அகத்தியர் பன்னிருகாண்டம் 231 - 235 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 231 - 235 of 12000 பாடல்கள்


231. முப்பாலே வந்ததொரு வப்பூவாச்சு
    முதன்மையாம் பனிநீருஞ் சென்னீராச்சு
தப்பாமல் மழையினால் வந்தநீராம்
    தண்மையுள்ள குளிர்ச்சியினால் பனிநீராச்சு
ஒப்பான மேகமது தானழிந்து
    வுற்பனமாங் கெர்ச்சையுடன் வழலைதன்னில்
வெப்பமுடன் மழைசொரியும்போதுவல்லோ
    வேகமுடன் காற்றதுவும் மேவுங்காணே.

விளக்கவுரை :


232. காணவே சித்திரையாம் பருவந்தன்னில்
    களிப்புடனே மேகமது கர்ச்சித்தேதான்
தோணவே காற்றெழும்பி சுடர்போல்வீசி
    துப்புரவாய்ப் பூமிதனில் விழுகும்போது
ஈணவே மதியுப்பு காரசாரம்
    இயலான வுவருப்பு வதிலுண்டாச்சு
வேணவே பரிபாஷைத் திரட்டையெல்லாம்
    விருப்பமுடன் தான்படித்து மறைத்தீர்தாமே.

விளக்கவுரை :


233. மறைத்தொரு பூநீரைக் காரசாரம்
    மானிலத்தில் காட்டாத வண்மையெல்லாம்
திறைப்புடனே கண்டறிந்து திறலும்பார்த்து
    திறமான வழலையுட கணிதம்பார்த்து
புறையகற்றி வண்டக்கல் லிருக்கும்ஸ்தானம்
    புகலாத காரணத்தால் பாபமாச்சு
குறைப்படியே சாத்திரத்தைப் பிரட்டிப்பாடி
    கூர்மையுள்ளான் கண்டறிவா னென்றிட்டீரே.

விளக்கவுரை :


234. என்றீரே மேகத்தா லுற்பவித்த
    யெழிலான பனியதுவால் விளைந்தவுப்பு
வென்றீரே கதிரோனால் விளைந்தவுப்பு
    வேகமுள்ள வளர்தனிலே விளைந்தவுப்பு
தின்றதொரு வுப்பெல்லா மிதற்குள்ளாச்சு
    தீர்த்தகரை யாடிவந்த வுப்புமாச்சு
தென்றிசையின் கன்னியா குமரிதன்னில்
    தேர்ந்தெடுத்த வுப்பதுவுந் தெளிமைபாரே.

விளக்கவுரை :


235. பார்க்கையிலே வண்டபிண்ட மென்றுஞ்சொன்னீர்
    பாருலகில் நடுப்பிண்ட மிதுவுமாச்சு
தீர்க்கமுடன் தலைப்பிண்ட மிதுவுமாகும்
    திகழான கடைப்பிண்ட மிதுவுமன்றீர்
நீர்க்கமுடன் பிண்டக்கல் லென்றுசொல்லி
    நெடுநாளாய் வளர்ந்ததொரு கல்லுமென்றும்
மூர்க்கமுடன் வளர்ந்ததொரு கல்லுமென்று
    முக்கியமாய்த் தானுறைத்தீர் முதன்மைதானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar