அகத்தியர் பன்னிருகாண்டம் 246 - 250 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 246 - 250 of 12000 பாடல்கள்


246. பிசைந்துமே மூன்றுநாள் ரவியிற்போடு
    பிசகாமல் நான்காம்நாள் பின்னுமப்பா
இசைந்ததொரு பள்ளமதை சுத்தித்தேதான்
    யெழிலான சல்லாவை கீழேவைத்து
திசைமுகமுங் காணாமல் பிசைந்தமண்ணை
    திகழவே ரவைசல்லா மேலேகொட்டி
நசைந்ததொரு பிரிதீவா மண்ணுதன்னை
    நாட்டமுடன் போட்டுமல்லோ மூடிடாயே.

விளக்கவுரை :


247. மூடவே மூன்றாம்நாள் கதிரோன்முன்பு
    முனையான பரிபாஷை விதியதாக
சாடவே நீபோய் பார்க்கும்போது
    சட்டமுடன் பூநீறு சாண்தானப்பா
நீடவே பூமிதனில் வளர்ந்திருக்கும்
    நீசமான பூநீரை யெடுத்துபாலா
கூடவே மறுபடியுங் குழிதான்வெட்டி
    கொப்பெனவே பூனீறைபோடக்கேளே.

விளக்கவுரை :


248. கேளேதான் பூனீரை யெடுத்துமைந்தா
    கெணிதமுடன் குழிதனிலே பின்னும்போடு
தாளவே யதின்மேலே சல்லாவைத்தான்
    தகைமையுடன் மேல்பரப்பி மண்ணை மூடி
ஆளவே கெட்டணைகள் மிகவுஞ்செய்து
    அப்பனே மூன்றுதிங்கள் பொறுத்தபின்பு
மீளவே மண்ணதனைக் தோண்டிப்பார்க்க
    மிக்கான மண்ணதுவுங் கெட்டியாமே.

விளக்கவுரை :


249. கெட்டியாம் மண்ணதனை யுடைத்துப்பார்க்க
    கெடியான அண்டமென்னுங் கல்லுதானும்
கட்டியாய் யுருண்டுமல்லோ திரண்டுமேதான்
    கருவான பிண்டம்போ லிருக்கும்பாரு
மட்டியென்ற ஆனைக்கல் லென்றும்பேரு
    மகத்தான காரசார மானகல்லு
வட்டமுட னடுமைய மிருகடுங்கல்லு
    வளமான கல்லினது வேகம்பாரே.

விளக்கவுரை :


250. பாரேதான் அண்டமென்ற பிண்டக்கல்லை
    பாருலகில் யாரறிவார் சிவயோகிகாண்பான்
நேரேதான் புத்திவா னறிவான்பாரு
          நேர்மையுடன் விட்டகுறை யிருக்குமானால்
சீரேதான் வழலையென்ற மார்க்கமப்பா
          திறமுடனே லபிக்குமடா புண்ணியோர்க்கு
வேரேதான் பிண்டமென்ற கல்லைத்தானும்
          விருப்பமுடன் செய்யும்வகை செப்பக்கேளே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar