அகத்தியர் பன்னிருகாண்டம் 396 - 400 of 12000 பாடல்கள்


396. தாமான கற்பமது கொண்டபோது
    தாரணியில் கோடிவரை யிருக்கலாகும்
போமேதான் காயாதிக் கொண்டவர்க்கு
    பொங்கமுட னரைதிரையு மற்றுப்போகும்
நாமேதான் சித்தருட வைப்புதன்னை
    நாதாந்த முனிகளுமே செய்மாட்டார்
வேமேதான் கோட்டைக்குள் அதிசயங்கள்
    விதவிதமாய் இருப்பதுவுங் காணலாமே.  

விளக்கவுரை :


397. காணலாம் அயோத்திக்குக் கீழ்பாகத்தில்
    கடிதான நதியொன்று கானாறுண்டு
பூணவே கானாறு நடுமையத்தில்
    பொங்கமுடன் ஆயக்கால் மண்டபந்தான்
வாணமுடன் அளர்பூமி தன்னைச்சுற்றி
    வாகுடனே கதிர்போல சூழ்ந்திருக்கும்
நீணமுடன் நூறு யோசனையுந்தானும்
    நிலையான உவர்ப்பூவு சவுக்காரமாமே.

விளக்கவுரை :


398. காரமாஞ் சீனபதிக் கொப்பதாகும்
    கருவான சித்தர்முனி ஸ்தலமென்பார்கள்
தூரமுடன் கோட்டையது காணார்தானும்
    துப்புரவாய்க் கண்ணிற்குத் தோன்றாதாகும்
வீரமுடன் நவதாது பாஷாணங்கள்
    விளைகின்ற சத்துள்ள பிரிதிபாகம்
தீரமுடன் சித்தர்முனி நாதர்தாமும்
    சிறப்புடனே வீற்றிருக்கும் பூமிபாரே.

விளக்கவுரை :


399. பாரேதான் நர்மதா கிழக்கேயப்பா
    பாங்கான ராமகிரி தேசமுண்டு
ஊரேதான் ஒருநூற்றுக் காதமப்பா
    உத்தமனே நர்மதா கிழக்குபாகம்
சீரேதான் நடுநாடு மத்திபத்தில்
    சிறப்புடனே திட்டான மேடையுண்டு
நேரான மேடையில் நடுபாகத்தில்
    நெருக்கமுள்ள குன்றொன்று யிருக்குந்தானே.

விளக்கவுரை :


400. தானேதான் சமைந்திருக்கு மண்டபத்தில்
    சதகோடி சூரியர்போல் சித்தருண்டு
வானவர்கள் முதலான தேவர்தாமும்
    வந்திறங்கும் பொய்கையது சுனையொன்றுண்டு
தேனான சித்தர்முனி ரிடிகள்தாமும்
    தேர்வேந்தர் ராஜாதி மண்டபத்தில்
மானான மதிலோரஞ் சுற்றோரத்தில்
    மார்க்கமுடன் தவசுமிகச் செய்வார்காணே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 391 - 395 of 12000 பாடல்கள்


391. பார்க்கலாங் கன்னிடைய சித்தரப்பா
    பாருள்ள நிதிகளுக்குக் காவலுண்டு
தீர்க்கமுடன் கிங்கிலிய ராயிரம்பேர்
    தீரமுட னணியணியாய்க் காலலுண்டு
ஏர்க்கவே சித்தர்முனி ரிடிகள்தாமும்
    எழிலுடனே போவதும் வருவதுண்டு
மார்க்கமுடன் தலைவாசல் காளிகாவல்
    மகத்தான யிடமெல்லாம் வயிரவனாமே.

விளக்கவுரை :


392.  ஆமேதான் அரண்வாசல் கோட்டைதன்னில்
    ஆயிரம் பெருங்காதம் வழிகள்தோறும்
நாமேதான் சொன்னபடி சித்தர்கூட்டம்
    நாதாந்த சீடவர்க்கங் கூறப்போமோ
போமேதான் செனகமுனி கோட்டையப்பா
    பொங்கமுடன் சொல்வதற்கு நாவுண்டோசொல்
தாமேதான் பொன்னகர மிதற்கீடுண்டோ
    தாரணியில் சேடனவன் சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


393. சொல்லவென்றா லின்னமொரு மார்க்கம்பாரு
    துரைராச சுந்தரனே சொல்லக்கேளும்
நல்லதொரு அயோத்திக்கு மேற்கேயப்பா
    நலமான புல்லாணி தீர்த்தமுண்டு
வெல்லவே தீர்த்தமது நடுமையத்தில்
    வேதாந்தக் கூடமென்னும் மாளியுண்டு
புல்லவே திருமூலக் கூட்டத்தார்கள்
    புகழான கோட்டைக்குள் ளிருப்பார்தாமே.

விளக்கவுரை :


394. இருப்பாரே திருமூல வர்க்கத்தார்கள்
    எழிலாக யெண்ணாயிரம் மாந்தரப்பா
பொறுப்பான யவர்மரபு மெத்தவுண்டு
    புகழான திருமாலிக் கோட்டைக்குள்ளே
குருக்கள்மார் சிலதுபேர் முன்னேநிற்பார்
    குருவானத் திருமூலத் தீசர்முன்னே
திருப்புலவும் பொங்கனயி னார்களப்பா
    திருவாசல் கோட்டைக்குக் காவலுண்டே.

விளக்கவுரை :


395. காவலுடன் சீடவர்க்க மாயிரம்பேர்
    கனமான திருமூலத் தீசர்முன்னே
ஆவலுடன் ஞானோப தேயம்பெற்று
    அன்புடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
பாவமது தனையகற்றித் தவசியோர்கள்
    பான்மையுட னணியணியாய்த் தவமிருப்பார்
சாவதுவு மெப்போது மில்லையப்பா
    சட்டமுடன் கற்பங்கொண்டிருப்பார்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 386 - 390 of 12000 பாடல்கள்


386. கோடியாம் பூதங்கள் சூழும்நாடு
    கொற்றவனே வாசமுனி யிருக்கும்நாடு
நீடியே வண்ட ரறியாதநாடு
    நித்திலங்குஞ் சித்தொளிவு யிருக்கும்நாடு
தேடியே சித்தர்முனி ரிடிகள்தாமும்
    திறமுடனே கண்டறிந்த நாடுவாகும்
ஆடியே புலஸ்தியனே யப்பாகேளு
    ஆதி கைலாச நாடென்னலாமே.

விளக்கவுரை :


387. என்னலாம் புலஸ்தியனே யின்னங்கேளு
    எழிலான சித்தர்முனி யிருக்கும்ஸ்தானம்
பன்னவே டில்லிக்கு தெற்கேயப்பா
    பாங்கான சோழவள நாடொன்றுண்டு
முன்னேதான் பெரியோர்கள் சொன்னாப்போல
    மூதுலகோ ரறியாத ஸ்தலமொன்றுண்டு
பொன்னேகேள் மன்னவனே ராஜயோகா
    பொங்கமுடன் சித்தர்களுக் குகந்தநாடே.

விளக்கவுரை :


388. நாடான சோழவள நாடப்பாகேள்
    நலமான நடுமையந் தன்னிலப்பா
கூடான குன்றதுபோல் மலையொன்றுண்டு
    குறிப்பான யேழு யோசனைதானுண்டு
பாடான மலைக்குள்ளே சுனையொன்றுண்டு
    பாங்கான வாயிரம் படிதானுண்டு
தாடாண்மை யுள்ளதொரு செனகரப்பா
    தண்மையுடன் சுரங்கமதி லிருப்பார்தாமே.

விளக்கவுரை :


389. இருப்பாரே வெகுகோடி சித்தரப்பா
    எழிலான சுரங்கத்தின் படியின்மேலே
பொருப்பான ஒவ்வொரு சித்துதாமும்
    பொங்கமுடன் படிதோறுந் தவசிருப்பார்
விருப்பகலுங் கோட்டையது யெழுநூறுகாதம்
    வீருள்ள சூரியனைக் கண்டதில்லை
துருப்பான பொறுப்பளவு திரவியங்கள்
    துப்புரவாய்க் கொட்டிருக்கக் காணலாமே.

விளக்கவுரை :


390. காணலாம் வெகுகோடி செம்பொன்னப்பா
    கருத்துடனே சித்தர்முனி ரிடிகள்தாமும்
தோணவே தேடிவைத்த திரவியங்கள்
    தொல்லுலகை விலைமதிக்குங் கோடாகோடி
நாணவே நவரத்தின கசிதமெல்லாம்
    நாதாக்கள் தேடிவைத்த நெடுங்காலவைப்பு
பூணவே பொன்னி னாபரணமெல்லாம்
    புகழாகக் குவிந்திருக்கப் பார்க்கலாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 381 - 385 of 12000 பாடல்கள்


381. காணவென்றால் கைலாயங் காணவேண்டும்
    காணாட்டால் கோபுரத்தைக் காணவேண்டும்
பூணவே சித்தொளிவு முனிதானப்பா
    பொங்கமுடன் றானிருக்குங் கோபுரந்தான்
வேணபடி சித்தர்கள்தான் யிருக்கும்ஸ்தானம்
    விருப்பமுடன் யானுரைத்தேன் மைந்தாகேளு
தோணவே தடாகமென்று அதிலேயுண்டு
    தோற்றமுடன் மஞ்சள் தாமரையுண்டாமே.

விளக்கவுரை :


382. உண்டாமே மனோன்மணியா ளிருக்கும்பொய்கை
    ஓகோகோ நாதாக்கள் வணங்கும்பொய்கை
அண்டர்முனி ராட்சதர்கள் நடுங்கும்பொய்கை
    அழகான மண்டபந்தான் மத்திபத்தில்
குண்டலம்போல் வயிரக்கல் லிங்கமுண்டு
    கூறான வஞ்சுதலை நாகமுண்டு
சண்டமா ருதம்போல தொனிகள்கேட்கும்
    சட்டமுள்ள தேவாதி ஸ்தலமென்பாரே.

விளக்கவுரை :


383. என்பாரே வயோத்திக்கு வடக்கேயப்பா
    எழிலான நதியொன்று மலையொன்றுண்டு
குன்றான மலைதனிலே சுனையொன்றுண்டு
    குருக்களாஞ் சித்துவர்க்க சேனையுண்டு
வென்றிடுவார் ராட்சதாள் கூட்டமப்பா
    வீரமுனி லாடமுனி கறுப்பன்சாமி
நன்றான பிடாரிமுதல் தேவதைகள்கூட்டம்
    நலமான மலையோரம் நிற்பார்பாரே.

விளக்கவுரை :


384. பாரேதான் டில்லிக்கு மேற்கேயப்பா
    பாங்கான வளர்நாடு சித்துநாடு
நேரேதான் பூமிக்குள் சுரங்கமப்பா
    நெடுந்தூர மாயிரமாங் காதங்காணும்
சூரமுனி சித்துகளும் ரிடிகள்கூட்டம்
    சொற்பெரிய வகிலமென்ற கோட்டைதன்னில்
ஊரேதான் பாதாள பூமியாகும்
    உத்தமனே சித்தர்முனி வாசம்பாரே.

விளக்கவுரை :


385. வாசமாங் கோட்டைக்குப் பூதங்காவல்
    வளம்பெரிய கோட்டைநக ரெல்லாஞ்சுத்தி
பாசமுடன் கிடாரங்கள் கோடாகோடி
    பார்தீர்ந்து வைத்ததுபோல் நிற்கும்பாரு
நேசமுடன் யார்சென்று யெடுத்தாலுந்தான்
    நேர்மையுடன் பூதங்க ளறைந்துகொல்லும்
மோசமது வருகுமல்லோ முனிவர்தாமும்
    முசியாமல் காத்திருந்தார் கோடியாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 376 - 380 of 12000 பாடல்கள்


376. தானான சதுரமது கோட்டையுண்டு
    தருவான ராட்சதர்க ளிருக்குங்கோட்டை
கானாறு குகையுண்டு மலைவளங்கள்
    கடிதான ராட்சதர்கள் தூங்குங்காடு
வேனான வெளிக்காடு மண்டபங்கள்
    வேதமுனி ரிடிக்கூட்ட மனேகமுண்டு
தேனான மணிபோன்ற சித்துதாமும்
    சிறப்புடனே தானிருக்கும் பதியுமாமே.

விளக்கவுரை :


377. பதியான நர்மதா நதிக்குத்தெற்கே
    பாங்கான வக்கினியா றொன்றுவுண்டு
மதியான சூரியரும் காணாநாடு
    மகத்தான வெள்ளானை யிருக்கும்நாடு
துதியான சிவலிங்கம் வளருநாடு
    துப்புரவாய் வகிலமெல்லாம் லிங்கப்பிரேஷ்டை
நிதிவிளையும் காஞ்சனமா மென்னுநாடு
    நிலையான சித்தர்முனி யிருக்கும்நாடே.

விளக்கவுரை :


378.  நாடான டில்லிக்கு வடக்கேயப்பா
    நலமான புலஸ்தியனே சொல்வேன்பாரீர்
காடான காடுவாயிரங் காதந்தான்
    கதீதமுள்ள சிங்கமது உறங்குங்காடு
நீடான வேங்கையது வடர்ந்தகாட்டில்
    நேர்மையுடன் நடுமைய மத்திபத்தில்
கோடான கோடிமுனி ரிடிகள்தாமும்
    குறிப்புடனே வீற்றிருக்கும் விடுதியாமே.

விளக்கவுரை :


379. விடுதியாம் ஆயக்கால் மண்டபந்தான்
    விண்ணுலகை யெட்டுகின்ற கோபுரந்தான்
படுநிலையில் ஒவ்வொரு பீடந்தன்னில்
    பாங்குடனே வீற்றிருப்பார் முனிவர்தாமும்
அடுநிலையில் சிகரம்வரை முடிவுமட்டும்
    அணியணியாய் வீற்றிருப்பார் ரிடிகள்தாமும்
முடியோடே முடிநெருங்கும் நாதர்கூட்டம்
    மூதுலகில் சொல்வதற்கு நாவொண்ணாதே.

விளக்கவுரை :


380. ஒண்ணாது கோபுரத்தை யளவுசொல்ல
    உத்தமனே யாதிசேட னாலுமாகா
அண்ணாந்து பார்த்தாலும் முடிதான்போகும்
    ஆகாகா சித்தருட கோபுரந்தான்
கண்ணாலே பார்ப்பதற்கு முடியாதப்பா
    கைலங்கிரி வாசலது யிதற்கீடுண்டோ
குண்ணான மகம்மேரு விதற்கீடுண்டோ
    கொற்றவனே கோபுரத்தின் பெருமைகாணே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 371 - 375 of 12000 பாடல்கள்


371. ஆமென்ற சித்துமுனி சொல்லும்போது
    அங்ஙனவே மனதுவந்து சந்தோடித்து
நேமமுடன் முனிசொன்ன வார்த்தைதன்னை
    நிட்களமாய் மெய்யென்று மனதிலுன்னி
தாமெனவே நூலதனைக் குகைக்குள்வைத்தேன்
    தாரணியில் சிலசித்தர் பின்னதாக
ஓமமுடன் பெருநூலை வெளியிற்காட்ட
    உத்தமனே வெகுகோடி மனுசெய்தாரே.

விளக்கவுரை :


372. மனுசெய்த படியாலே புலஸ்தியாகேள்
    வையகத்தில் மானிடர்கள் பிழைக்கவென்று
கனுவுடனே யின்னூலை வெளியேவிட்டேன்
    கண்டறிவான் விதியாளி சொல்வான்பாரு
அணுவளவு பாகமது பிசகாவண்ணம்
    அப்பனே யானுரைத்தபெரு நூலப்பா
தணுவுடனே சதுருகத்தி லிருந்தநூலை
    சாற்றினேன் புலஸ்தியர்க்காய்ப் பெருநூல்தானே.

விளக்கவுரை :


373. பெருநூலாங் காவியமாம் பன்னிரெண்டு
    பேரான வொவ்வொரு முறைகளப்பா
அருமையாய் வொவ்வொரு முறைகளப்பா
    அனந்தம்வகை சொல்லிவிட்டேன் லக்கோயில்லை
குருவான யெனதையர் சொற்படிக்கு
    கோடான கோடிமுறை சொற்படிக்கு
திருவான மனோன்மணிதாய் கடாட்சத்தாலே
    தீரமுடன் பாடிவைத்த பெருனூலாமே

விளக்கவுரை :


374. நூலான யின்னமொரு மார்க்கங்கேளு
    நுணுக்கமுடன் புலஸ்தியனே சொல்வேனப்பா
தாலமாம் பதினெண்பேர் சித்தர்தாமும்
    தகைமையுட னவரவர்க ளிருந்தநாடு
கோலமாஞ் சமாதிகள் பூண்டநாடு
    கொற்றவனே நூல்பாடி வைத்ததேசம்
சீலமாம் அவரவர்கள் சீடவர்க்கம்
    சிறப்புடனே ஆராய்ந்து சொல்வேன்பாரே.

விளக்கவுரை :


375. பாரேதான் காசிக்கு மேற்கேயப்பா
    பாங்கான காயத்திரி பிரம்மநாடு
நேரேதான் டில்லிக்குக் கிழக்கேயப்பா
    நேர்மையுடன் பனிமூடி யிருக்கும்நாடு
ஆரான வசுவனியாம் நதியொன் றுண்டு
    அன்னதிக்கு நடுமையந் திட்டொன்றுண்டு
நூறான காதவழி யகலமுண்டு
    நுணுக்கமுடன் சதுர மவ்வளவுதானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 366 - 370 of 12000 பாடல்கள்


366. தண்மையா மவரவர்கள் செய்தபாகம்
    தகைமையுடன் இன்நூலில் காணலாகும்
பண்மையாம் பண்டிதங்கள் மெத்தவுண்டு
    பாரினிலே செய்ததொரு மகிமையாவும்
உண்மையாம் பலநூலுங் கண்டாராய்ந்து
    உத்தமனே யானுரைத்தேன் காவியந்தான்
வண்மையாம் ரிடிமுனிவர் சொன்னனூலில்
    வளமையுடன் பெருமருந்து யில்லைதானே.

விளக்கவுரை :


367. தானான யென்னூல்போல லனேகஞ்சித்தர்
    தாட்சியுடன் பாடிவைத்தார் சிலநூல்கள்
கோனான வசுவனியாந்தேவர்தானும்
    கூறினார் துவாபர யுகத்திலப்பா
பானான பராபரியாள் மனோன்மணித்தாய்
    பாங்குடன் தானுரைத்த குருநூல்தன்னை
மானான வையகத்தி லெந்தனுக்காய்
    மனதுவந்து சொன்னதொரு குருநூலாமே.
          

விளக்கவுரை :


368. குருநூலாம் அசுவனியாந் தேவர்தானும்
    குறிப்புடனே தானுரைத்த வடநூல்தன்னை
சிறுநூலா யெந்தனுக்கு தேவர்தாமும்
    சிறப்புடனே உபதேசஞ் சொன்னார்பாரு
பெருநூலா யடியேனுங் காவியமாய்ப்
    பிரியமுடன் பாடிவைத்த காண்டமப்பா
ஒருநூலும் பன்னீரா யிரத்துக்கொப்பாய்
    உலகுதனி லுவமைசொல்ல முடியாதன்றே.

விளக்கவுரை :


369. அன்றான சாத்திரத்தைப் பிரித்துப்பார்த்து
    அருமையுள்ள பனிரெண்டு காண்டஞ்சொன்னேன்
குன்றான மலைபோன்ற காண்டந்தன்னை
    குருவான ரிடிமுனிவர் சித்தர்தாமும்
தென்றிசையில் வாழுகின்ற ரிடிமுனிவர்தாமும்
    தேர்ந்தெடுத்துக் கொண்டதொரு குருநூலாகும்
பன்றான காவியத்தை முனிவர்மெச்சி
    பட்சமுள்ள காவியத்தை வையென்றாரே.

விளக்கவுரை :


370. வையென்றார் குகைதனிலே ரிடியார்தாமும்
    வையமெல்லாஞ் சித்தாகிப் போகுமென்றார்
கைதவமாய் மீறுகின்ற கர்மிதாமும்
    காசினியில் வெகுகோடி மாண்பருண்டு
மெய்பேசி நூலதனை வாங்கிக்கொண்டு
    மேதினியில் வெகுசித்து ஆடுவார்கள்
பொய்யான தோடிகட்கு யிந்தநாலு
    பொருக்குமோ பூமிதனில் பொருக்காதாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 361 - 365 of 12000 பாடல்கள்


361. காணலா மின்னூலி லனந்தங்கோடி
    கடிதான சூரணமும் ரசாயனங்கள்
தோணவே லேகியங்கள் கிருதமார்க்கம்
    தொகுப்பான யெண்ணையுடன் தயிலம்யாவும்
பூணவே செந்தூரம் பற்பம்யாவும்
    புகழான கட்டுவகை மெழுகுதானும்
வேணவே மாத்திரைகள் கபாடந்தானும்
    மிக்கான புகையுடனே வஞ்சனமுமாமே.

விளக்கவுரை :


362. அஞ்சான சற்பத்து பிளாஸ்திரிமார்க்கம்
    அப்பனே கப்புவகை யாவுந்தானும்
தஞ்சமுடன் சற்பத்து திராவகங்கள்
    தகைமையுடன் செயநீர்க ளனந்தம்போக்கு
கஞ்சமலர் மனோண்மணியாள் திலர்தப்போக்கும்
    கருவான மையினிட யெட்சணிமார்க்கம்
துஞ்சான வஷ்டாங்க யோகமார்க்கம்
    துறையான செகசால முழுதும்பாரே.

விளக்கவுரை :


363. பாரேதான் சாலமுட னிந்திரசாலம்
    பாங்கான மயேந்திரமாஞ் சாலத்தோடு
நேரேதான் விபூதியின் மார்க்கந்தானும்
    நிலையான கோட்டை முதல்காணலாகும்
வேரேதான் மசானத்தின் கிரியையெல்லாம்
    மேதினியி லிதிலடக்கஞ் சொல்லப்போமோ
சீரேதான் காயாதி கற்பம்யாவும்
    சிறப்புடனே பாடிவைத்தே னின்னுல்தானே.

விளக்கவுரை :


364. தானான சாத்திரங்க ளிதிலடக்கம்
    தகைமையுள்ள வேதமது யிதிலடக்கம்
பானான மனோன்மணியா ளுபதேசங்கள்
    பாடிவைத்தேன் இந்நூலி லடக்கமப்பா
கோனான புலஸ்தியனே யின்னஞ்சொல்வேன்
    குவலயத்தி னதிசயங்கள் மிகவாய்க்கேளும்
தேனான சித்தர்முனி ரிடிகள்தாமும்
    தேடிவைத்த திரவியங்கள் செப்புவேனே.

விளக்கவுரை :


365. செப்புவேன் சித்தருட மரபுமார்க்கம்
    செயலாக சமாதியிட மார்க்கந்தானும்
ஒப்பமுடன் சீடவர்க்கக் கூட்டத்தார்கள்
    ஓகோகோ நாதாக்கள் பெருமைசொல்வேன்
இப்புவியி லிருந்தசித்து கோடியுண்டு
    யெழிலான விவரவர்கள் செய்தமார்க்கம்
தப்பிதங்க ளில்லாம லின்நூலிற்றான்
    தகைமையுடன் யானுரைப்பேன் தண்மைபாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 356 - 360 of 12000 பாடல்கள்


356. போற்றுவார் பதினெண்பேர் சிவராசயோகி
    பொங்கமுடன் பாடிவைத்த நூலையெல்லாம்
மார்க்கமுடன் கண்டுமிக வாராய்ந்தேதான்
    மானிலத்தில் மயக்கமது தெளியாமற்றான்
தீர்க்கமுடன் யென்னூலைப் பார்த்தபேர்கள்
    திறமான நூலிதுதான் பெருநூலென்பார்
ஆற்கமுடன் யெனதைய்ய ரசுவனியாந்தேவர்
    அவருடைய புசபலந்தா லறைந்திட்டேன்.

விளக்கவுரை :


357. அறையவே பெருநூல் காவியத்திலப்பா
    அப்பனே யான்சொன்ன முறைகளெல்லாம்
குறையாமல் செய்துமல்லோ முடிப்பாரானால்
    குவலயத்தி லவருமொரு சித்தனாவார்
முறைபோல செய்பவனே சிவராசயோகி
    மூதுலகில் கறைகண்ட சித்தனப்பா
திறைகடலுஞ் சத்த சாகரமுமான
    திறமான காண்டமிது பெருநூலாமே.

விளக்கவுரை :


358. ஆமேதா னின்னூலி லடக்கஞ்சொல்வோம்
    அப்பனே யஷ்டசித்து மிதிலடக்கம்
நாமேதான் சொன்னபடி கருவனந்தம்
    நாதாக்கள் கைமறைப்பு யனந்தமுண்டு
போமெனவே கூடுவிட்டுக் கூடுபாய்தல்
    பொருங்கமுடன் கருவிகர ணாதியெல்லாம்
தாமேதான் சிவயோக மிதிலேதோன்றும்
    சட்டமுடன் அஷ்டமா சித்துபாரே.

விளக்கவுரை :


359. பார்க்கையிலே மோகனமு மிதிலடக்கம்
    பாங்கான பேதனமு மிதிலேதோயும்
ஏர்க்கவே வித்வேஷணம் இதிலேகாட்டும்
    யெழிலான வுச்சாடன மிதிலடக்கம்
தீர்க்கவே வசியமுத லாக்குருஷணமாகும்
    திறமான மாரணமும் ஸ்தம்பனமுமாகும்    
மார்க்கமுடன் ஞானமுதல் யோகமிதுபாரும்
    மகத்தான கிரியையெல்லா மிதறகுள்ளாச்சே.

விளக்கவுரை :


360. ஆச்சப்பா வாதமுதல் வயித்தியபாகம்
    அருமையுள்ள சாலமுதல் சிமிட்டுப்போக்கு
நீச்சப்பா கருவித்தை யனேகங்கோடி
    நிலையான கைமசக்கு மாதுதந்திரம்
காச்சப்பா சொக்குபொடி பிரணவமந்திரம்
    கருவான நோக்குவித்தை குறளிசாலம்
மாச்சலென்ற மூலியிட வசியப்போக்கு
    மகத்தான டமகரங்கள் காணலாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 351 - 355 of 12000 பாடல்கள்


351. பார்த்தபின்பு திருமூல வர்க்கத்தார்கள்
    பாடிவைத்த மரபுநூ லாயிரந்தான்
நேர்த்தியுடன் ஆயிரத்துச் சொச்சமப்பா
    நேரான சுருக்கமது நூறும்பாரு
பூர்த்தியாய்ப் பதினெண்பேர் ஜாதிவர்க்கம்
    பூட்டினார் திருமூல வர்க்கத்தார்கள்
சாத்திரங்கள் பலநூலுங் கண்டாராய்ந்து
    சட்டமுடன் நூல்தனையே பாடினாரே.

விளக்கவுரை :


352. பாடினார் பதினெண்பேர் சித்தர்தாமும்
    பாருலகில் சமாதியது பூண்டவண்ணம்
தேடியே பார்க்கும்மந்தக் காலந்தன்னில்
    தெளிவாக போகரே ழாயிரத்தில்
கூடியே பதினெண்பேர் சமாதியெல்லாம்
    கொப்பெனவே போக ரேழாயிரத்தில்
நாடியே காலாங்கி நாதர்தம்மால்
    நயமுடனே பாடிவைத்தார் போகர்தாமே.

விளக்கவுரை :


353. தாமான போகரே ழாயிரந்தான்
    தாரணியில் பெருநூலாம் மற்றொன்றில்லை
பூமான மானதொரு காலாங்கிநாதர்
    புண்ணியனார் வரம்பெற்ற போகநாதர்
நேமமுடன் தானுரைத்த சத்தகாண்டம்
    நேர்மையுடன் வையகத்தில் பெருநூலப்பா
ஆமெனவே கண்டவர்கள் யோகவானாம்
    அவனியிலே யவனுமொரு சித்தனாமே.

விளக்கவுரை :


354. சித்தனா மவர் நூல்போல் மறுநூலில்லை
    செகதலத்தில் பதினெண்பேர் சொன்னதில்லை
சத்தமுடன் காண்டமது யேழாயிரத்தில்
    சாற்றினார் லோக வதிசயங்களெல்லாம்
புத்தியுடன் போகரிடி யனேகநூல்கள்
    புகழாகப் பாடிவைத்தார் சீஷருக்கு
முத்தியுடன் பெருநூ லேழாயிரந்தான்
    முதன்மையாம் நூலென்று சொல்லலாமே.

விளக்கவுரை :


355. சொல்லலாம் அந்நூலுக் கெந்நூலப்பா
    தோறாத பெருநூல் காவியந்தானாகும்
வெல்லவே பனிரெண்டு காண்டமப்பா
    விருப்பமுடன் பாடிவைத்தே னின்னூல்தானும்
பல்லவே பன்னீராயிரக் காவியந்தான்
    புகட்டினேன் லோகத்தின் மார்க்கமெல்லாம்
நல்லதொரு சிவராச யோகிமார்கள்
    நண்புபெற யென்னூலைப் போற்றுவாரே.

விளக்கவுரை :

Powered by Blogger.