அகத்தியர் பன்னிருகாண்டம் 41 - 45 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 41 - 45 of 12000  பாடல்கள்


41. தானான பராபரமு நீயுமாச்சு
    சத்த சாகரமுந்தான் நீயுமாச்சு
தேனான சத்திசிவம் நீயுமாச்சு
    தெளிவான கோயில்குளம் நீயுமாச்சு
பானான தசவாய்வு நீதானப்பா
    பாருலகி லுன்னைவிட வேறொன்றில்லை
மானான பராபரத்தின் நுட்பங்கண்டோர்
    மானிலத்தி லுண்டோதான் மன்னாகேளே.

விளக்கவுரை :


42. கேளேதான் புண்ணியனே புலஸ்தியனேகேளு
    பூவுலகில் கர்மிகளு மனேகமுண்டு
நாளேதான் நற்குணத்தோ ரதிலுமுண்டு
    நலமான கலைக்கியானங் கற்றோருண்டு
வீளேதான் கலையிரண்டுங் காணவேண்டும்
    வடகலையும் பின்கலையு மறியவேண்டும்
சூளேதான் சூரியனின் லக்கம்வேண்டுஞ்
    சுந்திரனே சந்திரனில் வசியமாமே.

விளக்கவுரை :


43. ஆமேதான் ராசனுக்குச் சந்திரனில்நிற்கும்
    அப்பனுக்கு ப்புருஷனிட சூரியன்றானும்
தாமேதா னிருகலையு மொடுங்கிப்பாயும்
    தாக்கான சூனியத்தி லிருந்துகொண்டு
போமேதான் வாசியைத்தான் வழக்கஞ்செய்து
    பொங்கமுடன் மூலமதி லேறவேண்டும்
நாமேதான் சொன்னபடி யஷ்டசித்தி
    நலம்பெறவே யெப்போதும் பெருகலாமே.

விளக்கவுரை :


44. பெறுகலாம் மும்மூர்த்தி யீடுமல்ல
    பேரான வாசிசித்தி யோகசித்தி
தறுகவே யதஸ்தியனும் சொல்லிப்போட்டேன்
    நயம்பெறவே புலஸ்தியா தெரிந்துகொள்ளு
குறுகியதோர் குருமுனிவர் வாக்குப்பொய்யா (து)
    குவலயத்தில் சித்தர்களுக் குண்மையாகும்
நறுமலர்போல் பெருனூலைப் பார்த்தபேர்கள்
    நாயகனே யெந்நாளுந் தவங்கொள்வாரே.

விளக்கவுரை :


45. தவங்கொள்வா ரிந்நூலைப் பார்த்தபேர்கள்
    தாரணியில் சதாகாலம் வாழ்ந்திருப்பார்
பவமகற்றிப் பாருலகில் பரிசுத்தவானாய்ப்
    பாங்குபெற யெந்நாளும் சிவத்தினின்று
உவமுடனே காயப்ர வேசமாகி
    உத்தமனே கூடுவிட்டுக் கூடுபாய்வார்
சவமதுபோல் இருந்தாலும் பிராணவாய்வைத்
    தன்னுக்குள் தானடக்கி யிருப்பார்தானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar