போகர் சப்தகாண்டம் 3271 - 3275 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3271 - 3275 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3271. கறப்பான செந்தூரந் தனையெடுத்து கருவாகக் கையானின் சாற்றினாலே
உறுப்பாக தானரைப்பாய் நாலுசாமம் உத்தமனே முன்போல பில்லைதட்டி
தெறுப்பான பில்லையது காய்ந்தபின்பு தேற்றமுடன் வோட்டிலிட்டுச் சீலைசெய்து
குறுப்பான கெஜபுடத்தில் போட்டாயானால் கொற்றவனே செந்தூரமாகுந்தானே

விளக்கவுரை :


3272. தானான செந்தூரஞ் சிவப்பதற்கு தன்மையுள்ள புடமதுவு மைம்பதாகும்
கோனான யெமதையர் காலாங்கிநாதர் குருசொன்னபடியாக புடமேபோடு
மானான புடமதுவும் அம்பதானால் மகத்தான செந்தூரஞ் சிவப்புமெத்த
தேனான செந்தூரந் தனையெடுத்து செப்புகிறேன் பின்னுமொரு பாகங்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3273. பாகம்போம் எண்ணாதே கெந்திதாரம் பகருமந்த செந்தூரம் நாலுக்கொன்று
வேகமுடன் சரக்கதனை ஒன்றாய்ச் சேர்த்து விருப்பமுடன் சூதமது எட்டிலொன்று
சாகமுடன் சரக்கெல்லாம் ஒன்றாய்ச்சேர்த்து சட்டமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
நேசமுடன் பொடுதலையின் சாற்றினாலே நேர்ப்பாகத் தானரைத்து பில்லைதட்டே

விளக்கவுரை :


3274. தட்டியே ரவிதனிலே காயவைத்து தகமையுடன் வோட்டிலிட்டு சீலைசெய்து
சட்டமுடன் கெஜபுடமாய் போட்டாயானால் சார்பான செந்தூரம் சிவப்புகாணும்
நட்டமில்லா புடமதுவும் ஐம்பதாகும் நயமுடனே பாகமது தவிறிடாமல்
இட்டமுடன் பும்போடச் செந்தூரிக்கும் எழிலான செந்தூரஞ் சொல்லொணாதே

விளக்கவுரை :


3275. சொல்லவென்றால் நாவில்லைப் பாவுமில்லை சுந்தரனே சித்தர்செய்யும் வேதையாச்சு
வெல்லவே செந்தூர மார்க்கந்தன்னை விருப்பமுடன் காரமது கொள்வதற்கு
புல்லவே யின்னமொரு பாகங்கேளு புகழான செந்தூரஞ் சிவப்புகாண
கொல்லவே விலாரியின் தயிலத்தாலே கொற்றவனே தானரைப்பாய் சாமமெட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar