அகத்தியர் பன்னிருகாண்டம் 326 - 330 of 12000 பாடல்கள்


326. பதினாறு பார்க்கையிலே யெல்லாஞ்சித்தி
    பார்லோகம் வசியமதாய் கைக்குள்ளாகும்
மதியான பூரணமாம் கும்பமப்பா
    மகத்தான பதினாறும் பார்க்கவேண்டும்
விதியான கொங்கணவர் திருமந்திரந்தான்
    விட்டகுறை முப்பத்திரண்டு மறியவேண்டும்
சதியில்லா கருவூரார் சாலமப்பா
    சட்டமுடன் அறுபத்து நாலுங்காணே.

விளக்கவுரை :


327. காணவே நாலுகாண்டஞ் சுருக்கமப்பா
    கருவாக வறுபத்து நாலும்பாரு
தோணவே திருமூலர் யெட்டும்பாரு
    தோற்றமுடன் தேவிபூசை பதினாறும்பார்
வேணபடி சண்முகத்தின் பூசையப்பா
    விருப்பமுடன் பதினாறு பார்க்கவேண்டும்
பாணமுடன் ரோமரிடி சுருக்கமப்பா
    பாகமுடன் வறுபத்து நாலும்பாரே.
   

விளக்கவுரை :


328. நாலான ரோமரிடிக் கண்டசுத்தி
    நலமான சூத்திரமும் பதினாறும்பார்
காலான ரோமரிடி நாலும்பாரு
    கருவான வென்ஞானம் பதினாறும்பார்
சேலான போகருட வாதசூத்திரம்
    செம்மையுடன் பதினாறும் பார்க்கவேண்டும்
நூலான ராமதேவர் சூத்திரந்தான்
    நுணுக்கமுடன் நூல்பார்க்க வேண்டுந்தானே.

விளக்கவுரை :


329. தானான கொங்கணவர் பெருநூலப்பா
    தாக்கான காவியமாஞ் சுருக்கம்பாரு
வேனான கண்டசுத்தி நூறும்பாரு
    விருப்பமுடன் சுருக்கமது பத்தும்பாரு
கோனான பெருநூ லாயிரந்தானப்பா
    கொற்றவனே கருக்கிடையும் இருநூறும்பார்
தேனான புடபாக மைம்பதும்பார்
    தெளிவாக சுருக்கமது பத்தும்பாரே.

விளக்கவுரை :


330. பத்தான சுருக்கமென்ற கற்பம்நூறு
    பாங்கான சட்டமுனி நாதர்கற்பம்
சித்தான யாக்கோபு வன்பதும்பார்
    சிறப்பான ஞானமது பதினாறும்பார்
முத்தான ஆராதாரச் சுருக்கம்
    முனையான பூஜாவிதி யிருபதும்பார்
சத்தான சட்டமுனி ஞானம்பத்து
    சதுரான போகரது சுருக்கம்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 321 - 325 of 12000 பாடல்கள்


321. ஆமேதான் கொங்கணவர் காவியத்தில்
    அப்பனே சுருக்கமது நூரும்பாரு
நாமேதான் சொன்னபடி வாயிரந்தான்
    நலமான பூரண காவியத்துக்கப்பா
வேமேதான் சுருக்கமது நூறும்பாரு
    மிக்கான ஜெயகண்டி வாயிரந்தான்
தாமேதான் சுருக்கமது நூறும்பாரு
    தாக்கான சூத்துரமும் பத்தும்பாரே.

விளக்கவுரை :


322. பாரப்பா போகரது கருமானந்தான்
    பாங்கான வெண்பதுவம்பாருபாரு
நேரப்பா கொங்கணவர் புடபாகந்தான்
    நெருக்கமுடனன்பதுவும் பார்க்கவேண்டும்
சேரப்பா கொங்கணவர் கண்டசுத்தி
    சீரான வன்பதுவும் பார்த்தால்நன்று
கூரப்பா புசண்டரத வன்பதுந்தான்
    கொப்பெனவே பார்த்தாக்கால் சுத்தியாமே.

விளக்கவுரை :


323. சுத்தியாம் காயசுத்தி பெறவேண்டும்
    சூட்சாதி பிரணவத்தை அறியவேண்டும்
நித்தியமாம் சரக்குசுத்தி யறியவேண்டும்
    நீயான சத்துருமித்துரு பார்க்கவேண்டும்
புத்தியாய் கும்பமுனி வன்பதப்பா
    புகழுடனே பார்த்தாலே யெல்லாஞ்சித்தி
சித்திபெற தட்சணா மூர்த்திநாயன்
    சிறப்பான லோக மாரணத்தைப்பாரே.

விளக்கவுரை :


324. பார்க்கவென்றால் யெந்தனது கருமானந்தான்
    பரிவான திருக்கூத்து யறுபத்துநாலு
தீர்க்தமுட னகஸ்தியர் அட்சர ஞானம்
    திறமுடனே முப்பதுவும் பார்க்கவேண்டும்
ஏர்க்கவே வசுவனிப் பிரயோகந்தான்
    எழிலான பாணமது நாற்பத்திரண்டு
மார்க்கமுடன் ஞான காவியச்சுருக்கம்
    மதிப்புடனே யிருபதுந்தான் பார்த்திடாயே.

விளக்கவுரை :


325. மதிப்பான போகர்பல திரட்டுத்தானும்
    மகத்தான வன்பதுவும் பார்க்கவேண்டும்
துதியான இடைக்காடார் வல்லாதியப்பா
    துப்புரவாம் முப்பதுவும் பார்க்கவேண்டும்
விதியான சண்டமா ருதந்தானப்பா
    விருப்பமுடன் பதினாறுங் காணவேண்டும்
பதியான கருவூரார் அஞ்சனந்தான்
    பாண்மையுடன் பதினாறு பார்த்திடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 316 - 320 of 12000 பாடல்கள்


316. ஒன்றுடனே வியாசமுனி சொன்னநூலாம்
    உத்தமனே வாயிரத்துச் சொச்சநூலாம்
வென்றிடவே சொச்ச சூத்திரந்தான்நூறு
    வேதமுனி தானுரைத்த வாக்கியம்பார்
தென்றிசையில் தட்சணா மூர்த்தினாயன்
    தேசத்தில் மாந்தர்கள் பிழைக்கவென்று
முன்னுரைத்த பெருநூலாங் காவியந்தான்
    உத்தமனே ஆயிரத்து சொச்சம்பாரே.

விளக்கவுரை :


317. சொச்சமாய் சுருக்கமது நூறும்பாரு
    சோராமல் சூத்திரமாய் பத்தும்பாரு
மிச்சமாம் கைலாச சட்டநாதர்
    மீண்டுரைத்த நிகண்டுக்குச் சுருக்கமப்பா
அச்சுமில்லா எண்பதுவும் பதினாறும்பார்
    அப்பனே சிவவாக்கியர் குளிகைபாரு
கச்சலன்றி கருவூரார் சொன்னநீதி
    காசினியி லாராலும் பார்க்கொண்ணாதே.

விளக்கவுரை :


318. ஒண்ணாது மச்சமுனி யெண்ணூறுக்கு
    வுத்தமனே பதினாறு சுருக்கம்பாரு
எண்ணாது போகருக்கு சுருக்கம்பாரு
    யெழிலாகப் பாடிவைத்தேன் நூறதாகும்
நண்ணான வேதமுனி நூலுக்கப்பா
    நலமான ரெண் நூலும் பார்க்கவேண்டும்
விண்ணவே காவியம் பன்னீராயிரத்தில்
    விருப்பமுடன் பாடிவைத்த சூத்திரம் நூறுபாரே.

விளக்கவுரை :


319. சூத்திரமாம் வேதரிடி சொன்னநூலில்
    சுருதியுட குருக்கிடையுந் தன்னைப்பாரு
நேந்தியுடன் சிவானந்தர் சொன்னநூலில்
    நேர்மையுடன் தீட்சாவிதி முன்பின்பாரு
பூர்த்தியாய் காவியமா யிரந்தான்பாரு
    புகழான சூத்திரமும் பத்தும்பாரு
சாத்திரங்கள் தப்பாமல் விதியணியாய்ப்பாரு
    சட்டமுடன் பார்த்தவர்கள் சித்தராமே. 

விளக்கவுரை :


320. சித்தராஞ் சிவஜால மாயிரத்தில்
    தேர்ந்தெடுத்த சூத்திரமும் நூறும்பாரு
வித்தகனாய்ப் பிறந்தாலும் லாபமென்ன
    விதியறியான் முறையறியான் வீணாள்போக்கன்
சுத்தமுடன் சுப்பிரமணியர் சொன்னநீதி
    சூட்சமடா வாதாரக் கருவிபத்து
நித்தமுடன் பார்த்துமல்லோ வழியறிந்து
    நியமத்தில் நிற்பவனே முத்தனாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 311 - 315 of 12000 பாடல்கள்


311. பார்க்கவே கருவூரார் பரிசனந்தான்
    பாண்மைபெற எண்பதுவும் பண்பாய்நோக்கு
தீர்க்கமுடன் என்னூலு பதினாறப்பா
    திறமான பரிசனத்தைப் பாருபாரு
ஏர்க்கவே தூம்பிரமாம் யெந்தன்னூலு
    எழிலான அன்பதுவும் பார்க்கநன்று
சேர்க்கவே யெட்சணியா மைம்பதும்பார்
    சிறப்பான ரோமரிடி கூறும்வாறே.

விளக்கவுரை :


312. வாறான பட்சணியும் பார்த்தபின்பு
    வகுப்பான யெட்சணியும் பாருபாரு
கூறான தன்வந்திரி கியாழம்நூறு
    கொற்றவனே பார்த்தாலே சிந்தனாவாய்
தேறான நந்தீசர் பூசாவிதிதானும்
    தேற்றமுடன் பார்ப்பதுவு மெத்தநன்று
வேறான சட்டமுனி கியாழம்நூறூ
    விருப்பமுடன் பார்த்தாக்கால் காயசித்தி
சாரான தட்சணா மூர்த்திநாயன்
    சட்டமுட ணன்பதுதான் பார்ப்பாய்தானே.

விளக்கவுரை :


313. தானான புலஸ்தியனே சொல்லக்கேளுஞ்
    சார்பான வுன்மந்திரந் திருமந்திரந்தான்
தேனான அன்பதுவும் பார்த்தபின்பு
    தெளிவாக சோதிமா முனிவர்சொன்ன
பானான போகருட சடாட்சரந்தான்
    பட்சமுடன் எண்பதுவும் பார்க்க வேண்டும்
கோனான எண்பதுவும் பார்க்க வேண்டும்
    கொப்பெனவே காவியமாஞ் சுருக்கம்நூறே.

விளக்கவுரை :


314. நூறான போகருட மறப்புசூத்திரம்
    நுட்பமுடன் முப்பத்தி ரெண்டும்பாரு
வானான போகரது குளிகைமார்க்கம்
    வகுப்பணியாய் முப்பத்தி ரெண்டும்பாரு
தேனான போகரது மூலிகைவேதை
    தெளிவாக வறுபத்து நாலுபாரு
மீறான பெரு நூல் காவியந்தானப்பா
    மிக்கான சுருக்கம் பதினஞ்சும்பாரே.

விளக்கவுரை :


315. அஞ்சான வேதமுனி சொன்னநூலாம்
    அழகான காவியமா யிரந்தானாகும்
துஞ்சாத சுருக்கமப்பா இருபதாகும்
    துறைவான சூத்திரமு நூறதாகும்
கஞ்சமுனி தானுரைத்த பெருநூலப்பா
    காசினியி லாயிரமாங் காவியந்தான்
மிஞ்சான சூத்திரந்தான் காவியத்தின்சொச்சம்
    மிக்கான அன்பத்தி யொன்றும்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 306 - 310 of 12000 பாடல்கள்


306. தானான சூதமுனி அன்பத்தொன்று
    தாக்கான பிரம்மமுனி இருபத்தொன்று
கோனான கமலமுனி எண்பத்தொன்று
    கொற்றவனே அஷ்ட சூத்திரந்தான்பாரு
வேணான சட்டமுனி பதானாறும்பார்
    வேகமுடன் தன்வந்திரி பதினாறும்பார்
பானான புலிப்பாணி இருபத்தைந்து
    பாங்குடனே பார்ப்பதுவே மெத்த நன்றே.

விளக்கவுரை :


307. நன்றான புலிப்பாணித் திலர்தமப்பா
    நலமாக விருபத்தி யைந்தும்பாரு
குன்றான சோதிட மைம்பதும்பார்
    குறிப்பான புலிப்பாணி பதினாறும்பார்
தன்றான கோரக்க ரெண்பதும்பார்
    தகையுள்ள வால்மீகர் முப்பத்திரெண்டு
அன்றான வரரிடி அன்பதும்பார்
    அழகான யென்னூலு நூறும்பாரே.

விளக்கவுரை :


308. நூறூன சிவராஜ யோகமப்பா
    நுணுக்கமுள்ள கருவிகர ணாதிதோன்றும்
கூறான மச்சமுனி பாரிசாதங்
    கொப்பெனவே முப்பத்தி ரெண்டுமேபார்
நேரான யென்னூலாம் பதினாறும்பார்
    நேர்மையுடன் உட்கருவு வெளியாய்த்தோன்றும்
பாரான கொங்கணவர் சூத்திரந்தான்
    பாங்குபெற முப்பத்தி ரெண்டும்பாரே.
  
விளக்கவுரை :


309. ரெண்டான கமலமுனி சூத்திரந்தான்
    எழிலான பதினாறு சுருக்கமேபார்
துண்டான சூத்திரமாம் நூறுமேபார்
    துப்புரவாய் சட்டமுனி சூத்திரந்தான்
பண்டான அறுபத்து நாலுமேபார்
    பாங்குபெற தேரையர் நூறும்பாரு
உண்டான அன்பத்தி ரெண்டுசூத்திரம்
    உத்தமனே பார்ப்பதுவும் நன்மையாமே.
       
விளக்கவுரை :


310. ஆமேதான் பஞ்சாட்சரந்தான்
    அப்பனே அன்பது சூத்திரம்பா
தாமேதான் பிரம்மமுனி சிவராஜமப்பா
    தக்கான அறுபத்து நாலுமேபார்
நாமேதான் சொன்னபடி எந்தன்னூலு
    நலமான எமகாண்டம் பதினாறும்பார் 
போமேதான் யூகிமுனி சூத்திரந்தன்
    பொங்கமுடனன்பதுமே பார்த்திடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 301 - 305 of 12000 பாடல்கள்


301. பாரப்பா என்சூத்திரம் பத்தும்பாரு
    பாங்கான கொங்கணவர் முப்புபாரு
சீரப்பா மதிவெண்பா வகாரம்பாரு
    சிறப்பான மதிவெண்பா நூறும்பாரு
கூரப்பா மூலவர்க்கம் பத்தும்பாரு
    குறிப்பான கக்கிஷமும் பத்தும்பாரு
சேரப்பா யெந்தனது சூத்திரந்தான் 
    திறமான அன்பதுதான் பார்க்கநன்றே.

விளக்கவுரை :


302. நன்றான வேதாந்த சூத்திரந்தான்
    நலமான பெருங்குழம்பு யிருபத்தைந்து
குன்றான சொச்ச சூத்திரந்தானப்பா
    கொற்றவனே அன்பத்தி ஒன்றும்பாரு
தன்றான பதினாறு காரசாரம்
    தகைமையுடன் பார்ப்பதுவே மெத்தநன்று
பன்றான வாசமுனி சூத்திரந்தான்
    பாங்குபெற எழுபதுந்தான் பார்த்திடாயே.

விளக்கவுரை :


303. பார்த்திடவே போதமென்ற சூத்திரந்தான்
    பளிங்குபோல் முப்பத்தி ரெண்டும்பாரு
சேர்த்திடவே ஞான முப்பத்திரெண்டும்
    செவ்வையுடன் பார்ப்பதுவே மெத்தநன்று
பூர்த்தியாய்க் கொங்கணவர் சூத்திரந்தான்
    புகழான முப்பத்தி ரெண்டும்பாரு
நேர்த்தியாய்க் கொங்கணவர் சரக்குவைப்பு
    நேர்மையுடன் நூறுகவி பார்க்கநன்றே.
           
விளக்கவுரை :


304. நன்றான கொங்கணவர் காயகற்பம்
    நலமுடனே இருபத்தி யைந்தும்பாரு
குன்றான கருவூரார் நொண்டியப்பா
    கொற்றவனேழ் நூறுமது பார்க்கவேண்டும்
சென்றதொரு சுந்தரா நந்தர்தாமும்
    சிறப்பான நூறுகவி பின்னும்பாரு
வென்றிடவென் சூத்திரமு மைம்பதுபார்
    வெற்றியுடன் செயகண்டி நூறும்பாரே.

விளக்கவுரை :


305. நூறான சிவவாக்கியர் நொண்டிபத்து
    நுட்பமுள்ள நந்திபதி னாறும்பாரு
கூறான யென்தன்னூல் பதினாறும்பார்
    குறிப்புடனே வாசியது யெட்டும்பாரு
தேறவே யூர்வசி பதினாறும்பார்
    தெளிவான வாசமுனி யெட்டும்பாரு
மீறவே கொங்கணவ ரிருபத்தைந்து
    மேன்மையுள்ள முப்பூவும் பதினாறுதானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 296 - 300 of 12000 பாடல்கள்


296. எட்டான  குளிகையது அறியவேண்டும்
    எழிலான என்னூலில் ஞானமப்பா
திட்டமுடன் பதினாறு ஞானந்தானும்
    தீரமுடன் யானுறைத்தேன் புலஸ்தியாகேள்
வட்டமுடன் வான்மூகர் பத்தும்பாரு
    வாகன சிவயோகம் பதினாறும்பார்
சட்டமுடன் யென்னூலாஞ் சுத்தஞானம்
    சதுரான நவநீதம் ஒன்பதாமே.

விளக்கவுரை :


297. ஒன்பதாம் வயித்தியக் கும்மிதானும்
    ஒப்பான அண்டக்கல் சுண்ணம்பத்து
அன்பதாம் மச்சமுனி சொச்சம்பாரு
    அப்பனே சூத்திரமும் எட்டும்பாரு
துன்பகற்றுந் திருமூலர் கிரந்தியெண்ணை
    துப்புரவாய் எட்டுடனே ரெண்டும்பாரு
இன்பமுடன் ரோமரிடி கருமானந்தான்
    எழிலாக அன்பத்தி யொன்றும்பாரே.

விளக்கவுரை :


298. பாரேதான் கௌபால சித்தரப்பா
    பண்புடனே ஆணியென்ற கோர்வைதானும்
நேரேதான் அன்பத்தி யொன்றுதானும்
    நேர்மையுடன் சூத்திரத்தைப் பார்க்கவேண்டும்
சீரேதான் சட்டமுனி நாதர் தாமும்
    சிறப்பான கற்பவிதி நூறும்பாரு
கூரேதான் கேசரிநூல் அன்பத்தொன்றும்
    குற்றமில்லா சூத்திரமும் பத்தும்பாரே.

விளக்கவுரை :


299. பத்தான குளிகையது எட்டும்பாரு
    பாங்கான குருக்கிடை சூத்திரந்தான்சொச்சம்
முத்தான சூத்திரமும் முப்பத்தாறு
    முடிவான பச்சைவெட்டு பதினாறும்பார்
சித்தான வாதமது ஆறும்பாரு
    சிறப்பான பதஞ்சலியார் இருபதும்பார்
மத்தான யென்னூல்முன் னெண்பதும்பார்
    மகத்தான பின்னூல் எண்பதுதான்பாரே.

விளக்கவுரை :


300. எண்ணான சுந்தரா நந்தர்தானும்
    யெழிலாகத் தானுறைத்த நூல்தானப்பா
கண்ணான பூஜாவிதி முன்பின்பாரு
    கருவான வென்னூல் பட்சணிதான்பாரு
குண்ணான ஞான முப்பதுவுங்பாரு
    கூறான வூத்தமுறை தன்னைப்பாரு
தண்ணமுடன் வள்ளுவனார் நூறும்பாரு
    தாக்கான குறுநூல் எண்பதுதான்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 291 - 295 of 12000 பாடல்கள்


291. எண்ணையாம் பதினாறு சூத்திரம்பாரு
    யெழிலான கருணை வாகடமும்பாரு
திண்ணமுடன் பால வாகடந்தானப்பா
    சூத்திரமாம் இருபதும் முன்னேபாரு
தண்ணமுடன் காவியமாஞ் சுருக்கந்தானும்
    தகைமையுடன் பதினாறும் பார்க்கவேண்டும்
வண்ணமுடன் சோதிமணிக் குளிகையெட்டு
    வாகான திருமந்திர மெட்டுமாமே.

விளக்கவுரை :


292. எட்டான திருமந்திர மஞ்சும்பாரு
    யெழிலான ரோமரிடி பதினாறுபார்
கட்டான யென்நூலில் பதினாறுதன்னில்
    கருவான கெந்தகத்தின் தைலம்பாரு
திட்டான சரக்குசுத்தி முழுதும்பாரு
    திறமான ராசாங்க நாடிபாரு
வட்டான அகஸ்தியர் ஞானமப்பா
    வளமுடனே பதினாறு பார்ப்பாய்தானே.

விளக்கவுரை :


293. பார்க்கவே சூதமுனி நாடிபாரு
    பாங்கான ஞானமது எட்டும்பாரு
ஏர்க்கவே சுருக்கம் பன்னிரண்டும்பாரு
    எழிலான வாத சூத்திரந்தான்பாரு
ஆர்க்கவே திருமூலர் இருபதப்பா
    அப்பனே உபதேசம் பாருபாரு
ஊக்கமுடன் அகஸ்தியனார் முப்புபாரு
    முப்பதிலே முப்பூவின் வழிசொன்னேனே.

விளக்கவுரை :


294. சொன்னேனே தட்சணா மூர்த்தியைப்பார்
    சுத்தமுள்ள வகாரமது பத்தும்பாரு
முன்றான தீட்சையது பதினாறும்பார்
    முதலான சுருக்கமது வொன்றும்பாரு
பன்னவே கொங்கணவர் முக்காண்டந்தான்
    பாகமுடன் கண்டறிவாய் புலத்தியா நீ
வின்னமில்லா முக்காண்டத் திருமந்திரந்தான்
    வேகமுடன் பார்ப்பதுதான் மெத்தநன்றே.

விளக்கவுரை :


295. நன்றான பதினைந்து சூத்திரந்தான்
    நலமுடனே பூசாவிதி பார்க்கவேண்டும்
குன்றான் ரோமரிடி சூத்திரங்கள்
    குறையாம லிருபதுதான் பார்க்கவேண்டும்
நன்றுள்ள பதினாறு வகாரசூத்திரம்
    தாக்குடனே கொங்கணவர் குளிகையப்பா
வென்றிடவே யெட்டுமது பார்க்கவேண்டும்
    வேதாந்த நந்தீசர் குளிகையெட்டே.
    
விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 286 - 290 of 12000 பாடல்கள்


286. நன்றான புலஸ்தியனே இன்னங்கேளு
    நாதாந்த சித்தொளிவின் நூல்களெல்லாம்
குன்றான மலைபோல இருக்குதப்பா
    கூறவுந்தான் என்னாலு முடியாதல்லோ
என்றாலும் எந்தனால் அறிந்தமட்டும்
    எழிலாக எடுத்துரைப்பேன் இன்னங்கேளு
பன்றான பலகோடி சாத்திரங்கள்
    பாலித்தார் பாரினிலே உண்மையாமே.

விளக்கவுரை :


287. உண்மையாம் கொங்கணவர் காண்டம்பார்
    உத்தமனே ஐநூறு தானும்பாரு
நண்மையாம் செகசால மெண்ணூறும்பார்
    நலமான நாற்காண்ட சாலம்பாரு
திண்மையாற் தன்வந்திரி ஆயிரம்பாரு
    திறமான நிகண்டு முன்னூறும்பாரு
வண்மையாம் புலிப்பாணி ஐநூம்பாரு
    வாகான சாலமது முன்னூறுபாரே.


விளக்கவுரை :


288. பார்ப்பதற்கு சிவஜால முன்னூறும்பார்
    பாங்கான பூரணம் ஆயிரந்தான்பாரு
சேர்க்கவே வொட்டியமா யிரந்தான்பாரு
    சிறப்பான சல்லியமுங் கூடப்பாரு
ஏர்க்கவே பஞ்சகாவியந்தான் பாரு
    எழிலான சம்பூர்ண காவியம்பார்
மார்க்கமுடன் பிரணவமாம் லட்சணகாவியந்தான்
    மயங்காமல் சிறுகாவிய முழுதும்பாரே.

விளக்கவுரை :


289. முழுதுமே பார்க்கையிலே மோசமில்லை
    மூதுலகி லின்னம்வெகு நூல்கள்சொல்வேன்
பழுதுபடாப் பெருநூல்கள் பார்த்தபின்பு
    பாகமுடன் சிறு நூல்கள் பார்க்கவேண்டும்
வழுதுறவே சிறுநூலில் அனந்தஞ்சொல்வேன்
    வாகான சூத்திரங்கள் மிகவுஞ்சொல்வேன்
தொழுகைபட சூத்திரங்கள் கோடாகோடி
    தொல்லுலகில் கண்டமட்டுஞ் சொல்வேனே.

விளக்கவுரை :


290. சொல்லுவேன் சுப்பிரமணியர் முப்பத்திரெண்டு
    சொச்சமாங் கொங்கணவர் எட்டும்பாரு
வெல்லவே ராமதேவர் பத்தும்பாரு
    வேதாந்த வழலை சூத்திரந்தான்பாரு
கொல்லவே சுடலை சூத்திரந்தான்பாரு
    கொற்றவனே சஞ்சீவி யெண்ணைபாரு
புல்லவே நந்தி பதினாறும்பாரு
    புகழான சித்தாதி யெண்ணைபாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 281 - 285 of 12000 பாடல்கள்


281. ஆமேதான் மாந்திரிய காவியந்தான்பாரு
    அப்பனே ஞான காவியந்தான்பாரு
நாமேதான் சொன்னபடி யெழுநூறும்பார்
    நயமுடன் வதிற்சேர்ந்த வெண்ணூறும்பார்
போமேதான் காயசித்தி வெண்ணூறும்பார்
    பொங்கமுடன் வறுநூறு நொண்டிபாரு
வேமேதா னுபதேசம் ஆயிரம்பார்
    வெளியான பரிபாஷை பாருபாரே.

விளக்கவுரை :


282. பார்க்கையிலே பதினெண்பேர் பாடிவைத்த
    பாகமுடன் பரிபாஷை யறியவேண்டும்
சேர்க்கையிலே சௌமிய மாயிரந்தான்பாரு
    சிறப்பான கருக்கிடையு மைநூறும்பார்
ஏர்க்கவே யெழுனூறுத் திரட்டுபாரு
    யெழிலான வைநூறு சுருக்கம்பாரு
வார்க்கவே நந்தீசர் ஆயிரம்பார்
    வளமுடனே கருக்கிடையு முன்னூறுபாரே.

விளக்கவுரை :


283. முன்னூறாம் நந்தீசர் பெருநூல்பாரு
    முயலான நந்திமுன்னூற் நிகண்டுபாரு
நன்னூலாம் பஞ்ச காவியந்தான்பாரு
    நலமான திருமூல ரறுநூறுபாரு
பன்னூலில் சிறந்ததோர் நூல்தானாகும்
    பளிங்கான கடைக்காண்டம் பார்க்கவேண்டும்
துன்னூலாம் தீட்சைவிதி வாயிரம்பார்
    துறையான நிகண்டு வாயிரந்தான்பரே.

விளக்கவுரை :


284. பாரான நந்திமுன்னூறு நிகண்டும்பாரு
    பாங்கான போகரது நிகண்டும்பாரு
காரான திருமூல ராயிரம்பார்
    கருவான கருக்கிடயு மறுநூறும்பார்
தூரான பெருநூலாம் பலகாண்டாம்
    துறையான பாலவாகடம் முன்னூறு
தாரான லக்க சௌமியந்தான் பாரு
    தகைமையுள்ள செகஜால மாயிரந்தான்காணே. 

விளக்கவுரை :


285. காணவென்றால் மச்சமுனி யெண்ணூறும்பார்
    கருவான பெருனுலா யிரந்தான்பாரு
பூணவென்றால் கருவூரா ராயிரம்பார்
    புகழான முன்னூற்றுச் சொச்சம்பாரு
ஆணவே ராமதேவ ராயிரம்பார்
    அப்பனே கருக்கிடையு மைனூறும்பார்
தோணவே சட்டமுனி ஆயிரம்பார்
    சொச்சமுடன் இருநூறும் பார்க்கநன்றே.

விளக்கவுரை :

Powered by Blogger.