அகத்தியர் பன்னிருகாண்டம் 131 - 135 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 131 - 135 of 12000 பாடல்கள்


131. இருக்கலாம் புலஸ்தியா யின்னங்கேளு
    யெழிலான மார்க்கமொன்று சொல்வேன்யானும்
வருக்கமுடன் மானிலத்தில் ஞானிபோல
    வாறுடனே சகலநூல் கற்றோன்போலும்
திருத்தமுடன் தத்துவத்தில் கடந்தோனென்றும்
    தெளிவான பிரமலபி யறிந்தோன்போலும்
பொருத்தமுடன் பூமிதனி லாசைவிட்டுப்
    பூதலத்தில் முன்றாசை வெறுந்தோனாமே.

விளக்கவுரை :


132. ஆமேதான் பொய்வேட மிகவுமுண்டு
    அப்பனே சர்வக்கியானி போலேதானும்
தாமேதான் சர்வநூல் கற்றோன்போலும்
    சட்டமுடன் வாய்பினத்த லதிகம்பேசி
நாமேதா னுலகத்தில் கடந்தஞானி
    நாட்டிலே யாரேனு மொருவருண்டோ
போமேதான் மெய்ஞானி போலேயப்பா
    பொங்கமுடன் வெகுபேச்சு பேசுவானே.

விளக்கவுரை :


133. பேசுவான் ஞானவழி காட்டுவான்போல
    பேரான மாய்கைதனை யவித்தோன்போலும்
கூசுதலு மிகப்படைத்த புத்திவான்போல்
    குவலத்தில் கீர்த்திபெற்ற பூபாலன்போல்
காசுபண மாசையது மற்றோன்போலும்
    காசினியில் பற்றாசை யில்லான்போலும்
மாசுமறு வில்லாத புண்ணியன்போல்
    மகத்தான ஞானிபோல் பினத்துவானே.

விளக்கவுரை :


134. பினத்தியே வாயாட்ட மிகவுங்கொண்டு
    பிரியமுடன் சீஷர்க ளனேகமுண்டு
கனத்துடனே கதைமிகவும் பேசியல்லோ
    கைலாச கிரிதனையே கண்டோன்போலும்
மனத்துயர மற்றவன்போ லுறுதிபேசி
    மகத்தான சின்மயத்தின் வெளிகண்டோன்போல்
சினத்துமே சீஷவர்க்கந் தர்க்கம்பேசி
    தினகாலம் வாசியைத்தான் மீட்டுவானே.

விளக்கவுரை :


135. மீட்டுயே தத்துவத்தை மிகவும்பேசி
    மேன்மையுடன் ஞானிபோல் வாதுகூறி
தாட்டிகமாய்ப் பூரணத்தின் பெருமைபேசி
    தகைமையுள்ள வாசியை மாசறச்சொல்லி
பூட்டகங்கள் காட்டுகின்ற சித்தன்போலும்
    பொலிவான ரேசக பூரகத்தைநாட்டி
நீட்டமுடன் பரிபோகஞ் செய்துமேதான்
    ...... ...... ...... ....வழி கூறுவானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar