திருமூலர் திருமந்திரம் 6 - 10 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

6. அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.

விளக்கவுரை :

7. முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.

விளக்கவுரை :

[ads-post]

8. தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

விளக்கவுரை :

9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

விளக்கவுரை :

10. தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.

விளக்கவுரை :



திருமூலர் திருமந்திரம் 1 - 5 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

பாயிரம்

விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

விளக்கவுரை :

1. கடவுள் வாழ்த்து

1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.

விளக்கவுரை :

2. போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

விளக்கவுரை :

[ads-post]

3. ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே.

விளக்கவுரை :

4. அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

விளக்கவுரை :

5. சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 436 - 440 of 12000 பாடல்கள்


436. வருந்திடவே தென்பொதிகை சித்துதாமும்
    வண்மையுடன் வேதமுனி தன்னைப்பார்த்து
அருந்ததிக்கு வொப்பான ரிடியார்தாமும்
    அன்புடனே தாமுறைத்த காவியத்தை
பொருந்தவே எங்களுக்கு வுபதேசித்துப்
    பொங்கமுடன் நூலதனைக் கொடுத்தீரானால்
இருந்திடத்தில் நாமிருந்து தவசிமார்கள்
    எழிலாகக் காவியத்தைப் பார்ப்போம்தாமே.

விளக்கவுரை :


437. பார்ப்போமே யென்றுசொல்ல முனிவர்தாமும்
    பாங்குடனே நூல்கொடுத்தால் லோகமெல்லாம்
தீர்க்கமுடன் சித்துமய மாகிப்போகும்
    திறளான கருவிகர ணாதியெல்லாம்
ஏர்க்கவே யிதிலடக்க மனந்தங்கோடி
    எழிலாகக் வேதமுனி சொன்னவர்க்கு
ஆர்க்கவே யிதிலடக்க மனந்தங்கோடி
    அப்பனே பொய்யொன்று மில்லைதானே.

விளக்கவுரை :


438. தானான நூலதனைப் பாடியல்லோ
    சத்தியங்கள் மிகவாகச் செய்துமேதான்
கோனான வேதமுனி சொன்னவாக்கு
    குகைதனிலே வொளித்துவைத்தார் காவியத்தை
பானான சித்துமுனி வனேகம்பேர்கள்
    பாடுபட்டு வெகுவாக நூல்கேட்டார்கள்
மானான வேதமுனி வியாசர்தாமும்
    மார்க்கமுடன் நூல்கொடே னென்றிட்டாரே.

விளக்கவுரை :


439. என்றுமே தடுத்துமிகச் சொல்லும்போது
    எழிலான முனியாரும் மனதிரங்கி
வென்றிடவே நூலதனைக் கொடுத்துத்தானும்
    விருப்பமுடன் சாபமதை நிவர்த்திசெய்து
சென்றிடவே லோகத்தில் கர்மிகட்கும்
    சிறுவர்கட்கும் கபடுள்ள நெஞ்சுளோர்க்கும்
ஒன்றுமே காட்டாமல் புத்திகூறி
    உத்தமர்க்கு நூல்கொடுத்தார் முனிவர்தாமே.

விளக்கவுரை :


440. முனியான வியாசர்முனி மனமகிழ்ந்து
    உத்தமராஞ் சித்தர்கட்கு கிருபைகூர்ந்து
கனிவுடனே நூலதனைக் கையிலேந்தி
    கருணையுடன் மனதுவந்து பரிவுசொல்லி
தனியான காவியத்தை வெளிகாட்டாமல்
    தாரணியில் மர்மமா யிருந்துகொண்டு
புனிதனா யிருக்கவென்று வரமுந்தந்து
    புகழாக வாசீர்மஞ் செய்திட்டாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 431 - 435 of 12000 பாடல்கள்


431. என்னலாம் புலஸ்தியனே யின்னங்கேளு
    எழிலான வதிசயங்கள் கூறுவேன்பார்
பன்னவே வியாசமுனி சமாதிபக்கல்
    பாங்கான சித்தர்முனி வாயிரம்பேர்
சொன்னபடி ரிடியாரைச் சுத்தியல்லோ
    சுத்தமுடன் சமாதிதனைப் பாதுகாத்து
நன்னயமாய் வுலாகொடுத்து நிற்பார்தாமும்
    நலமான ரிடிக்கூட்ட மெத்தவாமே.

விளக்கவுரை :


432. மெத்தவே சித்துமுனி ரிடிகள்கூட்டம்
    மேதினியி லங்குண்டு சொல்லொண்ணாது
சத்தமா ரிடிகளெல்லாந் தவசிருப்பார்
    சதகோடி சூரியர்போல் தோற்றும்பாரு
நித்தமூடன் வேதமுனி வியாசர்தாமும்
    நேரான காவியங்க ளோதுவார்பார்
சுத்தமுடன் ஞானோப தேச நூலை
          சுருதிபொருள் கருவியுடன் சொல்லுவாரே.

விளக்கவுரை :


433. சொல்லவே வேதமுனி வியாசர்தாமும்
    தொல்லுலகில் பாசமற்று வினையகற்றி
எல்லோருந் தீவினையை யகற்றியல்லோ
    ஏகாந்தக் காவியத்தைக் கேட்டுமேதான்
நல்லவழி நற்பொருளை வுணர்ந்தாராய்ந்து
    நலமான மெய்ப்பொருளைக் காணவென்று
புல்லவே யெண்ணாயிரங் காவியந்தான்
    புகழாகப் பாடிவைத்தா ருண்மையாமே. 

விளக்கவுரை :


434. உண்மையாம் ஞான காவியமதாக
    உத்தமனே யெண்ணாயிரங் காவியந்தான்
வண்மையாய் வுலகத்தின் நீதியெல்லாம்
    வளப்பமுடன் கண்டல்லோ மிகவாராய்ந்து
திண்மையாம் யிருளதனைக் கதிரோன்தானும்
    தீர்க்கமுடன் நீக்குகின்ற தன்மைபோல
கண்மையுடன் யிருளகத்தி வேதநூலைக்
    காசினியில் தாமுரைத்தார் பெருமைபாரே.

விளக்கவுரை :


435. பெருமையாம் யெண்ணாயிரக் காவியந்தான்
    பேரான வியாசர்முனி பாடியல்லோ
அருமையாய்ப் பாடிவைத்த நூல்கள்தம்மை
    அப்பனே குகைதனிலே பதனம்பண்ணி
பெருமையாய் நூலதனைச் சாபமிட்டு
    பொங்கமுடன் தன்குகைக்குள் வைத்திருக்க
வெருமையாய்ச் சித்துமுனி ரிடிகள்தாமும்
    மேதினியில் நூல்கேட்க வருந்திட்டாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 426 - 430 of 12000 பாடல்கள்


426. தள்ளிட்டேன் மாந்தரிட செனனமெல்லாந்
    தாரணியில் யிப்படியே பொய்வாழ்வப்பா
உள்ளிட்ட சித்தர்முனி ரிடிகள்தாமும்
    உகந்ததோர் தேவதா ரிடியைத்தானும்
சுள்ளிட்ட தேகமது மண்ணாய்ப்போகும்
    சுந்தரனே வுலகமது  பொய்வாழ்வாகும்
விள்ளவே யுலகமெல்லாம் பொய்யேயாகும்
    வேதாந்த சித்தருட  வாக்குதாமே.

விளக்கவுரை :


427. வாக்கான யின்னம்வெகு மார்க்கஞ்சொல்வேன் 
    மகத்தான தென்பொதிகை கிழக்கேயப்பா
நோக்கான வன்பது காதந்தானும்
    நுணுக்கமுள்ள நகரமது வொன்றுகாணும்
தேக்கான நாடதுதான் சொல்லலாகும்
    தேசத்தில் வினோதமுள்ள சித்துநாடு
தூக்கான சித்துமுனி ரிடிகள்தாமும்
    துறையான கூட்டமது சேர்வார்பாரே. 

விளக்கவுரை :


428. பாரேதான் காடதனில் மண்டபந்தான்
    பாங்கான தென்பொதிகைச் சார்பிலுண்டு
நேரேதான் மண்டபமாங் கோட்டைமண்ணாம்
    நெடுங்காலஞ் சென்றதொரு யீசர்கோட்டை
ஊரேதான் பூனீறு விளையும்நாடு
    உத்தமனே நாதாக்க ளிருக்குந்தேசம்
வேரேதான் தேசமது யிதற்கீடுண்டோ
    வேதாந்த சித்தர்முனி யிருக்கும்நாடே.

விளக்கவுரை :


429. நாடான கோட்டையது யீசர்கோட்டை
    நலமான தோப்பெல்லாந் தேக்கேயாகும்
கோடான கோடிசித்து சமாதியுண்டு
    கொற்றவர்கள் குவலயத்தில் மாண்டமாண்பர்
நீடான காயகற்பங் கொண்டமான்பர்
           நிலையான சமாதியது கணக்கோயில்லை
தாடான தேகமது வழியாமற்றான்
    தகைமையுடன் பூமிதனி லிருக்கும்பாரே.   

விளக்கவுரை :


430. பாரேதான் கோட்டைக்குள் கதண்டுதானும்
    பாங்கான  மாந்தர்களைச் சேரவொட்டா
நேரேதான் சுரங்கமது நீணிலத்தில்
    நேர்மையுடன் பதிங்காத வழிதான்செல்லும்
சேரேதான் சுரங்கமது நடுமையத்தில்
    சிறப்பான வேதமுனி வியாசர்தாமும்
கூரேதான் சமாதியது யிருக்கும்பாரு
    குவலயத்தி லதிதமிது யென்னலாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 421 - 425 of 12000 பாடல்கள்


421. முனியான யென்தேவா லோகநாதா
    மூதுல கைரைகண்ட சித்தேசாமி
தனியாக தங்க மண்டபத்திலேதான்
    தகமையுடன் கொலுவிருக்கும் மெந்தன்நாதா
கனிவுடனே கைலங்கிரி சேதிதன்னை
    களிப்புடனே யெங்களுக்குக் கழர வேண்டும்
இனிதான பவமகற்றி யெங்களுக்கு
    எழிலான வுபதேசஞ் சொல்லொண்ணாதோ.

விளக்கவுரை :


422. ஒண்ணாது காயாதி கற்பங்கொண்டு
    உத்தமனே வெகுகால மிருக்கவென்று
கண்ணபிரான் தன்பக்க லடியோம்சென்று
    காலடிகள் நமஸ்கார மிகவுஞ்செய்து
நண்ணவே நதாந்த சித்துரூபம்
    நாட்டிலே யொருவரால் சொல்லப்போமோ
வண்ணமுடன் நாதாந்த சித்துதாமும்
    வளமையுடன் யெங்களுக்கு விடைசொல்வீரே.

விளக்கவுரை :


423. விடையென்று கேட்கையிலே ரிடியார்தாமும்
    வேதாந்த சித்தருக்கு வினயஞ்சொல்வார்
தடையில்லா நாலுயுக வதிசயத்தை
    தாரணியில் சித்தருக்கும் சொல்வார்பாரு
கடையான பிரம்மாவு மெந்தன்மீதில்
    கருணைதனை நீக்கியல்லோ சாபந்தந்து
சடைபோன்ற பிரம்மாவும் சண்டையிட்டு
    தாரணியில் போகவென்று சபித்திட்டாரே.

விளக்கவுரை :


424. இட்டாரே சாபமது தீர்வதற்கு
    எழிலுடனே தாரணியில் வந்தேனென்றார்
சட்டமுடன் பிரம்மாவு மெந்தனுக்கு
    சாங்கமுடன் வுபதேசம் சொன்னதாலே
திட்டமுடன் வுபதேசங் வேண்டேனென்று
    தீர்க்கமுடன் தேவபுரம் அடுத்துயானும்
வட்டமுடன் தேவேந்திர பகவான்தன்னை
    வாதித்து சிலகேள்வி கேட்டேன்யானே.

விளக்கவுரை :


425. கேட்டேனே பிரம்மாவி னுபதேசங்கள்
    கெடியான யென்செவியிற் கேளாதென்றோ
மாட்டானே யுந்தனிட வுபதேசங்கள்
    மானிலத்தில் நீயுமொரு மனிதனல்லோ
பாட்டனார் வுந்தனிட பாட்டன்தானும்
    பாரினிலே யென்மரபுக் குறியோரல்லோ
மாட்டிமையாய் நீயுமொரு மாண்பனல்லோ
    மானிலத்தில் சென்மமென்று தள்ளிட்டேனே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 416 - 420 of 12000 பாடல்கள்


416. இருப்பாரே கைலங்கிரி ரிடிதானப்பா
    எழிலான நடுமையம் படியந்தன்னில்
பொருப்பான நவரத்தின கசிதமான
    பொன்னான திருக்கூட மண்டபந்தான்
தருப்புகல வராட்சி மணிதானப்பா
    தாரணியில் நூறு யோசனைதான்கேட்கும்
துருப்புநிகர் சிங்களத்தா ராயிரம்பேர்
    தோறாமல் யேவல்பணி முன்னிற்பாரே.

விளக்கவுரை :


417. நிற்பாரே சிங்கள தேசத்தார்கள்
    நிலையான சித்தர்முனிக் கேவலாக
சொற்படியே கோட்டைதனைச் சுற்றியேதான்
    சோரமது போகாமல் காவலுண்டு
விற்படித்த மன்னவர்கள் காணானாடு
    வேதாந்த பீடமென்ற சித்தர்நாடு
அற்பமென்று நினையாதே புலஸ்தியாகேள்
    அழகான சிங்களவர் நாடுதானே. 

விளக்கவுரை :


418. நாடான ரிடிமுனிவ ரிருக்கும்நாடு
    நாதாந்தத் தங்கமென்ற மண்டபந்தான்
காடான யேகாந்த மண்டபத்தில்
    கைலங்கிரி ரிடியான பெரியோரப்பா
தாடாண்மைக் கொண்டதொரு சித்துதாமும்
    தாரணியில் நாலுயுகங் கொண்டசித்து
நீடான மயேஸ்வரத்தின் சித்துவப்பா
    நீணிலத்தி ரிடியாக வுதித்தார்பாரே.

விளக்கவுரை :


419. உதித்தாரே முன்யுகத்தில் பிரம்மர்சாபம்
    ஓகோகோ தேவரிடி யானவர்க்கு
கதிப்புடனே சாபமது நேர்ந்ததாலே
    கைலங்கிரி தன்னைவிட்டு வெளியில் வந்தார்
மதிப்புடனே வையகத்து சித்தரெல்லாம்
    மாட்சியோடு தேவதா ரிடியைத்தானும்
துதியோடு தேவதா மண்டபத்தில்
    துப்புறவாய்க் கொண்டசென்று துதித்தார்பாரே.

விளக்கவுரை :


420. பாரப்பா சித்தர்முனி ரிடியார் தாமும்
    பட்சமுடன் தேவதா ரிடியைப்பார்த்து
ஆரையா யென்சாமி யெந்தன்நாதா
    அவனியிலே யிருந்தவாசி யாயுதித்தீர்
பேரான பிரபஞ்ச மாய்கைதன்னை
    பேரின்பக் கடல்தனிலே தான்மறந்த
தீரமுடன் சித்தொளிவு ரிடியார்தம்மை
    தீர்க்கமுடன் கேட்கலுற்றார் முனிவர்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 411 - 415 of 12000 பாடல்கள்


411. செப்பலாம் யின்னம்வெகு வதிசயங்கள்
    தேற்றமுடன் சொல்லுகிறேன் புலஸ்தியாகேள்
ஒப்பமுடன் நர்மதா நதிக்குத்தெற்கே
    ஓகோகோ நாதாக்க ளிருப்பிடந்தான்
எப்போதும் வீற்றிருக்கும் பதியொன்றுண்டு
    எழிலான சிங்கள தேசமப்பா
அப்பெரிய பதிதனிலே விருட்சமப்பா
    அழகான தேவதா விருட்சமாமே.

விளக்கவுரை :


412. ஆமேதான் விருட்சமது கோடியுண்டு
    அழகான தோப்புண்டு பொய்கையுண்டு
நாமேதான் சொன்னபடி பொய்கைதன்னில்
    நடுவான மத்திபத்தில் மண்டபந்தான்
வேமேதான் யேமமென்ற மண்டபந்தான்
    வெளியரங்க மானதொரு விசித்திரரூபம்
தாமேதான் தேவாதி மண்டபந்தான்
    தகைமையுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே.

விளக்கவுரை :


413. பண்பான நீராழி மண்டபத்தில்
    பாங்கான தேவதச்சா விசுவகர்மர்
நண்பான தங்கமென்ற பாளந்தன்னால்
    நலமான விசுவரூப சுதந்தரங்கள்
கண்புடனே ரூபமென்ற ரேகையோடு
    கைலங்கிரி பர்வதம்போல் தானமைத்து
தண்மையுடன் சித்தர்முனி யிருக்கவேதான்
    தடாகமதிற் செய்துவைத்தார் விசுவர்தானே.

விளக்கவுரை :


414. தானான தேவதா விசுவரப்பா
    தரணியில் சித்தர்முனி யிருக்கவேதான்
கோனான குரூபீட மண்டபந்தான்
    கொற்றவனே கைலங்கிரி யென்னலாகும்
தேனான புலஸ்தியனே நண்பாகேளு
    தெய்வபுர மிதற்கீடு சொல்லப்போமோ
பானான மனோன்மணியாள் வாசஞ்செய்யும்
    பாங்கான தேவ மண்டபந்தானாமே. 

விளக்கவுரை :


415. மண்டபத்தை சுத்தியல்லோ மாமுனிவர்சித்தர்
    மதிப்புடனே ஒவ்வொரு படிகள்தோறும்
அண்டமுடி ராட்சதாள் பூதம்யாவும்
    அங்கணங்க ளொவ்வொன்றில் பாதுகாப்பார்
தண்டக ரிடிவனத்து சித்தர்தாமும்
    தகமையுடன் னொவ்வொரு படியில்நிற்பார்
கண்டிடவே நடுமையந் தன்னிலப்பா
    கைலாச ரிடியொருவ ரிருப்பார்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 406 - 410 of 12000 பாடல்கள்


406. சொல்லவே டில்லிக்குக் குடபாகத்தில்
    சொற்பெரிய தேவதாஸ் தலமொன்றுண்டு
புல்லவே தடாகமென்ற பொய்கையுண்டு
    புகழான மஞ்சள் தாமரையுமுண்டு
மல்லான மனவரஞ் சிதமுமுண்டு
    மகத்தான தேவதா புட்பமுண்டு
கல்லான கடகமது பொய்கைதன்னில்
    கண்டவர்க ளாயிருந்தான் யில்லைதானே.

விளக்கவுரை :


407. இல்லையே தேவதாஸ் தலத்திலப்பா
    எழிலான புலஸ்தியனே சொல்வேன்பாரு
கல்லையே கணியாக்கி கவுண்டுசெய்து
    கடிதான வாலயமாம் நடுமையத்தில்
வில்லைப்போல் நாணியது பூட்டியேதான்
    வீரான சூத்திரமாந் தானமைத்து
எல்லைக்குக் காவலாய் மதியம்பூண்டு
    எழிலாகத் தான்சமைந்து யிருக்கும்பாரே.

விளக்கவுரை :


408. பாரப்பா சித்தருள்ள தேவஸ்தானம்
    பளிங்கான குண்டுக்கல் பாணமுண்டு
மேரப்பா நடுமையந் தன்னிலப்பா
    மேலான சித்தருட கைமறைப்பு
ஆரப்பா யறிவார்க ளிந்தப்போக்கு
    அப்பனே சத்துரு சங்காரப்போக்கு
சேரப்பா ராஜாதி ராஜர்தம்மை
    செயிக்கின்ற குண்டுக்கல் பாணமாமே.

விளக்கவுரை :


409. பாணமாங் கோட்டைக்குள் ளிருக்குங்குண்டு
    பாங்கான தேவதாஸ் தலத்தின்குண்டு
மாணவே வையகத்து மாண்பர்தாமும்
    மகத்தான தேவதாஸ் தலத்தின்நேர்மை
காணவே வந்தவரைக் கொல்லுங்குண்டு
    கருவான சித்தரென்றா லழைக்குங்குண்டு
தோணவே சித்தாதி முனிவர்தாமும்
    தோற்றமுடன் தானிருக்குங் கோயிலாமே.

விளக்கவுரை :


410. கோயிலாம் தேவதாஸ் தலமுமாகும்
    குறிப்பான கோட்டையது சொல்லொண்ணாது
வாயிலாம் ராஜாஜி ராஜர்மெச்சும்
    வகுப்பான கோயிலுள்ளே சித்தர்கூட்டம்
பேயான ராட்சத பூதம்யாவும்
    பேரான கோட்டைக்குக் காவலுண்டு
தாயான மனோன்மணியாள் வீற்றிருக்கும்
    தகைமையுள்ள கோட்டையென்று செப்பலாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 401 - 405 of 12000 பாடல்கள்


401. காணவென்றால் வெகுகோடி மகிமையுண்டு
    காசினியில் கண்டவர்க ளாருமில்லை
பூணவே சிங்கமது வுரங்குங்காடு
    புகழான சிறுபுலிகள் உலாவுங்காடு
ஈணவே பலமிருக்ம் யிருக்குங்காடு
    எழிலான மாண்ப ரறியாதகாடு
தோணவே கண்ணுக்குத் தோற்றாகாடு
    தொல்லுலகோ ரறியாத வனமுமாச்சே.

விளக்கவுரை :


402. ஆச்சப்பா அவ்வனத்தில் கல்லொன்றுண்டு
    அப்பனே நூறு யோசனைதானப்பா
பேச்சப்பா சொல்லுதற்கு நாவுமில்லை
    பேரான வகலமது யெண்பதாகும்
காச்சலென்ற பரிதியது காணலாகா
    பாங்குடனே பனிமூடுங் குத்துக்கல்தான்
பாச்சலுடன் மேற்பாகஞ் செல்வதற்கு
    பாங்கான படியுண்டு சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


403. உண்டான படியல்லோ லக்கோயில்லை
    உத்தமனே படிதோறுஞ் சித்துதாமும்
அண்டமது முகத்தளவாய் வரைகள்தோறும்
    அணியணியாய் சித்தர்முனி வீற்றிருப்பார்
கண்டாலே யின்னாட்டு மாண்பர்தன்மை
    கல்லாகச் சமைத்திடுவார் சித்துதாமும்
தண்டவனம் யாரேனுஞ் செல்லமாட்டார்
    தரணிதனில் சிவயோகி செல்வான்கேளே.

விளக்கவுரை :


404. கேளேதான் சித்தர்முனி ரிடிகள்தாம்
    கெவனமுடன் குளிகையது கொண்டுமல்லோ
நாளேதா னவ்வழியே போவாருண்டு
    நலமுடனே யவ்வழியில் வருவதுண்டு
வீளேதான் நாதாக்கள் குடியிருப்பு
    விண்ணுலக மிதற்கீடு சொல்லப்போமோ
ஆளேதான் அவ்வனத்தில் யாருஞ்செல்வார்
    அப்பனே மாய்கையென்ற சித்துதாமே.

விளக்கவுரை :


405. சித்தான நவகோடி ரிஷிகள்தாமும்
    சீரான மண்டபத்தில் வீற்றிருப்பார்
குத்தான மேற்கல்லி லதிசயங்கள்
    கொப்பெனவே மிகவுண்டு சொல்லொண்ணாது
முத்தான ஜோதியென்ற விருட்சந்தானும்
    முனையான சிகரமதி லிருக்கும்பாரு
சத்தான நகரமெல்லாஞ் சோதிகாட்டும்
    சதாசிவத்தின் பெருமையது சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :

Powered by Blogger.