அகத்தியர் பன்னிருகாண்டம் 211 - 215 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 211 - 215 of 12000 பாடல்கள்


211. கொண்டபின்பு காயாதி கற்பமாச்சு
    கோடான கோடிவரை யிருக்கலாகும்
கண்டவர்கள் யிப்பாகஞ் சொல்லமாட்டார்
    காசினியில் வெகுகோடி மாந்தரப்பா
விண்டபடி யாமுரைத்த நூலையெல்லாம்
    விருப்பமுடன் தான்மறைத்து குகைக்குள்வைத்து
மண்டலத்தில் நூலில்லை யென்றுசொல்லி
    மறைத்தாரே நாதாக்கள் சித்துதாமே.

விளக்கவுரை :


212. சித்தான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
    சீரான புலஸ்தியனே சொல்லக்கேளும்
குத்தான செம்பதுவுஞ் சேர்தானொன்று
    குணமான செந்தூரங் களஞ்சியொன்று
வித்தான தங்கமது களஞ்சியொன்று
    விபரமுடன் றானுருக்கிக் குருவொன்றீய
முத்தான மணிபோலே யுருகியல்லோ
    முன்னூறு மாற்றதுவும் யிருக்கும்பாரே.

விளக்கவுரை :


213. பாரேதான் தங்கமது பிரிதீவாகும்
    பாரினிலே பிறவியென்ற தங்கமாச்சு
நேரேதான் தங்கமது மாற்றோமெத்த
    நெடிதான சுயத்தங்க மிதற்கொவ்வாது
சீரேதான் சிவயோகந் தனக்குதந்த
    சீர்மையுள்ள தங்கமது யிதுதானப்பா
கூரேதான் நாதாக்கள் சொன்னமார்க்கம்
    குறிப்பறிந்து பாடிவைத்த காண்டமாமே.  

விளக்கவுரை :


214. காண்டமாம் பனிரெண்டு காண்டந்தன்னில்
    கருத்துடனே பாடிவைத்தேன் முதற்காண்டத்தில்
தூண்டியதோர் கருமான முப்புமார்க்கம்
    சூட்சாதி சூட்சமெல்லா மிதிலடக்கம்
பூண்டதொரு காயாதி கற்பஞ்சொன்னேன்
    புகழான முப்பூவையெடுக்குமார்க்கம்
வேண்டியே வகைமான மிதிலேசொன்னேன்
    விருப்பமுடன் பாடிவைத்த காவியந்தானே.

விளக்கவுரை :


215. தானான காவியம் பன்னீராயிரத்தை
    தண்மையுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
கோனான வசுவனி தேவர்தானும்
    கொற்றவனார் கடாட்சத்தி னருளினாலே
தேனான காவியமாய்த் திரட்டியேதான்
    திறமான பனிரெண்டு காண்டஞ்சொன்னேன்
பானான பாராபரியாள் மெச்சியேதான்
    பரலோகங் காணவது வரந்தந்தாளே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar