்பாரு
குண்ணான ஞான முப்பதுவுங்பாரு
    கூறான வூத்தமுறை தன்னைப்பாரு
தண்ணமுடன் வள்ளுவனார் நூறும்பாரு
    தாக்கான குறுநூல் எண்பதுதான்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar