அகத்தியர் பன்னிருகாண்டம் 71 - 75 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 71 - 75 of 12000 பாடல்கள்



71. ஏற்றியே தானெரிப்பாய் சாமம்ரண்டு
    யெழிலுடனே யெண்ணையது கக்கிப்போகும்
மாற்றியே முப்புவது தவளம்போலாம்
    மகத்தான கைகண்ட முப்பூவாகும்
தேற்றமுடன்  முப்பூவைக் பதனம்பண்ணு
    தெளிவான ரேசக பூரகமுஞ்செய்து
போற்றியே யெப்போதும் பூசித்தேதான்
    பூவுலகில் நெடுநாளாம் வாழ்ந்திடாயே.
                         
விளக்கவுரை :


72. வாழவே முப்பூவைச் சுண்ணமாக்கே
    வகைசொல்வேன் புலஸ்தியனே சொல்லக்கேளு
நீழவே முப்பூவைக் கல்வமிட்டு
    நிலையான விந்துவினால ரைத்துமைந்தா
மாழவே பில்லைசெய்து ரவியுலர்த்தி
    மன்னனே புடம்போடப் பற்பமாகும்
ஆழவே பற்பமதை யென்னசொல்வேன்
    அப்பனே யதற்கீடு நவிலொணாதே. 
        
விளக்கவுரை :

73. சொல்லவென்றால் நாவில்லைப் பாவுமில்லை
    துரைராஜர் சுந்தரவர் செய்யுமார்க்கம்
பல்லவே விதற்கீடு புகலப்போமோ
    புகழான சுண்ணமதை பதனம்பண்ணு
வெல்லவே சுண்ணத்தால் கோடிபாதை
    யேகலாம் குறுக்குவழி யனந்தங்கோடி
நல்லவே பூர்வமுப்பு விதுதானாகும்
    நாயகனே புத்தியுள்ளான் செய்வான்பாரே.

விளக்கவுரை :


74. செய்யவே புலஸ்தியனே செப்பக்கேளும்
    செயலான விஷக்கல்லு யிருக்கும்ஸ்தானம்
உய்யவே கோரையெனும் ஸ்தானமப்பா
    உத்தமனே சிகரமது வளருங்கல்லு
துய்யவே லிங்கமென்ற கல்தானப்பா
    துரைராஜர் கொண்டாடுந் துந்துமிக்கல்
பையவே தானெடுத்துப் பதனம்பண்ணு
    பாருலகில் சித்துவிளை யாட்டுகேளே.

விளக்கவுரை :


75. கேளவென்றால் வமுர்தமென்னுங் கல்லையப்பா
    கெவனமுடன் சுண்ணமது செய்யக்கேளு
பாளவே பேரண்டம் சுண்ணம்பண்ணிப்
    பட்சமுடன் சுண்ணமதை மூசைசெய்து
தாளவே வமுர்தமென்ற கல்லையப்பா
    தகைமையுடன் மூசைக்கு ளடைத்துபாலா
வாளமுடன் சீலையது வலுவாய்ச்செய்து
    வளமைபெற உலையில்வைத்து வூதிடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar