போகர் சப்தகாண்டம் 3276 - 3280 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3276. எட்டான சாமமது வரைத்தபோது எழிலான செந்தூரம் மெழுகுபோலாகும்
திட்டமுடன் தானரைத்து பில்லைதட்டி தீர்க்கமுடன் ரவிதனிலே காயப்போடு
சூட்டமது பில்லையாய் தட்டியேதான் குறிப்புடனே சீலைசெய்ய வகையைக்கேளு
வட்டமென்ற வோட்டிலிட்டுச் சீலைசெய்து வளமைபெற கெஜபுடமாய் போட்டுத்தீரே

விளக்கவுரை :


3277. தீரவென்றால் புடமாறி யெடுத்துப்பாரு திறலான செந்தூரஞ் சொல்லப்போமோ
சாரவே செந்தூரந் தனையெடுத்து சாங்கமுடன் விராலியிட தயிலத்தாலே
பாரமுடன் தானரைப்பாய் நாலுசாமம் பதராமல் மெழுகதுபோலவேதான்
நேரமுடன் பில்லையது லகுவாய்தட்டி நேர்புடனே ரவிதனிலே காயப்போடே

விளக்கவுரை :

[ads-post]

3278. போடவே வோட்டிலிட்டு சீலைசெய்து பொங்கமுடன் கெஜபுடமாய் போட்டுத்தீரு
நீடவே இப்படியே ஐந்துபத்து நினைவாகப் புடம்போடச் செந்தூரிக்கும்
தேடவே செந்தூரம் எடுத்துப்பாரு தேசிகனே காரமது கூரொண்ணாது  
பாடவே இன்னம்வெகு மூலிசொல்வேன் பாலகனே நீயறியாய் பண்பாய்த்தானே

விளக்கவுரை :


3279. பண்பான மூலிகைதான் சொல்லக்கேளு பாரினிலே மெத்தவுண்டு காயகல்பம்
திண்பான மூலிகை வல்லாரைகற்பம் திறமான மூலியது சார்பிழிந்து
நண்பான செந்தூரங்கல்வமிட்டு நயம்பெறவே மூலியிட சாற்றாலாட்டி
வண்பாக நாற்சாம மரைத்தபோது வளமாக மெழுகதுபோலாகும்பாரே

விளக்கவுரை :


3280. பாரேதான் மெழுகதனை பில்லைதட்டி பாகமுடன் ரவிதனிலே காயப்போடு
சீரேதான் வோட்டிலிட்டுச் சீலைசெய்து சிறப்பான கெஜபுடந்தான் போட்டுத்தீரு
நேரேதான் செந்தூரங்காரமேறி நெறியான காயகற்ப குருவுமாச்சு
தீரேதான் பின்னுமந்த செந்தூரத்தை தீர்க்கமுடன் புடம்போட வகையைத்தேடே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3271 - 3275 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3271. கறப்பான செந்தூரந் தனையெடுத்து கருவாகக் கையானின் சாற்றினாலே
உறுப்பாக தானரைப்பாய் நாலுசாமம் உத்தமனே முன்போல பில்லைதட்டி
தெறுப்பான பில்லையது காய்ந்தபின்பு தேற்றமுடன் வோட்டிலிட்டுச் சீலைசெய்து
குறுப்பான கெஜபுடத்தில் போட்டாயானால் கொற்றவனே செந்தூரமாகுந்தானே

விளக்கவுரை :


3272. தானான செந்தூரஞ் சிவப்பதற்கு தன்மையுள்ள புடமதுவு மைம்பதாகும்
கோனான யெமதையர் காலாங்கிநாதர் குருசொன்னபடியாக புடமேபோடு
மானான புடமதுவும் அம்பதானால் மகத்தான செந்தூரஞ் சிவப்புமெத்த
தேனான செந்தூரந் தனையெடுத்து செப்புகிறேன் பின்னுமொரு பாகங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3273. பாகம்போம் எண்ணாதே கெந்திதாரம் பகருமந்த செந்தூரம் நாலுக்கொன்று
வேகமுடன் சரக்கதனை ஒன்றாய்ச் சேர்த்து விருப்பமுடன் சூதமது எட்டிலொன்று
சாகமுடன் சரக்கெல்லாம் ஒன்றாய்ச்சேர்த்து சட்டமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நேசமுடன் பொடுதலையின் சாற்றினாலே நேர்ப்பாகத் தானரைத்து பில்லைதட்டே

விளக்கவுரை :


3274. தட்டியே ரவிதனிலே காயவைத்து தகமையுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து
சட்டமுடன் கெஜபுடமாய் போட்டாயானால் சார்பான செந்தூரம் சிவப்புகாணும்
நட்டமில்லா புடமதுவும் ஐம்பதாகும் நயமுடனே பாகமது தவிறிடாமல்
இட்டமுடன் பும்போடச் செந்தூரிக்கும் எழிலான செந்தூரஞ் சொல்லொணாதே

விளக்கவுரை :


3275. சொல்லவென்றால் நாவில்லைப் பாவுமில்லை சுந்தரனே சித்தர்செய்யும் வேதையாச்சு
வெல்லவே செந்தூர மார்க்கந்தன்னை விருப்பமுடன் காரமது கொள்வதற்கு
புல்லவே யின்னமொரு பாகங்கேளு புகழான செந்தூரஞ் சிவப்புகாண
கொல்லவே விலாரியின் தயிலத்தாலே கொற்றவனே தானரைப்பாய் சாமமெட்டே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3266 - 3270 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3266. போடவே செம்புருக்கி கிராசமீவாய் பொங்கமுடன் லகுவதாய் தாக்கிக்கொண்டு
நீடவே செம்புதனை யாற்றிப்பின்பு நினைவாக மூசைதனையுடைத்துப்பாரு
கூடவே செம்பதுவுங் களங்கமாகும் குணமான வூரலது யற்றப்போச்சு
வாடவே திரியாதே மைந்தாகேளு வகுப்புடனே யிப்பாகஞ் செய்துபாரே

விளக்கவுரை :


3267. பார்க்கையிலே செம்பதுவுங் களங்குமாகி பரிசுத்த களங்குமது என்னசொல்வேன்
தீர்க்கமுடன் களங்கதனை எடுத்துக்கொண்டு தீரமுடன் கல்வமதில் இட்டுமைந்தா
ஏர்க்கவே பொடிசெய்து மைபோலாக்கு எழிலான தனில்வறைந்துமேதான்
தீர்க்கமுடன் மூசைதினிலடைத்துமைந்தா சிறப்புடனே சீலைசெய்து ரவியில்தாக்கே

விளக்கவுரை :

[ads-post]

3268. தாக்கவே மூசையது காய்ந்தபின்பு தகமையுடன் சரவுலையில் வைத்துவூது
நோக்கமுடன் செம்பதுவும் வூரலற்று நொடிக்குள்ளே களங்கமென்ற பேருமாச்சு
தூக்கவே செம்பென்ற களங்குதானும் துரையான வேதைமுகம் தன்னிற்தோன்றும்
வாக்கதுதான் தப்பாது போகர்தாமும் வரமுடனே பாடிவைத்த வண்மையாமே 

விளக்கவுரை :


3269. வண்மையாம் சத்தெல்லாம் சமனதாக வளமுடனே தானுருக்கி எடுத்துக்கொண்டு
தண்மையுடன் தங்கமது நாலுக்கொன்று தாக்கவே களங்குடனே தங்கஞ்சேர்ந்து
திண்மையாம் களங்கதுவும் ஒளியுவீசும் தீர்க்கமுடன் களங்குக்கு எட்டிலொன்று
உண்மையாம் கெந்தியது கூட்டியேதான் உத்தமனே தானரைப்பாய் சாமம்நாலே

விளக்கவுரை :


3270. நாலான சாமமது வரைக்கும்போது நலமான சூதமதை எட்டிலொன்று
வேலான பொற்றலையின் சாற்றாலாட்டி விருப்பமுடன் பில்லையது லேசாய்தட்டி
மாலான ரவிதனிலே காயப்போடு மார்க்கமுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து
தாலான கெஜபுடத்தில் போட்டாயானால் தளிர்ச்சியுடன் வெந்ததுவும் கறுப்புமாமே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 3261 - 3265 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3261. ஆட்டவென்றால் விதிசொல்வேன் மதியாய்கேளு வப்பனே சுத்தித்த தாம்பரத்தை
நீட்டமுடன் மருந்தையெல்லாம் தாம்பரத்தில் நீதியுடன் கீழ்மேலும் பூசிப்போடு
வாட்டமுடன் ரவிதனிலே காய்ந்தபின்பு வகையுடனே வோட்டிலிட்டுச் சீலைசெய்து
தேட்டமுடன் கோழியென்ற புடத்தைப்போடு தெளிவாக புடமாறி எடுத்துப்பாரே

விளக்கவுரை :


3262. பார்க்கையிலே செம்பதுவும் பொருமிக்காட்டும் பதமதுதான் சரியாச்சு தாம்பரங்கள்
தீர்க்கமுடன் பனைதனிலே யடித்தபோது திறமுடனே செம்புக்கு வதந்தான்போகும்
மூர்க்கமென்ற வூரலதுயற்றுப்போச்சு முழுமக்கள் தாமடுயார் செம்புவூரல்
சேர்க்கையிலே இந்தமுறை பத்துபாகம் செவ்வையுடன் புடம்போட்டு எடுத்துப்பாரே

விளக்கவுரை :

[ads-post]

3263. எடுத்துமிகப் பார்க்கையிலே என்னசொல்வேன் யெளிதமாஞ் செம்பதுவும் ஏத்தமேத்த
அடுத்துநின்ற பேர்களுக்கு மிந்தபாகம் அறியாமற் செய்பவனே புத்தியுள்ளான்
தொடுத்தகுறி தன்முறைபோல் செய்யுமாசான் தோற்றாமல் கண்ணுக்கு செய்வான்பாரு
கெடுத்துமே முறைபோல செய்துகாட்டி கெவனமுடன் வுட்கருவை காட்டான்தானே

விளக்கவுரை :


3264. தானான தாம்பரத்தை எடுத்துக்கொண்டு தண்மையுடன் குருசொன்ன நேர்பாகந்தான்
கோனான எனதையர் காலாங்கிநாதர் குருசொன்ன வாக்கதுபோல் தாம்பரத்தை
மானான தாம்பரத்தை சேர்தான்கொண்டு மாட்டடா வஜ்ஜிரமாங் குகையிற்றானும்
வேனான செம்புநின்று வுருகும்போது விருப்பமுடன் அதிற்போட சரக்குகேளே

விளக்கவுரை :


3265. சரக்கென்றால் வீரமது வெள்ளையாகும் தாக்கான பாஷாணங்கெவுரியாகும்
திரக்கமுடன் காரமது பூரமாகும் திகழான சூதமது சரிநேராகும்
உரக்கமுடன் சரக்கெல்லாம் சரியாய்த் தூக்கி வுத்தமனே கல்வமதில் பொடியாய்ச்செய்து
இரக்கமுடன் தாம்பரத்துக் கிவைசேர்பாதி எழிலுடனே கிராசமது நினைவாய்ப்போடே

விளக்கவுரை :


Powered by Blogger.