அகத்தியர் பன்னிருகாண்டம் 226 - 230 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 226 - 230 of 12000 பாடல்கள்


226. சொன்னதொரு வழலைக்குக் கருமானத்தை
    சூட்சமுடன் சொல்லாமல் மறைத்துப்போட்டீர்
வின்னமுடன் அண்டமென்னும் விஷக்கல்தன்னை
    வெட்டவெளி யாகவல்லோ சொல்லாமல்தான்
நன்னயமாய் நாதாக்கள் மறைப்பைப்போல
    நலமாகத் தானுமல்லோ சொல்லிவிட்டீர்
சின்னமுள்ள பரிபாஷை வைநூறுந்தான்
    சிறப்பில்லை காசினியில் வியர்த்தந்தானே.
    
விளக்கவுரை :


227. வியர்த்தமாம் பரிபாஷை நூலையெல்லாம்
    விருதாவாய்த் துறைசொல்லி முறைசொல்லாமல்
நியர்த்தமுடன் சாத்திரத்தில் சாபஞ்சொல்லி
    நிலையான வழிதனையே காணாமற்றான்
தயர்த்தமுடன் நூலாதி நூல்களெல்லாம்
    சாங்கமுடன் பரிபாஷை மரவுசொல்லி
சுயர்த்தமுடன் அண்டமென்னும் விஷக்கல்தன்னை
    சூட்டியே போக்குவழி மறைத்தீர்தாமே.
   
  

விளக்கவுரை :


228. மறைத்ததொரு வண்மையெல்லாஞ் சொன்னார்பாரு
    மகத்தான சாத்திரத்தின் முப்புமார்க்கம்
குறைத்துமே தன்மனதின் போலேதானும்
    கூரான விஷக்கல்லு பிறந்தமார்க்கம்
நிறைத்ததெரு வேதைநெறி சாத்திரங்கள்
    நீடாழி யுலகத்தி லுறதிப்போக்கு
பறைத்ததொரு அண்டக்கல் விஷக்கல்லப்பா
    பாருலகில் சித்தருக்குள் பான்மையாமே.
                
விளக்கவுரை :


229. பான்மையாஞ் சித்தருட விஷக்கல்தன்னை
    பாரினிலே மறைத்துவைத்த தோஷத்தாலே
மேன்மையுடன் விஷக்கல்லு போக்குமார்க்கம்
    மெய்யான சித்தரெல்லாம் மறைத்துப்பேசி
கான்மையா மிருக்குமிட ஸ்தானங்கண்டு
    கருத்துடனே யறியாத படியினாலே
வான்மையுடன் யுகந்து பரிபாஷைதன்னில்
    வளமாகச் சொல்லாத தர்க்கம்பாரே.

விளக்கவுரை :


230. பாரேதான் கண்டவிட மார்க்கமெல்லாம்
    பரிவாகப் பூர்த்திருக்கும் பூவைக்கண்டீர்
நேரேதான் பூவல்லவென்றுசொன்னீர்
    நிலையான இடந்தோரு மிருக்கும்பாரு
ஊரேதான் பூபூர்த்தா லுலகழியும்
    வப்பல்லால் வேறொன்றுந் தப்போயில்லை
சீரான முப்பாலே வப்பூவாகும்
    சிறப்பான வப்பாலே முப்பூவாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar