அகத்தியர் பன்னிருகாண்டம் 21 - 25 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 21 - 25 of 12000  பாடல்கள்


21. அதிதமுடன்  அஷ்டமா  சித்துயாவும் 
    அப்பனே  யாமுரைத்தோம்  புலஸ்தியாகேள்
கதிதமுள்ள  செகஜால  குளிகைமார்க்கம்
    கருவான  மோகனங்கள்  வசியந்தானும்
துதிதமுள்ள  செப்பிடுநல்  வித்தைதானும்
    துறையான பேதனங்கள்  உச்சாடனங்கள்
பதிதமுள்ள  ஸ்தம்பனங்கள் ................ சைமூலி
    பகருவேன்  இன்னம்வெகு  கோடிதானே.

விளக்கவுரை :


22. கோடியாம்  கற்பமுதல்  முப்புமார்க்கம்
    கொடிதான  விஷமூலி  ............  க்கு
நாடியே  மலைவளமும்  நதிகள்யாவும்
        நலமுடனே  பா ....... னட  ந்தன்னில்
தேடியே  காண்டமது  கிடைத்துதானால்
    .................. நீயுமொரு  சித்தனாவாய் 
கூடியே  மனோன்மணித்தாய்  அருளிருந்தால்
    குவலயத்தி  லுந்தனுக்கு  வாய்க்கும்பாரே.

விளக்கவுரை :


23. வாய்க்குமே  சித்தர்களு  முனிவர்தாமும்
    வரைகோடி  முறைகோடி  துறைகள்கோடி
தாய்க்கமலம்  வீற்றிருக்கும்  தாயார்தாமும்
    தகமையுடனுந்தனுக்கு  முன்னே  நிற்பாள்
காய்க்குமே  யவரவர்கள்  செய்தநூல்கள்
    கடலாகுமடா  வாதமது  கோடாகோடி
சாய்க்கவே  சாத்திரங்கள்  அனந்தஞ் 
    சதிரான  உட்கருவை  மறைத்தார்பாரே.

விளக்கவுரை :


24. மறைத்தாரே சாத்திரங்கள் மிகவுஞ்செல்லி
    மானிலத்தில் சாபம்......தாச்சு
நிறைத்தாரே தங்கள்தங்கள் மனதின்நேர்மை
    நினைத்தபடி சாத்திரத்தைப் பாடிப் போட்டார்
குறைத்தாரே நூலதனை மாராட்டங்கள்
    குறிப்புடனே பாடிவைத்தா ரனேகநூல்கள்
முறைப்படியே பெருநூலுஞ் சிறுநூல்தன்னை
    முயற்சியுடன் பாடிவிட்டா ரனந்தமாமே.

விளக்கவுரை :


25. ஆமேதான் பலரிடிகள் செய்தநூலை
    அப்பனே மெய்யென்று சொல்லியேதான்
போமேதான் சுட்டலைந்து கெட்டார்கோடி
    பூதலத்தில் பலகோடி மாந்தரப்பா
நாமேதான் சொன்னபடி நீதியில்லை
    நலமான இந்நூல்போல் யாருஞ்சொல்லார்
தாமேதான் அவரவர்கள் செய்தநூலில்
    தப்பாமல் சாபத்தால் முறைபாழாச்சே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar