அகத்தியர் பன்னிருகாண்டம் 31 - 35 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 31 - 35 of 12000  பாடல்கள்



31. சொன்னதொரு மொழியெனக்குங் களவேயாகும்
    சுருதி............வேதமுதல் மறவேயாகும்
நன்னயம்போல் னூலதனை மெய்றெண்ணி
    நாதாந்த சித்துமுதல் காட்டிலுள்ளோர்
பன்னவே பரவி பயன்காணாமல்
    பாரினிலே யென்னூலுங் கிட்டாமற்றான்
கன்ன................தான் கொடுத்த கொடை யென்றெண்ணி
    காசினியிலே மாந்தர்....................மாண்பே.

விளக்கவுரை :


32. மாண்பான சாத்திரத்தை மதிப்பிட்டோங்கி
    மானிலத்தில் வறுமையது மிகக்கொண்டாடி
காண்பான சாகரத்தை விட்டொழித்து
    கருத்துடனே பெருனூலைத் தேடிக்கொண்டார்
சாண்பாம்பே யானாலும்த டிகல்வேணும்
    தப்பாமல் சாத்திரங்கள் அறியாப்பேர்க்கு
வீணான....ம....ருக்கு யென்னூல்வேண்டும்
    விருப்பமுடன் பெருனூலும் வேண்டும்பாரே.

விளக்கவுரை :


33. பாரேதான் புலஸ்தியனே சொல்லக்கேளும்
    பாரினிலே சித்தரெமைக் காணவென்று
நேரே தான் யெந்தனிடம் வந்தபோது
    நேர்மையுடன் கைதனிலே யிருந்தனூலை
சீரே தான் வாதமதை உபதேசித்து
    சிறப்புடனே நூல்கொடுத்து புத்திகூறி
மேரேதான் மேதினியில் பிழைக்கவென்று
    மேன்மையுடன் வாக்களித்த துறுதியாமே.

விளக்கவுரை :


34. உறுதியா மண்டபிண்டங் காணவேண்டும்
    வுத்தமனே கோசபீச மறியவேண்டும்
நிறுதியா மாதாரங் கண்டாலெல்லாம்
    நீணிலத்தில் நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
பருதிபோல் மேலான ஆதாரங்கண்டு
    பட்சமுட...................னாயிரத் தண்டங்கண்டு
சுறுதியெனும் கீழ்மேலும் நடுவுங்கண்டு
    சூட்சத்தில் வகாரத்தின் வாசிபோற்றே.

விளக்கவுரை :


35. போற்றவே வாசியைத்தான் காணவேண்டும்
    பொங்கமுடன் வழலையுப்பு அறியவேண்டும்
ஏற்றவே பூரகத்தை மனதிலுன்னி
    எழிலான தேவியுட பாதங்கண்டு
மாற்றவே குண்டலியின் பொருளைக்கண்டு
    மகத்தான வல்லபையை மனதிலுன்னி
தூற்றியே அண்டபிண்ட நிலையைக்கண்டு
    துப்புரவாய் சிவகாமி தன்னைக்காணே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar