அகத்தியர் பன்னிருகாண்டம் 61 - 65 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 61 - 65 of 12000 பாடல்கள்



61.மூட்டுகையி லுந்தமக்குப் பழக்கமாகி
    முனையான கேசரத்தை மனதிற்பூட்டி
தாட்டிகமாய்க் கயாதி தேகந்தன்னை
    தகைமையுடன் நிலைநிறுத்திக் கொள்வதற்கு
பூட்டமுடன் பூவுலகில் வேணகோடிகாலம்
    புகழ்ச்சியாய்த் தாமிருந்து சமாதிகாண
வாட்டமுடன் தேகமதைக் கற்றூணாக்க
    வளமையுடன் சொல்லுகிறே னின்னங்கேளே.

விளக்கவுரை :


62.கேளடா புலஸ்தியனே சொல்லக்கேளாய்
    கெவனமுடன் முப்பூவின் மார்க்கஞ்சொல்வேன்
நாளடா கதிரவனால் பூர்க்கும்பூவாம்
    நலமான வழலையென்ற முப்புவப்பா
கோளடா வாராமல் முப்புதன்னை
    குணமுடனே முடிப்பதற்கு குறிகள்சொல்வேன்
மீளடா குருமுடிக்கும் வகையுஞ்சொல்வேன்
    மிக்கான வழலையிட மார்க்கம்பாரே.
          
விளக்கவுரை :


63. மார்க்கமா முப்புவென்றால் முறைகள் சொல்வேன்
    மயங்காதே உழமண்ணு முப்புவாமோ
தீர்க்கமுடன் மூலிகைக ளுப்பாமோசொல்
    தீர்மையுள்ள சிற்றண்டம் முப்பாமேசொல்
சேர்க்கவே பேரண்டம் முப்பாமோசொல்
    செம்மையுடன் சிங்கியது முப்பாமோசொல்
ஏர்க்கவே சாரமது முப்பாமோசொல்
    யெழிலான சவுக்கார முப்பாகாதே.

விளக்கவுரை :


64. ஆகாது சீனமது முப்பாமோசொல்
    அண்டபிண்டஞ் சேர்ந்தாலேமுப்பாமோசொல்
வேகாத சுண்ணாம்பு முப்பாமோசொல்
    வெடியான மதியுப்பு முப்பாமோசொல்
சாகாத தலைப்பிண்டம் முப்பாமோசொல்
    சட்டமுடன் கேசரியு முப்பாமோசொல்
தாகாத வமுரியது முப்பாமோசொல்
    தாரணியில் மூன்றுபடை முப்பொண்ணாதே.    
                       
விளக்கவுரை :


65.ஒண்ணாது முப்பினுட பெருமைசொல்வோம்
    ஓகோகோ நாதாக்கள் சொல்லவில்லை
அண்ணாந்து சாத்திரத்தை மிகவாராய்ந்து
    அலைகடலும் போய்த்திரிந்து முப்பைக்காணார்
சுண்ணாம்பில் தானிருக்குஞ் சூட்சம்போல
    சுடுவாதி யறியாமல் சுருண்டுபோனார்
மண்ணாளும் வேந்தரெல்லாம் முப்புவாலே
    மதிமயங்கிக் கெட்டதொரு கதையைக்கேளே.
   
விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar