அகத்தியர் பன்னிருகாண்டம் 191 - 195 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 191 - 195 of 12000 பாடல்கள்


191. வாங்கியே பூனீறு மொன்றேயாகும்
    மகத்தான சீனமது வொன்றேயாகும்
ஏங்கியே திரியாதே மதியுப்புதானும்
    யெழிலான கரியுப்பு இந்துப்பாகும்
தூங்கியே திரியாம லிதுவெல்லாந்தான்
    துறையோடும் முறையோடுந் தூய்மைகண்டு
சாங்கமுடன் வெண்கருவா லரைத்துமைந்தா
    சட்டமுடன் அண்டக்கல் கவசஞ்செய்யே.

விளக்கவுரை :


192. செய்யவே அண்டமென்ற சுண்ணக்கல்மேல்
    செம்மையுடன் கவசமது செய்துகொண்டு
வெய்யலெனும் ரவிதனிலே காயவைத்து
    வேகமுடன் சுண்ணாம்புச் சீலைசெய்து
துய்யமுடன் கனயெருவில் புடத்தைப்போடு
    துடியான புடமதுவு மாறிப்பாரு
பையவே சுண்ணமதை யென்னசொல்வேன்
    பாரினிலே கண்கொள்ள வேதையாமே.

விளக்கவுரை :


193. வேதையா மின்னமொரு வித்தைகேளு
    வேதாந்தத் தாயினது அருளினாலே
பேதையாம் வெகுகோடி முனிவர்தாமும்
    பிரியமுடன் செய்ததொரு வித்தையாகும்
காதையுடன் பற்பமது யென்னசொல்வேன்
    கடுங்கார மானதொரு வழலையாச்சு
பாதையாம் பற்பமது போக்குச்சொல்வேன்
    பாரினிலே சித்தருட மகிமைதானே.

விளக்கவுரை :


194. தானான பறப்மதைத் தானெடுத்துப்
    பாகமுடன் வேதைமுகம் சொல்வேன்பாரு
கோனான குருநாதர் சொற்படிக்கு
    குறிப்புடனே சரக்குக்குச் சத்துருவுமாச்சே
வேனான சரக்குகளைக் கொல்லுங்காலன்
    மிக்கான வழலையுட கூர்மையப்பா
தேனான பற்பமதை சரக்குபேரில்
    தேற்றமுடன் வுமிநீரால் மத்திப்பாயே.

விளக்கவுரை :


195. மத்தித்துக் கலசமது செய்துகொண்டு
    மயங்காமல் ரவிதனிலே காயவைத்து
சக்தியுடன் பூசையது மிகவாய்ச்செய்து
    சாற்புடனே ள..........யென்ற புடத்தைப்போடு
புத்தியிடனாறியபின் னெடுத்துப்பார்க்க
    புகழான சரக்கதுவு நீறிப்போகும்
புத்தியுடன் சீசாவில் பதனம்பண்ணி
    பாரினிலே சித்தர்களுக் காட்டாதென்னே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar