காகபுசுண்டர் உபநிடதம் 16 - 20 of 31 பாடல்கள்

     
16. அரிதில்லை பிரமவியா கிருத சீவன்
    ஐக்கியமெனுஞ் சந்த்யானம் அப்ய சித்துச்
சுருதிகயிற் றால்மனமாம் யானை தன்னை
    சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையிற் கட்டிக்
குருவுரைத்த சிரவணத்தின் படியே நின்றால்
    குதியாகு பிரபஞ்ச கோட்டிற் றானும்
திரிவதில்லை திரிந்தாலும் மதமி ராது;
    சீவவை ராக்யமெனுந் திறமி தானே.

விளக்கவுரை :
    
17. திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்
    திருசியசூன் யாதிகளே தியான மாகும்;
சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்
    சாதனையே சமாதியெனத் தானே போகும்;
வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்
    வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;
அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்
    அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.

விளக்கவுரை :

    
18. என்னவே அஞ்ஞானி உலகா சாரத்
    திச்சையினாற் றர்மாத்த வியாபா ரங்கள்
முன்னமே செய்ததன்பின் மரண மானால்
    மோட்சமதற் கனுபவத்தின் மொழிகேட் பீரேல்
வின்னமதா யாங்கார பஞ்ச பூத
    விடயவுபா திகளாலே மேவிக் கொண்டு
தன்னிமைய இலிங்கசரீ ரத்தோ டொத்துச்
    சதாகாலம் போக்குவரத் தாகுந் தானே.

விளக்கவுரை :
    
19. தானிந்தப் படியாகச் சீவ ரெல்லாஞ்
    சகசபிரா ரத்வவசத் தாகி னார்கள்;   
ஏனிந்தக் கூரபிமா னத்திலே னாலே
    இத்தியாதி குணங்களெல்லாம் வியாபிக் கும்பார்
வானிந்து போன்மெலிந்து வளர்ந்து போகும்
    வர்த்திக்கு மஞ்ஞானம் மாற்ற வேண்டி
நானிந்தப் பிரமவுபா சனையைப் பற்றி
    நாட்டம்வைத்தே வித்தையெல்லாம் நாச மாச்சே.

விளக்கவுரை :

    
20. ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம்
    அந்தந்தப் பிரளயத்துக் கதுவாய் நின்றேன்;
மூச்சப்பா வோடவில்லை பிரமா தீத
    முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவிற் சென்றேன்;
கூச்சப்பா வற்றபிர்ம சாட்சாத் காரம்
    குழிபாத மாகியகோ சரமாய் நின்றேன்;
பேச்சப்பா சராசரங்க ளுதிக்கும் போது
    பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர்கொண்டேனே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் உபநிடதம் 11 - 15 of 31 பாடல்கள்

     
11. விட்டுப்போம் சமுசார வியாபா ரங்கள்
    விடயசுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு;   
தொட்டுவிட லாகாது ஞான மார்க்கந்
    துரிய நிலை நன்றாகத் தோன்று மட்டும்
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்
    தெண்ணமெனுந் தியானத்தா லெய்தும் முத்தி;
தட்டுகின்ற சீவத்வம் தனக்கில் லாமற்
    சமாதியுற்றால் நாமதுவே சாட்சாத் காரம்.

விளக்கவுரை :
    
12. சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம்
    தத்வாதி வாசனைகள் தாமே போகும்;
சூட்சாதி பிராந்தியெனும் மாயா சத்தி
    தொடராமற் சேர்வதுவே சொரூப ஞானம்;
தீட்சையினாற் பிரமாண்டம் பிண்டாண் டங்கள்
    சிருட்டி முதல் யாவற்றுந் தெரியும் நன்றாய்;
காட்சியென்ன ஏகவத்து வொன்றல் லாமற்
    காண்பதெல்லாம் வியர்த்தமெனக் கண்டு கொள்ளே.

விளக்கவுரை :
    
13. கண்டு பார் மூடமெனும் அஞ்ஞா னிக்குக்
    காணாது சீவான்மா பரமான் மாவும்;
தொண்டுபட்டுக் குருமுகத்தில் விசேட மாகச்
    சுருதியெனும் வேதாந்தம் அப்பிய சித்தே
உண்டுமனு பவஞானங் கிர்த்யா கிர்த்யம்
    யோகிதனக்கு ஏதேனுந் தேவை யில்லை;
விண்டுசொல்வோம் நதிகடக்க வோட மல்லால்
    விடயத்தாற் சாதனங்கள் வீணா மென்றே.

விளக்கவுரை :
    
14. வீணல்லோ சாதனப்ர யோச னங்கள்
    மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்த போது?
வீணல்லோ வேதபா டத்தி னிச்சை
    வியோமபரி பூரணத்தில் மேவி நின்றால்?
வீணல்லோ இருட்டறையிற் பொருளைக் காண
    விளக்கதனை மறந்தவன்கை விடுதல் போலும்
வீணல்லோ தியானதா ரணைக ளெல்லாம்?
    மெய்பிரகா சிக்கும்வரை வேணுந் தானே.

விளக்கவுரை :

    
15. வேணுமென்றா லெள்ளுக்கு ளெண்ணெய் போலும்
    வித்தினிடத் தடங்கிநின்ற விருட்சம் போலும்   
காணுகின்ற பூவிலுறை வாசம் போலும்
    கன்றாவின் பாலிலுள்ள நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின்மேல் வன்னம் போலும்
    தூலமதிற் சூட்சுமந்தான் துலங்கி நிற்கும்;
ஆணவத்தாற் சாதனத்தை மறந்தாயானால்
    அபரோட்ச ஞானமுத்தி யரிது தானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் உபநிடதம் 6 - 10 of 31 பாடல்கள்

     
6. சத்தியுடன் ரசோகுணந்தான் நேத்ரத் தானம்
    தனிப்போக மிதனோடே சார்ந்த ஆன்மா
வெற்றிபெறும் சீவாத்மா அகார மாச்சு
    விவகார சீவனிதை விராட்டென் பார்கள்;
வித்தையெனு மவித்தையிலே பிரதி விம்பம்
    விலாசமிந்தத் தூலசூக்க விருத்தி யாச்சு;
தத்வமசி வாக்குச்சோ தனையி னாலே
    தான்கடந்து சூட்சுமத்திற் சார்ந்து கொள்ளே.

விளக்கவுரை :

    
7. கொள்ளடா ஞானேந்திரி யங்க ளைந்து
    கூடினவை கர்மேந்திரி யங்க ளைந்து   
தள்ளடா பிராணாதி வாயு வைந்து
    சார்வான மனம்புத்தி தானி ரண்டு
விள்ளடா பதினேழு தத்து வங்கள்
    விர்த்தியெனுஞ் சூட்சுமமாம் இரண் கர்ப்பத்
துள்ளடா அபிமானி சைதன்ய னாகுஞ்
    சொப்பனா வத்தையெனச் சொல்லும் நூலே.

விளக்கவுரை :
    
8. நூலான சாத்மிகமாம் அகங்கா ரத்துள்
    நுழைந்தவிச்சா சக்தியல்லோ நுணுக்க மாச்சு?
காலான கண்டமெனுந் தானத் துள்ளே
    கலந்திருக்கும் போகமல்லோ இச்சா போகம்?
நாலான ஆன்மாவே அந்த ரான்மா
    ஞானமிந்தப் படியறிந்தா லுகார மாச்சு;
தூலமெனுஞ் சூட்சுமத்தைக் கடந்து நின்று
    சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்பு தானே.

விளக்கவுரை :
    
9. தானல்யாகக் கிருதமெனுஞ் சரீரத் துக்குத்
    தானமதே இதயமா ஞான சத்தி
வானமதே அகங்காரம் வித்தை யாகில்
    வருஞ் சுழுத்தி யபிமானி பிராக்ஞ னாகும்
கோனிதற்கே ஆனந்த போக மாகும்
    கூடுகின்ற ஆன்மாவே பரமான் மாவாம்
கானிதற்குப் பரமான்மா சீவ னிந்தக்
    காரணமே மகாரமெனக் கண்டு கொள்ளே.

விளக்கவுரை :
    
10. கொள்ளுமந்தப் பொருள்தானே சத்து மல்ல
    கூறான அசத்துமல்ல கூர்மை யல்ல
உள்ளுநிரா மயமல்ல சர்வமய மல்ல
    உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏக மாச்சு;
தள்ளுகின்ற பொருளல்ல தள்ளா தல்ல
    தான்பிரம ரகசியஞ்சந் தான முத்தி
விள்ளுமந்தப் படிதானே வேத பாடம்
    விசாரணையாற் சமாதிசெய்ய விட்டுப் போமே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் உபநிடதம் 1 - 5 of 31 பாடல்கள்


காப்பு

எண்சீர் விருத்தம்


ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு;
    அத்துவிதம் பிரணவத்தி னருளே காப்பு;
நீதியா மாரூட ஞானம் பெற்ற
    நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு;
சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத் தொன்றிற்
    துரியாதீ தப்பொருளைத் துலக்க மாகத்
தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார்
    சீவேச ஐக்யமது தெரியுந் தானே.
   
விளக்கவுரை :
    
நூல்


1. தானென்ற குருவினுப தேசத் தாலே
    தனுகரண அவித்தை யெல்லாந் தவறுண்டேபோம்;
வானென்ற சுவானுபவ ஞான முண்டாம்;
    மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்;
நானென்ற பிரபஞ்ச வுற்பத் திக்கு
    நாதாநீ தக்யானம் நன்றா யெய்தும்;
கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன
    குறிப்பான யோகமிதைக் கூர்ந்து பாரே.

விளக்கவுரை :

2. பாருநீ பிரமநிலை யார்தான் சொல்வார்?
    பதமில்லை யாதெனினும் பவ்ய மில்லை
சேருமிந்தப் பிரமாணந் தானு ணர்ந்து
    தெரிவிக்கப் படாதருளிற் சிவசொ ரூபம்;
ஊருகீன்ற காலத்ர யங்க ளாலே
    உபாதிக்கப் பர தத்வ முற்பத் திக்கும்
சாருமிந்த வுபாதான காரணத்தின்
    சம்பந்த மில்லாத சாட்சிதானே.

விளக்கவுரை :

    
3. சாட்சிசத்தா யதீதகுணா தீத மாகிச்
    சட்சுமனத் தாலறியத் தகாது யாதும்   
சாட்சியதே யேதுசா தனமுந் தள்ளிச்
    சகலவந்தர் யாமித்வ சர்வ பூத
சாட்சியினை யிவ்வளவவ் வளவா மென்று
    தனைக்குணித்து நிர்ணயிக்கத் தகாது யோகம்
சாட்சியதே ஞாதுர்ஞான ஞேய ரூபஞ்
    சத்தாதி பிரமாதி தானே சொல்வாம்.

விளக்கவுரை :

    
4. சொல்லுமெனக் கேட்டுகந்த மாணாக் காவுன்
    தூலகா ரணப்பிரமந் துரியா தீதம்
அல்லுமல்ல பகலுமல்ல நிட்க ளங்கம்
    அம்சோகம் அசபாமந் திரத்தி யானம்
செல்லுமவ னேநானென் றபிமா னிக்குச்
    சித்திவிர்த்தி நிரோதகமாம் யோகத் தாலே
வெல்லறிஞர் பலபோக விர்த்தி யோகி
    விவேகதியா னாதிகளே மேலாம் பிர்மம்.

விளக்கவுரை :

    
5. பிர்மசுரோத் ராதிஞானேந் திரிய மைந்தும்
    பேசுதர்க்க வாக்காதியிந் திரிய மைந்தும்
கர்மமெனுஞ் சத்தாதி விடய மைந்தும்
    கரணாதி நான்குபிரா ணாதி யைந்தும்
வர்மமிவை யிருபத்து நான்குங் கூடி
    வருந்தூல சரீரவிராட் டெனவே சொல்லும்
தர்மவத்தைச் சாக்கிரபி மானி விசுவன்
    தனக்குவமை யாங்கிரியா சத்தி தானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 76 - 79 of 79 பாடல்கள்


76. பூசையடா செய்துமிகப் பதனம் பண்ணு
    புத்திரனே பேய்ப்பீர்க்குத் தயிலம் வாங்கி
ஆசைபுல்லா மணக்கதுவு மதுபோல் வாங்கி
    அப்பனே கேசரியின் நெய்யுஞ் சேர்த்தே
ஓசையுடன் தேவாங்கு பித்துஞ் சேர்த்தே
    உத்தமனே தலைப்பிண்டந் தயிலஞ் சேர்த்துப்
பாசையடா பேசாம லரைத்து மைந்தா!
    பாலகனே சவாதோடு புனுகு சேரே.

விளக்கவுரை :
    
77. சேரடா அணுப்போலே புருவத் திட்டுத்
    தீர்க்கமுடன் நீ தானுஞ் செல்லும் போதில்
ஆரடா வுன்னைத்தான் ஆர்தான் காண்பார்?
    அண்டமெனும் பிரமத்தி னருளி னாலே
நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து
    நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு
வீரடா அரைத்தபின்பு புருவத் திட்டால்
    வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே.

விளக்கவுரை :
    
78. வாரான தில்லைப்பால் கருந்து ளசியும்
    வவ்வாலின் பித்துடனே மந்திப் பித்துஞ்
சீராக முன்சொன்ன கருவை விட்டுத்
    திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று
நேராக அரைத்ததையு மெடுத்து மைந்தா
    நிச்சயமாய்ப் புருவத்தி லிட்டுப் பார்க்க
வீராகப் பாதாளம் பிளந்தே யோடும்
    வேதாந்த சாரணையை விரும்பிப் பாரே.

விளக்கவுரை :
    
79. பாரடா பரப்பிரமத் தூடே சென்று
    பரிதிமதி அக்கினியும் மூன்று மொன்றாய்
நேரடா ஆதியுந்தான் எதிரி தன்னை
    நிச்சயமாய்ப் பார்த்திடவே நீறிப் போவான்.
கூரடா கோடானு கோடி சித்துக்
    குறித்திடவே ஆகுமடா பிரமத் தாலே
வீரடா இந்நூலைக் கொடுத் திடாதே
    வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 71 - 75 of 79 பாடல்கள்

     
71. பாரடா வாணியுந்தா னிருந்த வீடு
    பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்;
ஆரடா அண்ணாக்கின் கொடியி னூடே
    அண்டத்தைப் பற்றியடா விழுது போலே
நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும்
    நிலையான அக்கினியின் மத்தி தன்னில்
வீரடா அதுவழியே அருள்தான் பாய்ந்து
    விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வாளே.

விளக்கவுரை :

72. சொல்லுவா ளனந்தமறை வேத மெல்லாம்
    சுருதியடா முடிந்தெழுந்த பிரமத் தாலே
வெல்லுவார் தனையறிந்த பெரியோ ரெல்லாம்
    வீறாண்மை பேசார்கள் மவுன மாகி
அல்லுபக லற்றதொரு பிரமந் தன்னை
    ஆரறிவா ருலகத்தி லையா பாரு
சொல்லடங்கு மிடந்தனையுங் கண்டு தேறிச்
    சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு.

விளக்கவுரை :
    
73. வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து
    வளமாக வப்பிலையும் பிசறு மைந்தா!
தாங்கியே திருகுகள்ளிக் குள்ளே வைத்துத்
    தமர்வாயைத் தான்மூடிச் சாபந் தீர்த்தே
ஓங்கியே திங்களுந்தான் மூன்று சென்றால்
    உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு
சாங்கமினிச் செய்யாமற் சீலை மண்ணுஞ்
    சத்தியமாய்ச் செய்தபின்னே உலர்த்திப் பாரே.

விளக்கவுரை :
    
74. பாரப்பா வுலர்ந்த தன்பின் எடுத்து மைந்தா!
    பக்தியுடன் கசபுடத்திற் போட்டுப் பாராய்
ஆரப்பா ஆறவைத்தே யெடுக்கும் போதில்
    அருணனிறம் போலிருக்குஞ் செந்தூ ரந்தான்
நேரப்பா அணுப்போலே சரக்குக் கெல்லாம்
    நிச்சயமாய்ப் பூசியுந்தான் புடத்திற் போடு
வீரப்பா நீருமடா நவலோ கந்தான்
    வேதையென்ற வித்தையெல்லாங் கைக்குள் ளாச்சே.

விளக்கவுரை :
    
75. ஆச்சடா வுடம்பிலுள்ள வியாதி யெல்லாம்
    அணுப்போல வுண்டிடவே பறந்து போகும்;
வாச்சடா தேகசித்தி யதிக மாச்சு
    வத்துடனே கூடியுந்தான் வாழ லாச்சு;
மூச்சுடா தலைப்பிண்டங் கொடியு மாவும்
    முத்தியடா வாங்கியபின் தயிலம் வாங்கி
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே
    இன்பமுடன் வத்துவையும் பூசை செய்யே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 66 - 70 of 79 பாடல்கள்

     
66. காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை;
    கருத்துடனே என்குலஞ்சுக் குலந்தான் மைந்தா!
தோணப்பா தோணாமற் சாதி பேதஞ்
    சொல்லுவான் சுருக்கமாய், சுருண்டு போவான்;
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம்
    வீரமுடன் பிறந்ததடா உயிர்க ளெல்லாம்;
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே;
    நன்றாக வுதித்தவிடம் நாடி னேனே.

விளக்கவுரை :
    
67. நாடியே யுதித்தவிடம் அறியாத் தோஷம்
    நடுவாக வந்தவிடம் பாரத் தோஷம்
கூடியே பிறந்தவிடங் காணாத் தோஷம்
    குருபரனை நிந்தனைகள் செய்த தோஷம்
வாடியே வத்தோடே சேராத் தோஷம்
    வம்பரோ டிணங்கியே திரிந்த தோஷம்
கூடியே வுறவற்றே யிருந்த தோஷம்
    கும்பியுங்கற் சிப்பியையும் அறியான் பாவி.

விளக்கவுரை :

68. அறியாத பாவிக்கு ஞான மேது?
    ஆறுமுகன் சொன்னதொரு நூலைப் பாரு;
பரிபாஷை யாகவுந்தான் சொல்ல வில்லை;
    பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு;
விரிவாகச் சித்தர்சொன்ன நூலை யெல்லாம்
    வீணாக மறைப்பாகச் சொன்னா ரையா!
குறியான அண்டமதை யொளித்தே விட்டார்
    கூறினார் வெவ்வேறாய்க் குற்றந் தானே.

விளக்கவுரை :
    
69. குற்றமது வையாமல் அண்டத் தேகிக்
    கூறாத மந்திரத்தின் குறியைப் பார்த்துச்
சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக் காலம்
    தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக்
குற்றமது வையாமல் மனமன் பாலே
    குருபரனை நோக்கியடா தவமே செய்து
பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது
    பராபரையுங் கைவசமே யாகு வாளே.

விளக்கவுரை :
    
70. ஆகுவா ளந்திசந்தி யுச்சி யென்றால்
    அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும்
ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்ன லாகி
    இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்;
போகுமே நீ செய்த காமமெல் லாம்
    புவனைதிரி சூலிகையுடைக் கிருபை யாலே;
வாகுமே வழியோடே சேர்த்தா யானால்
    வாணியுந்தான் நாவில்நடஞ் செய்வாள் பாரே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 61 - 65 of 79 பாடல்கள்

     
61. தானென்ற பலரூப மதிகங் காணுந்
    தன்னுடைய தேவதைபோற் பின்னும் காட்டும்
ஊனென்ற பெண்ணைப்போ லுன்னைக் கூடி
    உத்தமனே சையோகஞ் செய்தாற் போலே
தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே
    தித்திப்புப் போலேதான் ருசியைக் காட்டும்
கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு
    குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே.

விளக்கவுரை :

    
62. நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு;
    நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு
தலையான அக்கினியப் படியே சேரு;
    சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து
மலையாமல் ஏகபரா பரனே யென்று
    மனமடங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க
அலையாது மனந்தானும் பரத்திற் சென்று
    ஆகாய வீதிவழி யாட்டும் பாரே.

விளக்கவுரை :

    
63. ஆட்டுமடா ஆசையற்று ரோச மற்றே
    அன்னை சுற்றந் தன்னைமறந்தே அகண்ட மேவும்
பூட்டுமடா நவத்துவா ரங்கள் தம்மைப்
    பொறிகளைந்துஞ் சேருமடா புனித மாகக்
காட்டிலென்ன நாட்டிலென்ன மவுனங் கண்டால்
    காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி
வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகா சிக்கும்
    வெளியேறி னாற்றீபம் விழலாய்ப் போமே.

விளக்கவுரை :

64. போமடா புத்திசித்தம் என்ற தாகிப்
    புசுண்டனென்று பேரெடுத்துப் புவனந் தன்னில்
ஆமடா வடசாளி மைந்த னென்றும்
    அருமையாங் கன்னியுடை மைந்த னென்றும்
நாமடா ஐந்துபேர் தம்மி லேதான்
    நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா!
வாமடா சாண்முழத்திற் காட்சி பார்க்க
    வத்துவுந்தான் ஈச்சரனா ரென்பார் பாரே.

விளக்கவுரை :
    
65. பாரப்பா என் குலந்தான் சொல்லக் கேளு;
    பார்தனிலே பிரமனுடை விந்து வாலே;
ஆரப்பா பிறந்துவிட்டோம் ஐந்து பேரும்;
    ஆகாய அண்டமதை யடுத்தே சென்றேன்;
நேரப்பா வெகுகோடி காலம் வாழ்ந்தேன்
    நிட்டையிலே மனந்தவறா திருந்து கொண்டேன்;
வீரப்பா பேசுவோர் லோகத் தோர்கள்
    விட்டடைந் தொட்டவிடம் விரும்பிக் காணே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 56 - 60 of 79 பாடல்கள்


56. ஆச்சென்ற அபுரூப மான போதே
    அட்டமா சித்திவகை யெட்டு மாடும்;
மூச்சொன்றி யடங்கிப்போம் பிரமத் தூடே
    முன்னணியும் பின்னணியு மொன்றாய்ப் போகும்;
காச்சென்று காச்சிவிடு மவுனங் கண்டு
    கலைமாறி நின்றிடமே கனக பீடம்
நீச்சென்று மில்லையடா வுன்னைக் கண்டால்
    நிலைத்ததடா சமாதியென்ற மார்க்கந் தானே.

விளக்கவுரை :
    
57. மார்க்கமுடன் தவசுநிலை யறியா மற்றான்
    மனந்தளர்ந்து திரிவார்கள் லோகத் துள்ளே
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனங் கண்டே
    இளவயசா யிருப்பார்கள் பெரியோர் மைந்தா!
காக்கவே சற்குருவின் பாதங் கண்டு
    கருணையுடன் அவர் பதத்தை வணங்கிப் போற்றித்
தீர்க்கமுடன் பிரமத்தில் மனந்தான் செல்லச்
    சீவனுக்குச் சீவனா யிருக்கலாமே.

விளக்கவுரை :
    
58. இருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை
    ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே
    உத்தமனே காயமது வுறுதி யாச்சு;
மருக்கியே திரியாமல் மதம்பே சாமல்
    வண்டரோ டிணங்கியடா மருவி டாமல்
குருக்கியே கோளரிடஞ் சேர்ந்தி டாமற்
    குருபாதங் கண்டுமிகப் பணிந்து பாரே.

விளக்கவுரை :
    
59. பாரென்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி!
    பரத்தினுடை அடிமுடியும் பகுந்து சொல்லும்
சீரென்று சொப்பனங்க ளதிக மாகத்
    திடப்படவே காணுமிடந் தீர்க்கஞ் சொல்லும்
காரென்று மணம்பிறந்த இடந்தான் சொல்லும்
    கதிர்மதியுஞ் சுற்றிவரு மார்க்கஞ் சொல்லும்
வீரென்றே உயிர் பிறந்த இடந்தான் சொல்லும்
    வெற்றிபெற இந்தவகை விளம்பு வாயே.

விளக்கவுரை :

60. வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு;
    மகத்தான பிரமத்தின் பாதந் தன்னில்
ஓயாமல் முன்சொன்ன நரம்பு பின்னி
    உத்தமனே ரவிமதியுஞ் சுற்றி யாடும்;
மாயாமல் வாசியுந்தான் நடுவே நின்று
    மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனந்தான் சென்றால்
காயான சுழுத்தியென் றிதற்கு நாமம்
    கண்டுபார் கண்டுகொள்ளப் போதந் தானே.

விளக்கவுரை :

காகபுசுண்டர் ஞானம் 51 - 55 of 79 பாடல்கள்

     
51. மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம்
    மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம்
சக்தியும் ஆவியுடையு மான லிங்கம்
    சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம்
புத்தியால் மனமொன்றாய்ப் புகழ்ந்த லிங்கம்
    பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம்
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம்
    ஏகபர மானதொரு லிங்கந் தானே.   

விளக்கவுரை :


52. தானென்ற சிறுவீட்டுக் குள்ளே சென்று
    தலைமாறிப் போனதொரு வாசி யைத்தான்
கோனென்ற பிரமத்தி லடக்க மாகக்
    குறித்திடுவாய் மனமடங்கிக் கூர்ந்து பார்க்க
வானொன்றிப் போகுமடா பாணம் பாணம்
    மைந்தனே! உண்டிடவே பசிதான் தீரும்;
தேனென்ற சட்டை களுங் கழன்று போகும்
    தேனுக்குந் தேவனா யிருக்க லாமே.

விளக்கவுரை :
    
53. இருக்கலாம் எந்தெந்த யுகங்க ளுக்கும்
    ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
பெருக்கவே மனமடங்கி மவுனம் பெற்றும்
    பேராசை யாகவுந்தான் பிரமத் துள்ளே
குருக்களைப்போல் அரசனைப்போ லிந்திர னைப்போல்
    குணமான மூவரைப் போற்பிரமத் தூடே
திருக்கெடுத்தே யெந்தெந்த அவதா ரங்கள்
    செய்திடலாம் நிலையறிந்த பெரியோர் தானே.

விளக்கவுரை :
    
54. தானவனே யென்குருவே புசுண்ட நாதா
    தாரணியிலே சீவசெந்தாம் அகண்ட மெல்லாம்
தோணவே மும்மூர்த்தி யிவர்கள் தாமுந்
    துடியாகப் பிரமத்தி லடங்கு மென்றீர்
கோனவனே பின்னுந்தா னகண்ட மெல்லாங்
    குறிப்புடனே படைக்கும்வகைக் குறியுஞ் சொன்னீர்
தானவனே மதுவுண்ணச் சொன்னீ ரையா
    சத்தியமா யதன் விவரஞ் சாற்று வீரே.

விளக்கவுரை :
    
55. சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா!
    சத்தியமா யண்டத்திற் செல்லும் போது
போற்றுகிற அக்கினியும் பிரவே சித்துப்
    புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்;
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
    மைந்தனே! அபுரூப மாகு மப்பா!
வாற்றியே நிழற்சாய்கை யற்றுப் போனால்
    வலுத்ததடா காயசித்தி யாச்சுப் பாரே.

விளக்கவுரை :
Powered by Blogger.