அகத்தியர் பன்னிருகாண்டம் 241 - 245 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 241 - 245 of 12000 பாடல்கள்


241. விழலானார் பரிபாஷை பார்த்துமல்லோ
    விருதாவாய்த் தெரியாமல் மாண்டார்கோடி
வழலைமுகம் தானறியார் மாணாக்காளே
    வகண்டபரி பூரணத்தை மெய்யென்றெண்ணி
கழலவே யென்னூலில் ரோமபாஷை
    பரிவாகச் சொல்லிவிட்டேன் வைநூறுக்குள்
சுழலவே கண்டறிந்து காண்பானாகில்
    சுத்தமுள்ள சித்தனென்னும் பேருமாச்சே.

விளக்கவுரை :


242. ஆச்சப்பா ரோமரிடி பரிபாஷையப்பா
    வாச்சரிய லோகமதி லாருங்காணார்
பேச்சப்பா பேசுதற்கு இடமுமில்லை
    பேரான கைமறைப்பு யாதொன்றில்லை
வாச்சப்பா வழலையிட மார்க்கந்தன்னை
    வாகுடனே பாடிவைத்தேன் ரெண்டாங்காண்டம்
ஓச்சப்பா யாருந்தான் சொல்லக்கூடா
    யெழிலான தென்வாக்கு வுறுதியாமே.

விளக்கவுரை :


243. உறுதியா மிந்தபரி பாஷைதானும்
    வுத்தமனே சிவயோகி அறிவானப்பா
நிறுதிமொழி வார்த்தையினால் நிட்சயித்து
    நீடுழி காலம்வரை யென்னூல்பார்த்து
குறுதியுள்ள சூத்திரமும் பதினாறுபார்த்துக்
    குறிப்புடனே சோடசமு மிரண்டும்பார்த்து
அறுதியுடன் பரிபாஷை யறிந்துமேதான்
    அப்பனே முப்பூவை முடிப்பாய்தானே.

விளக்கவுரை :


244. முடிப்பதற்கு நாளுமது யெட்டில்பாரு
    முனையான கதிரோனும் சரியாய்நிற்பான்
துடிப்புடனே காவனத்திற் செல்லும்போது
    துறைபோல முறைபோல நீயுஞ்சென்று
குடிப்பழுது நேராமல் ரேசகத்தைப் பார்த்து
    குறிப்புடனே வேளையது யென்னூல்பார்த்து
அடிப்பறையில் பிரதிவியில் மண்ணைத்தோண்டி
    அப்பனே ரவிதனிலே காயப்போடே.

விளக்கவுரை :


245. போடையிலே மண்ணுமது கசுவுவாங்கி
    பொங்கமுடன் காற்றாறி யிருக்கும்போது
நீடமுடன் சல்லாவை மேலேபோட்டு
    நிஷ்களமாய் பணியதுவும் மேற்படாமல்
மூடவே மூன்று நாள்சென்றபின்பு
    முறைபோலென் பரிபாடை கையிலேந்தி
கூடயிலே கேணிநீர் கொண்டுவந்து
    குமுறவே சலமதனால் பிசைந்திடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar