திருமூலர் திருமந்திரம் 11 - 15 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

11. அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

விளக்கவுரை :

12. கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே.

விளக்கவுரை :

[ads-post]

13. மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

விளக்கவுரை :

14. கடந்துநினின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.

விளக்கவுரை :

15. ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.

விளக்கவுரை :



திருமூலர் திருமந்திரம் 6 - 10 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

6. அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.

விளக்கவுரை :

7. முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.

விளக்கவுரை :

[ads-post]

8. தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

விளக்கவுரை :

9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

விளக்கவுரை :

10. தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.

விளக்கவுரை :



திருமூலர் திருமந்திரம் 1 - 5 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

பாயிரம்

விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

விளக்கவுரை :

1. கடவுள் வாழ்த்து

1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.

விளக்கவுரை :

2. போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

விளக்கவுரை :

[ads-post]

3. ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே.

விளக்கவுரை :

4. அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

விளக்கவுரை :

5. சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 436 - 440 of 12000 பாடல்கள்


436. வருந்திடவே தென்பொதிகை சித்துதாமும்
    வண்மையுடன் வேதமுனி தன்னைப்பார்த்து
அருந்ததிக்கு வொப்பான ரிடியார்தாமும்
    அன்புடனே தாமுறைத்த காவியத்தை
பொருந்தவே எங்களுக்கு வுபதேசித்துப்
    பொங்கமுடன் நூலதனைக் கொடுத்தீரானால்
இருந்திடத்தில் நாமிருந்து தவசிமார்கள்
    எழிலாகக் காவியத்தைப் பார்ப்போம்தாமே.

விளக்கவுரை :


437. பார்ப்போமே யென்றுசொல்ல முனிவர்தாமும்
    பாங்குடனே நூல்கொடுத்தால் லோகமெல்லாம்
தீர்க்கமுடன் சித்துமய மாகிப்போகும்
    திறளான கருவிகர ணாதியெல்லாம்
ஏர்க்கவே யிதிலடக்க மனந்தங்கோடி
    எழிலாகக் வேதமுனி சொன்னவர்க்கு
ஆர்க்கவே யிதிலடக்க மனந்தங்கோடி
    அப்பனே பொய்யொன்று மில்லைதானே.

விளக்கவுரை :


438. தானான நூலதனைப் பாடியல்லோ
    சத்தியங்கள் மிகவாகச் செய்துமேதான்
கோனான வேதமுனி சொன்னவாக்கு
    குகைதனிலே வொளித்துவைத்தார் காவியத்தை
பானான சித்துமுனி வனேகம்பேர்கள்
    பாடுபட்டு வெகுவாக நூல்கேட்டார்கள்
மானான வேதமுனி வியாசர்தாமும்
    மார்க்கமுடன் நூல்கொடே னென்றிட்டாரே.

விளக்கவுரை :


439. என்றுமே தடுத்துமிகச் சொல்லும்போது
    எழிலான முனியாரும் மனதிரங்கி
வென்றிடவே நூலதனைக் கொடுத்துத்தானும்
    விருப்பமுடன் சாபமதை நிவர்த்திசெய்து
சென்றிடவே லோகத்தில் கர்மிகட்கும்
    சிறுவர்கட்கும் கபடுள்ள நெஞ்சுளோர்க்கும்
ஒன்றுமே காட்டாமல் புத்திகூறி
    உத்தமர்க்கு நூல்கொடுத்தார் முனிவர்தாமே.

விளக்கவுரை :


440. முனியான வியாசர்முனி மனமகிழ்ந்து
    உத்தமராஞ் சித்தர்கட்கு கிருபைகூர்ந்து
கனிவுடனே நூலதனைக் கையிலேந்தி
    கருணையுடன் மனதுவந்து பரிவுசொல்லி
தனியான காவியத்தை வெளிகாட்டாமல்
    தாரணியில் மர்மமா யிருந்துகொண்டு
புனிதனா யிருக்கவென்று வரமுந்தந்து
    புகழாக வாசீர்மஞ் செய்திட்டாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 431 - 435 of 12000 பாடல்கள்


431. என்னலாம் புலஸ்தியனே யின்னங்கேளு
    எழிலான வதிசயங்கள் கூறுவேன்பார்
பன்னவே வியாசமுனி சமாதிபக்கல்
    பாங்கான சித்தர்முனி வாயிரம்பேர்
சொன்னபடி ரிடியாரைச் சுத்தியல்லோ
    சுத்தமுடன் சமாதிதனைப் பாதுகாத்து
நன்னயமாய் வுலாகொடுத்து நிற்பார்தாமும்
    நலமான ரிடிக்கூட்ட மெத்தவாமே.

விளக்கவுரை :


432. மெத்தவே சித்துமுனி ரிடிகள்கூட்டம்
    மேதினியி லங்குண்டு சொல்லொண்ணாது
சத்தமா ரிடிகளெல்லாந் தவசிருப்பார்
    சதகோடி சூரியர்போல் தோற்றும்பாரு
நித்தமூடன் வேதமுனி வியாசர்தாமும்
    நேரான காவியங்க ளோதுவார்பார்
சுத்தமுடன் ஞானோப தேச நூலை
          சுருதிபொருள் கருவியுடன் சொல்லுவாரே.

விளக்கவுரை :


433. சொல்லவே வேதமுனி வியாசர்தாமும்
    தொல்லுலகில் பாசமற்று வினையகற்றி
எல்லோருந் தீவினையை யகற்றியல்லோ
    ஏகாந்தக் காவியத்தைக் கேட்டுமேதான்
நல்லவழி நற்பொருளை வுணர்ந்தாராய்ந்து
    நலமான மெய்ப்பொருளைக் காணவென்று
புல்லவே யெண்ணாயிரங் காவியந்தான்
    புகழாகப் பாடிவைத்தா ருண்மையாமே. 

விளக்கவுரை :


434. உண்மையாம் ஞான காவியமதாக
    உத்தமனே யெண்ணாயிரங் காவியந்தான்
வண்மையாய் வுலகத்தின் நீதியெல்லாம்
    வளப்பமுடன் கண்டல்லோ மிகவாராய்ந்து
திண்மையாம் யிருளதனைக் கதிரோன்தானும்
    தீர்க்கமுடன் நீக்குகின்ற தன்மைபோல
கண்மையுடன் யிருளகத்தி வேதநூலைக்
    காசினியில் தாமுரைத்தார் பெருமைபாரே.

விளக்கவுரை :


435. பெருமையாம் யெண்ணாயிரக் காவியந்தான்
    பேரான வியாசர்முனி பாடியல்லோ
அருமையாய்ப் பாடிவைத்த நூல்கள்தம்மை
    அப்பனே குகைதனிலே பதனம்பண்ணி
பெருமையாய் நூலதனைச் சாபமிட்டு
    பொங்கமுடன் தன்குகைக்குள் வைத்திருக்க
வெருமையாய்ச் சித்துமுனி ரிடிகள்தாமும்
    மேதினியில் நூல்கேட்க வருந்திட்டாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 426 - 430 of 12000 பாடல்கள்


426. தள்ளிட்டேன் மாந்தரிட செனனமெல்லாந்
    தாரணியில் யிப்படியே பொய்வாழ்வப்பா
உள்ளிட்ட சித்தர்முனி ரிடிகள்தாமும்
    உகந்ததோர் தேவதா ரிடியைத்தானும்
சுள்ளிட்ட தேகமது மண்ணாய்ப்போகும்
    சுந்தரனே வுலகமது  பொய்வாழ்வாகும்
விள்ளவே யுலகமெல்லாம் பொய்யேயாகும்
    வேதாந்த சித்தருட  வாக்குதாமே.

விளக்கவுரை :


427. வாக்கான யின்னம்வெகு மார்க்கஞ்சொல்வேன் 
    மகத்தான தென்பொதிகை கிழக்கேயப்பா
நோக்கான வன்பது காதந்தானும்
    நுணுக்கமுள்ள நகரமது வொன்றுகாணும்
தேக்கான நாடதுதான் சொல்லலாகும்
    தேசத்தில் வினோதமுள்ள சித்துநாடு
தூக்கான சித்துமுனி ரிடிகள்தாமும்
    துறையான கூட்டமது சேர்வார்பாரே. 

விளக்கவுரை :


428. பாரேதான் காடதனில் மண்டபந்தான்
    பாங்கான தென்பொதிகைச் சார்பிலுண்டு
நேரேதான் மண்டபமாங் கோட்டைமண்ணாம்
    நெடுங்காலஞ் சென்றதொரு யீசர்கோட்டை
ஊரேதான் பூனீறு விளையும்நாடு
    உத்தமனே நாதாக்க ளிருக்குந்தேசம்
வேரேதான் தேசமது யிதற்கீடுண்டோ
    வேதாந்த சித்தர்முனி யிருக்கும்நாடே.

விளக்கவுரை :


429. நாடான கோட்டையது யீசர்கோட்டை
    நலமான தோப்பெல்லாந் தேக்கேயாகும்
கோடான கோடிசித்து சமாதியுண்டு
    கொற்றவர்கள் குவலயத்தில் மாண்டமாண்பர்
நீடான காயகற்பங் கொண்டமான்பர்
           நிலையான சமாதியது கணக்கோயில்லை
தாடான தேகமது வழியாமற்றான்
    தகைமையுடன் பூமிதனி லிருக்கும்பாரே.   

விளக்கவுரை :


430. பாரேதான் கோட்டைக்குள் கதண்டுதானும்
    பாங்கான  மாந்தர்களைச் சேரவொட்டா
நேரேதான் சுரங்கமது நீணிலத்தில்
    நேர்மையுடன் பதிங்காத வழிதான்செல்லும்
சேரேதான் சுரங்கமது நடுமையத்தில்
    சிறப்பான வேதமுனி வியாசர்தாமும்
கூரேதான் சமாதியது யிருக்கும்பாரு
    குவலயத்தி லதிதமிது யென்னலாமே.

விளக்கவுரை :

Powered by Blogger.