அகத்தியர் பன்னிருகாண்டம் 26 - 30 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 26 - 30 of 12000  பாடல்கள்




26. பாழான சாத்திரத்தைச் சாபஞ்சொல்லிப்
    பாருலகில் மதிமயங்கிக் கெட்டார்கொடி
வாழலா மென்றுசொல்லி யவர் நூல்பார்த்து
    வளமை.....................பழிதனக்கு வாளுமாக
சாழவே சாத்திரத்தின் சூட்சங்காணார்
    சதகோடி சூரியன்போல் மனதிலெண்ணி
வீழவே சாத்திரத்தைப் பார்த்தாராய்ந்து
    விருதாவில் கெட்டலைந்தார் மாண்பர்தாமே.

விளக்கவுரை :


27. மாண்பான சித்தரெல்லாங் கூட்டங்கூடி
    மதிப்புடனே இமயகிரி வந்தாரங்கே
தாண்மையுடன் நாமிருக்குங் குகையைத்தேடி
    சட்டமுட னெந்தனையும் ஆராய்ந்தேதான்
ஆண்மையுடன் வந்தெதிரே நின்றுகொண்டு
    அப்பனே வசுவனியை வணங்கிப்போற்றி
பாண்மையுடன் தலைமீதிற் கையைவைத்து
    பட்சமுடன் அஞ்சலிகை செய்திட்டாரே.

விளக்கவுரை :


28. செய்திட்ட சித்தர்தமைக் கண்டபோது
    செம்மையுட னவர்தனக்காசன ங்களிட்டு
வைதிட்ட தேவர்முனி ரிடிகள்தம்மை
    வளமையுடன் நாதாந்த சித்துகேளு
பைதிட்ட சுனைமுகமும் விட்டுநீங்கி
    பாருலகில் வந்தென்னைக் காணவென்று
துய்திட்ட சித்தர்களே கூட்டங்கூடி
    துறைமுகமாய் வந்ததென்ன சொல்லென்றேனே.

விளக்கவுரை :


29. சொல்லென்ற வேளையிலே முனிவர்தாமும்
    சுத்தமுடன் புகலுகிறார் நந்தமக்கு
வெல்லவே வேதாந்தக் குருவேயென்று
    விருப்பமுடன் கேள்வியது மிகவுங்கேட்டு
அல்லலுடன் சாத்திரத்தை யுருகியல்லோ
    அப்பனே சாகரத்தில் விட்டெறிந்தார்
கல்லுடனே ஜலமதிலே மிதந்துகொண்டு
    காற்றுடனே கரையோரம் ஒதுக்கலாச்சே.

விளக்கவுரை :


30. ஒதுக்கியதோர் குருனூல்கள் அழிந்துப்போச்சு
    ஓகோகோ நூல்கள் மிதக்கலாச்சு
சதுரான கருமானஞ் சாகரத்தில்
    சட்................ந்தியல்லோப் பாழாய்போச்சு
மெதுவாக மிதந்ததோர் சாத்திரங்கள்
    வளமையுடன் பாடிவைத்தார் வெகுநூல்தாமும்
முதுமடையர்......................த் தலைகீழாக
    மூர்க்கமுடன் படித்துமல்லோ மொழிசொன்னானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar