சட்டை முனி சித்தர் பாடல்கள்  146 - 150 of 203 பாடல்கள்

146. ஆமப்பா விதற்கு முன்னப் பியாச மார்க்கம்
          அறைகுவே னட்டாங்கம் நன்றாய்க் கேளு;
ஓமப்பா வகையாக விரித்துச் சொல்வேன்
          உத்தமனே சாட்சிநித் திரையைப் போக்கு
தாமப்பா சதாநித்தம் தார கத்தே
          சார்ந்துநின்ற கேசநிலை சதாநித் தம்பார்
சோமப்பால் சுழித்தோடுங் கேசரியைக் கண்டால்
          சொல்லாத முத்திரையைச் சொல்லு றேனே.

விளக்கவுரை :
           
147. சொல்லுறேன் ரவிமதியும் வன்னி கூடிச்
          சொலித்துநின்ற விடமல்லோ கேசரிதா னப்பா
சொல்லுறே னதைப்பார்மனஞ் செயநீ ராகும்
          சுத்தவெளி யடியோடே தாக்கி யேத்தும்
சொல்லுறேன் மனம்புத்தி சித்த மென்பார்
          தொடர்ந்துநின்ற குருபதத்தைச் சூட்டிக் கேளு
சொல்லுறே னறிந்தமட்டும் புருவ மையம்
          சூட்சந்தொட் டேறியட்டாங் கத்துறை கேளே.

விளக்கவுரை :
           
148. கேளப்பா ஏமத்தைச் சொல்வே நானுங்
          கெடியான நேமமூட னாசங் கொண்டு
வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம்
          மகத்தான கியானமொடு தாரணை கேளு
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம்
          தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய்ப் பாரு
வேளப்பா ஏமமென்ற பத்துஞ் சொல்வேன்
          வேதாந்த பொறியறிந்தோர் பெரியோர் தாமே.

விளக்கவுரை :
           
149. பெரியோர்கள் அண்டமென்ற ஆன்மா நோக்கிப்
          பேரான பரிச்சின்ன மனமு மாகி
அறியோர்கள் சாதியென்ற ஆச்சிரம் விட்டே
          ஆசையென்ற விகற்பமெல்லா மடித்துத் தள்ளிப்          
பரியோங்க ளிங்கிசையை நீக்கிப் போட்டுப்
          பராபரத்தை நோக்குவதங் கிசம தாகும்
சரியோரா வதுஞ்சகல மதத்தி னாலுந்
          தனித்தனியே கண்டிக்கப் படாதென் பாரே.

விளக்கவுரை :
           
150. என்பார்க ளிங்கிசையா யிருக்கு மாண்பர்
          எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி
அன்பார்க ளிதுவல்லோ சத்தி யந்தான்
          ஆரதிக ஆன்மசரீ ராதி சுபாவம்
வன்பார்க ளபகரிப்பை விட்டு விட்டு
          மனமுரைத்தா லூரதிக மென்று பேரு
தன்பார்கள் பிறசரீ ராதி சுபாவந்
          தானென்ற தற்குலலட் சணந்தான் பாரே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  141 - 145 of 203 பாடல்கள்
           
141. இறங்கினே னால்வரைக்கப் புறமே போக
          என்னாலே முடியாதே யேதோ அஞ்சில்
இறங்கினே னென்மக்கா ளும்மா லாமோ
          ஏதுசொன்னாய் பேய்ப்பிள்ளா யென்ன பேச்சு
இறங்கினே னிந்நாள்பின் னையார் சொல்லார்
          ஏகவெளி திக்காடு மிடியோ கோடி
இறங்கினே னென்னாலே முடிவு காணேன்
          ஏறினார் கொங்கணர்தா மேறி னாரே.

விளக்கவுரை :

கொங்கணர் மகத்துவம்

142. ஏறியதோர் கொங்கணரைப் போலே யில்லை
          ஏகவெளி தீக்காட்டெப் படியோ போனார்
மாறியதோர் மனம்பிடித்தார் யோக மானார்
          மாளுவது நிசமென்று வாய்மை பூண்டார்
கூறினதோ ரறுவரையைக் கண்டு முட்டக்
          குமுறியதோர் சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்
ஆறியதோர் மனங்கண்டா ரவரே சித்தர்
          ஆச்சரியங் கொங்கணர்போ லார்கா ணேனே.

விளக்கவுரை :
           
143. காணரிது காணரிது கோடா கோடி
          கண்டுநான் பாபருட்ச சித்தர்க் குள்ளே
பூணரிது பூணரிதே அகண்ட வீதி
          புக்கல்லோ சிலம்பொலியைக் கேட்க மாட்டார்
ஊணரிது ஊணரிது வெளியிற் பார்த்து
          ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள்
தோணரிது தோணரிதாய் நின்ற ஞானம்
          சீடருக்குள் ளோடுறது துரியந் தானே.

விளக்கவுரை :
           
சாங்கத்தார்
144. தானென்ற பூரணத்தைச் சாங்கத் தோர்கள்
          சகமெல்லாம் நிர்க்குணமாய் நின்ற தென்பார்
வானென்ற வெளியென்பா ரில்லை யென்பார்
          வாய்பேசார் சொன்னக்காற் போமோ சொல்லு
கோனென்ற குருவருளால் சமாதி கூட்டிக்
          குவிந்துநின்று மவுனத்தின் நிலையைப் பற்றி
ஊனென்ற வுடம்பைவிட்டே அறிவாய் நின்று
          உலாவுறதே சாங்கமென்றே யுரைத்திட் டாரே.

விளக்கவுரை :
           
145. உரைத்திட்ட காரமென்ன பிருதிவி போக்கு
          ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து
மறைத்திட்ட மவுனத்துடன் மவுன மூட்டி
          மருவியந்த வறிவோடே வாச மாகி          
நிறைந்திட்ட அகண்டமுத்தி சென்றே ஆடி
     நேரான அண்டமுதற் புவனம் பார்த்து
முறைத்திட்டந் தப்பாமற் சமாதி நின்றால்
     முழுயோகி முழுஞான முமூட்சா வாயே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  136 - 140 of 203 பாடல்கள்
           
136. பிள்ளையென்றா லவரல்லோ போக ருக்குப்
          புகழான ரிஷிகளெல்லாஞ் சித்த ரென்பார்
தள்ளையென்றா லவர்தாமூ லரிடம் போன
          சச்சிதா னந்தவின்ப மான பிள்ளை
கொள்ளையென்றா லவர் கொள்ளை ஞான வீதி
          கொடிதான சிலம்பொலியைக் கேட்டு மீண்டார்
பிள்ளையென்று வந்ததனால் கீர்த்தி யாச்சு
          வேதாந்த அந்தமெல்லாம் வெளியாய்ப் போச்சே.

விளக்கவுரை :
          
137. போச்சென்று சொல்வதென்ன போய்வா னையா
          புத்தி சொன்ன புத்தியெல்லாம் போட்டிட் டாயோ?
வாச்சென்று நின்வயிற்றிற் பிறந்த பிள்ளை
          வந்தாலென் கெட்டாலென் மகத்வ முண்டோ?
கோச்சென்ற நாவமென்ன விடிந்தா லென்ன
          கோடிரவி காந்தியென்ன பயமுண் டாமோ?
ஓச்சென்ற சிலம்பொலியைக் கண்டு வாரேன்
          ஒருமனமாய்ப் பூரணத்தி லுன்னி டீரே.

விளக்கவுரை :

138. உன்னிடீர் அண்டமுதற் புவனந் தாண்டி
          ஒரு நொடிக்குட் பதந்தாண்டி முப்பாழ் தாண்டி
மன்னுதிரு வருள்மனையைக் கண்டு போற்றி
          மருவியதோர் புரணத்திற் சென்றே யேறிப்
பன்னிடுவீர் தினந்தோறும் பழக்க மையா
          பாயுடனே யதுநடந்து வரைக ளாறும்
தன்னிடிர்யோ கறியேனும் அருளாற் போறேன்
          தயாநிதியே கடாட்சித்தே அனுப்பு வீரே.

விளக்கவுரை :
           
139. அனுப்புவது பிறகுனையான் சென்று வாரேன்
          அவ்வளவுங் குகைக்குள் நீ பட்ட மாய்நில்
தனுப்பிறந்த தளிபோலச் சென்று தாண்டிச்
          சாதகமாய்ச் சொருபமணி மூன்றுங் காட்டிச்
கணுப்பிறந்த கமலியது பூண்டுங் காட்டிக்
          காட்டிலே யட்டமாசித் தியினால் காட்டி
உணுப்பிறந்தோர் தாண்டிலொரு வரையி லேறி
          உற்றுமறு வரைதனி லோடி னேனே.

விளக்கவுரை :
           
140. ஓடினேன் மூவரையி லிடியோ கோடி
          ஓகோகோ ரவிகோடி வன்னி கோடி
வாடினேன் மனமிளைத்தேன் மயக்க மானேன்
          வாயிட்ட குளிகைசென்றே யேறிப் போறேன்
நாடினேன் கற்பமொன்று மூவரையிற் றாண்டி
          நலமாக நாலுவரைக் குள்ளே சென்றேன்
ஆடினே னாடினே னறிவு கெட்டேன்
          அரகரா மோசமென்றே யிறங்கி னேனே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  131 - 135 of 203 பாடல்கள்
           
131. தானென்று சொன்னதென்ன என்னைப் பெற்ற
          சச்சிதா னந்தவெள்ளத் தயவுள் ளாரே
கோனென்ற முக்குளிகை நமக்குண் டையா
          கொடியதொரு மவுனவித்தை நமக்குண் டையா
பானென்ற வாசிவித்தை நமக்குண் டையா
          பாங்கான காயசித்தி நமக்குண் டையா
வானென்ற வெட்டவெளி யேறி யாடி
          வருகிறேன் விடைகொடுத்து வாழ்த்தி டீரே.

விளக்கவுரை :
           
132. வாழ்த்தியுன்னை யனுப்பினால் பூர ணந்தான்
          வரைகடந்தே ஆறுவரை யேறு வாயோ?
வாழ்த்தியுன்னை யனுப்பினால் நரகத் துள்ளே
          மயங்காமற் சொல்லுவையோ மைந்தா சொல்லு
வாழ்த்தி யுன்னை யனுப்பினா லிடியிற் குள்ளே
          மயங்காமற் றியங்காமல் மருவு வாயே?
வாழ்த்தியுன்னை யனுப்பினா லென்ன முன்னால்
          வாய்ப்பேச்சா வரைகடக்கும் மார்க்கம் தானே?

விளக்கவுரை :

133. மார்க்கமென்ன எனையீன்கை லாய மூர்த்தி!
          மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன்
சேர்க்கமென்ன சிவாலயங்கள் பலியேற் றுண்டேன்
          சிவமேது நீரன்றி வேறு காணேன்
ஆர்க்கமென்ன குளிகையிட்டுச் சென்று போறேன்
          அங்கங்கே மனந்தேறிப் போறேன் போறேன்
தீர்க்கமென்ன சொக்கினாற் சொக்கிப் போறேன்
          திரும்பினால் சடத்தோடே திரும்பு வேனே!

விளக்கவுரை :

134. திரும்புவையோ என்மகனே திடந்தா னுண்டோ
          சிறுபிள்ளை புத்தியல்லோ செப்பு றாய்நீ?
வளர்பிறையோ தேய்பிறையோ ரவியி னுள்ளே
          வருவதுபோ லல்லவது மாட்டி வாங்கும்
பரும்பிறையோ யோகமது பிறவி கோடி
          பாங்கான வொளிக்குள்ளே கண்ணோ கூசும்
அரும்பிறையோ மனந்தளும்பு மேவொட் டோதே
          அரகரா என்மகனே யறிவாய் நீயே.

விளக்கவுரை :
           
135. அறியாத வரைபார்க்க நான்தா னேறி
          அய்யனே மூன்றுவரைக் குள்ளே சிக்கி
நெறியாக நால்வரையி லேறொட் டாமல்
          நிமிடத்தி லறிவினிலே வந்து நின்றே
மறிவானம் படைத்தகொங் கணரே சித்தர்
          மற்றோரை யான்காணேன் மைந்தா சொல்லு
பொறியான வழியடக்கிச் சூட்ச மாகிப்
          போனவரார் போகருடைப் பிள்ளை தானே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  126 - 130 of 203 பாடல்கள்

126. காணப்பா ரிஷியாட்டுஞ் சித்த ராட்டுங்
          காரணமாய் மவுனத்தே நின்றோ ராட்டும்
பூணப்பா பூரணத்தே நின்றோ ராட்டும்
          பொன்னாக மரமுதலாய்ப் புகழ்ந்தோ ராட்டும்
ஓணப்பா வாசியுடைக் குதிரை யாட்டும்
          ஒன்றுமற்றுத் தன்மயமாய் நின்றோ ராட்டும்
தோணப்பா யிவையெல்லாங்கொங் கணர்க்கே யல்லால்
          சூழலகிற் சித்தருண்டோ சொல்லி டீரே.

விளக்கவுரை :
           
127. சொல்லிடமாய் ஞானமுண்டோ குளிகை யுண்டோ?
          சூட்சித்த கற்பமுண்டோ வாசி யுண்டோ?
மல்சுட்ட வாதமுண்டோ சுன்ன முண்டோ?
          மகத்தான சிக்கியுண்டோ செயநீ ருண்டோ?
வெல்லிடீர் விடமுண்டோ சாரணை யுண்டோ?
          வெவ்வேறே கூட்டுகிற குடோரி யுண்டோ?
அல்லிடீர் வேதைசகு வணந்தா னுண்டோ?
          அப்பனே பதினேழு மமைத்திட் டாரே.

விளக்கவுரை :
           
128. அமைத்தவர்முக் காண்டம்பா டியதோ ரங்கம்
          வந்தித்த பிள்ளைக்கு மறிவு தோன்றும்
அமைத்தவர் பாடினபொற் கம்பி போல
          அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாதசித்தி
அமைத்தவர் சுருவெட்ட வெளிய தாக
          அங்கங்கள் மறையாமற் சொன்னார் சொன்னார்
அமைத்தவர்பாட் டுக்குநம் முடைய நூல்தான்
          அருகாக மறைப்பென்றே அறைந்திட் டாரே.

விளக்கவுரை :
           
129. அறைந்திட்டா ரைந்நூறு பிள்ளை வேண்டி
          அப்பப்பால் வெகுதெளிவு சாத்தி ரந்தான்
நிறைந்திட்ட ஆரணம் போல் வெளிய தாக
          நீங்காமற் றுறந்துவிட்டா ரருளொடு பொருளும்
குறைந்திட்ட புத்தியல்நிட் களமாம் புத்தி
          கூறாத பொருளையெல்லாங் கூறி விட்டார்
வறைந்திட்ட மவுனமெல்லாம் வெளிய தாக
          வாய்திறக்கா வித்தையெல்லாம் விளக்கி னாரே.

விளக்கவுரை :

130. விளங்கியதோர் கொங்கணரால் மூல வர்க்க
          மகத்துவந்தா னுண்டாச்சு மக்காள் மக்காள்!
விளங்கியதோர் கீர்த்தியுண்டோ வுங்க ளாலே
          வெட்டவெளிக் கப்புறத்தே செல்ல மாட்டீர்;
முளங்கியதோர் குளிகையென்ன காய சித்தி
          மூச்சற்ற விடத்திலே நோக்க மென்ன
பிளங்கியதோர் சித்தருட வர்க்க மென்ன
          பேய்மக்கள் மூவைந்து பேரிற் றானே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  121 - 125 of 203 பாடல்கள்
           
121. ஆச்சப்பா நாள்வரையி லேறும் போது
          அரகரா வெகுகோடி யிடிபோல் நாதம்
மூச்சப்பா வோடாது முன்பின் றோணா
          முதிர்ந்தமன மாயையினால் பின்னுஞ் சென்றார்
கூச்சப்பா ஐவரையிற் போக்கி நின்று
          குருகுரென மொழிந்ததிலே மனமுந் தேறிப்
போச்சப்பா சடமொன்று நிராசை யாகிப்
          புக்கினார் அறுவரையிற் புக்கினாரே.

விளக்கவுரை :
122. புக்கியல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே
          புலம்பினார் மூலருடைப் பேரன் பேரன்
மக்கியல்லோ மனம்போச்சுக் குளிகை போச்சு;
          மாறாத மௌனமுன்னே மாண்டு போச்சு;
ஒக்கியல்லோ சிலம்பொலிதா னுள்ளே வாங்கி
          ஓகோகோ குளிகையது கீழே வாங்கு
சொக்கியல்லோ யென்செய்வே னென்றே யேங்கித்
          துரியத்தை விட்டு மெள்ளக் கீழ்க்கொண் டாரே.         

விளக்கவுரை :
           
123. கீழ்க்கொண்டார் கீழ்க்கொண்ட கொடியாஞ் சித்தர்
          கேசரத்தை விட்டுமெள்ள அறிவில் நின்று
நாட்கொண்ட பாடெல்லாம் நினைத்துக் கொண்டு
          நான்பிழைத்தே னான்பிழைத்தே னென்று சொல்லி
ஆட்கொண்டா என்குருபூ ரணத்தில் நின்றீர்
          ஆச்சரிய மெனையீன்று மிவரை யையா!
வேட்கொண்டா யென்றவத்தை யீந்த னையா
          வெறுவெளியாஞ் சிலம்பொலியை மேவென் றாரே.

விளக்கவுரை :
           
124. மேவென்று சொல்லுமுன்மேற் கண்ட போகர்
          வேதாந்த சிரோமணியைப் பெறுதி மைந்தா!
கோனென்ற குருவுக்கும் அவரே சீடர்
          கோடிலட்சத் தொருசீட ருண்டோ காணேன்;
பானென்ற வேதாந்தஞ் சித்தாந் தம்பார்
          பறக்கிறதோர் குளிகைமுதல் வாதம் பார்த்துத்
தேனென்ற கைலாய வர்க்க மாகிச்
          சித்தருக்குச் சித்தராய் ரிஷியா னாரே.

விளக்கவுரை :
           
125. ரிஷியென்ன சிலம்பொலியைக் கண்டா ருண்டோ
          நேராக வதற்குள்ளே சேர்ந்தா ருண்டோ
ரிஷியென்ன ரசவித்தை யறிந்தா ருண்டோ
          நிமிடத்தில் கவனமுற்றுத் திரிந்தா ருண்டோ
ரிஷியென்ன அண்டமுதற் புவனந் தாண்டி
          நின்றநிறை யாய்க்கண்டு வந்தோ ருண்டோ
ரிஷியென்ன மவுனமுற்றுச் சுமாதிக் குள்ளே
          நின்றதனால் திகைமையாய் நினைவாய்க் காணே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  116 - 120 of 203 பாடல்கள்
           
116. காணப்பா சொரூபமொன்று கலிதா னொன்று
          கையடங்கா தட்டமா சித்தி யொன்று
பூணப்பா கைகொடுசின் மயமாந் தேவர்
          பொருளோடே அருளான போக்குக் காட்டித்
தோணப்பா தோன்றிநிற்கும் சும்மா அம்மா
          சுபமாக இசைந்ததிலே சொக்கு மென்பார்;
வீணப்பா மற்றதென்சின் மயத்தைக் காட்டி
          வேதாந்த மூலத்தை விளம்பென் றாரே.

விளக்கவுரை :
           
117. விளம்பினார் சனகாதி வேதங் கோடி;
          விதத்தாரே மவுனத்தைச் சண்டி கேசர்
விளம்பினார் பதஞ்சலியு மனந்தங் கோடி;
          விரித்தல்லோ திருமூல ரனேகஞ் சொன்னார்;
விளம்பினார் வாவாதா மென்று யானும்
          விரியாம லிருநூறு ஞானம் சொன்னேன்;
விளம்பினார் வெகுவாக என்னூல் கொஞ்சம்
          வேதாந்த மிருநூறும் விரைந்து காணே.

விளக்கவுரை :

118. காணப்பா மும்மணிகை லாய வர்க்கம்
          கழியாமற் பிள்ளைகட்கே மற்றோர்க் கில்லை;
தோணப்பா இவைமூன்றுஞ் சித்தர் சொல்வார்
          சொற்பெரிய பூரணமே சொல்ல வேணும்;
வீணப்பா ஆராலும் சொல்லக் கூடா
          வேதாந்த அந்தத்தில் வெளியிற் கூட்டும்
ஆணப்பா அறுபத்துநால் மரபுக் குள்ளே
          ஆருமே யில்லையதை அறியார் காணே.

விளக்கவுரை :

119. அறியாத குளிகையுடன் சாரணையிற் குத்து
          அதன்பெருமை காணக்கொங் கணரைக் கேளு;
அறியாத அண்டமுதற் புவனம் பார்த்து
          அருவியதோர் பதம்பார்த்துத் திரிந்தே ஆடிக்
குறியாகக் கற்பமெல்லா மேறிப் பார்த்துக்
          கூறாத பூரணத்தைக் காண்பே னென்று
நெறியாக மனமுரைக்கக் குளிகை கட்டி
          நேராக மனவரையி லேறி னாரே.

விளக்கவுரை :
           
120. ஏறினா ரறுவரையி னியல்புங் கண்டே
          இதமாக அறிவுடைய வரையிற் சென்று
தேறினார் மனமுரைத்தார் கண்டத் தேறச்
          சேர்ந்தேறச் சேர்ந்தேறி வரையிற் றாண்டிக்
கூறினா ரிவ்வளவு மொன்றோ வென்றார்
          கூசாமல் மருவரையில் குதிரைப் போட்டார்
மாறினால் சென்றுமணம் பிடித்துச் சென்றார்
          வரைமூன்றுங் கடக்கவொரு கற்ப மாச்சே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  111 - 115 of 203 பாடல்கள்            
111. கேளப்பா மூலர்க்குகா லாங்கி பிள்ளை;
          கெடியான காலாங்கி மைந்தர் போகர்;
நீளப்பா போகர்பிள்ளை கொங்க ணர்தான்;
          நேராக நான்குமுறை பேர னாகித்
தாளப்பா மேருவிலே தவசு பண்ணிச்
          சாதகமாய்க் கைலாய வர்க்க மானார்;
ஆளப்பா பிள்ளையென்றா லவரே பிள்ளை;
          ஆச்சரிய மின்னமுண்டு சொல்லு வேனே.

விளக்கவுரை :
           
112. சொல்லுகிறேன் சிங்கென்று முன்னே யூன்றிச்
          சோதிகண்ட பின்பதிலே மனத்தை யூன்றிச்
சொல்லுகிறேன் அங்கென்று பின்னே யூன்றிச்
          சோதியிலே அக்கரங்கள் தனமுங் கண்டு
சொல்லுகிறேன் பின்பல்லோ மவுன முன்னித்
          தொடர்ந்தேறித் தளமெல்லாம் பார்த்துக் கொண்டு
சொல்லுகிறேன் புருவமை யத்திற் கூடித்
          துரியமென்ற அறிவினுள்ளே சொக்கினாரே.

விளக்கவுரை :
           
113. சொக்கியல்லோ அறிவைவிட்டே அகண்ட மேறித்
     துயரறவே சமாதியுள்ளே கற்ப முண்டு
சொக்கியல்லோ மூன்றுவரை சடத்தோ டொக்கச்
     சுருபவரை காணவென்று துணிந்து பொங்கிச்
சொக்கியல்லோ ஏறுவதற்கிவ் விதமா மென்று
     சோதித்துக் குளிகையெல்லாம் பார்த்துப் பார்த்துச்
சொக்கியல்லோ ஏற்றிவைக்குஞ் சுரூபமணியென்று
     சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே.

விளக்கவுரை :

114. பார்த்தறிந்தா ரிந்தமணி வாத மென்று
          பரிவான கயிலாய தெட்சணா மூர்த்தி
சேர்த்தறிந்த தம்முடைய வர்க்க மான
          சீடரிலே திருமூலர் சண்டி கேசர்
மாத்தறிஞ்ச சனகாதி நால்வ ரோடு
          மருவிநின்ற வியாக்ரபதஞ் சலியினோடு
போக்கறிந்த வடியெனொடொன் பதுபேர் பிள்ளை
          புகழான பூரணத்தி லெழும்பென் றாரே.

விளக்கவுரை :
           
115. எழும்பையிலே நிர்மலம்போற் சடமோ காணா
          தேனென்றாற் பூரணந்தா னெதுக்குப் பேசும்
எழும்பையிலே குளிகைமுதற் காண்டிற் பத்தே
          ஏற்றியதோர் தீபத்தின் சுடர்போற் காணும்
எழும்பையிலே தேகமில்லை கோடா கோடி
          எடுத்தசடஞ் சூட்சுமமா யிருந்த தென்றால்
எழும்பையிலே மேலெழும்பி மௌன முற்றும்
          இருந்துரைத்த சமாதியுடைப் பலந்தான் காணே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  106 - 110 of 203 பாடல்கள்

106. போச்சப்பா தத்துவங்க ளனித்தியப் பட்டுப்
          புலன்கெட்டு நிலங்கெட்டுப் பொறியுங் கெட்டே
ஆச்சப்பா மனவரையில் மயங்கி நின்றே
          ஆடுவதோர் படம்போல அசைந்து தள்ளு;
நீச்சப்பா கடநீச்சுத் திரோதாயி வெள்ளம்
          நிலையேது கரையேது தவணை யேது?
மூச்சப்பா அடங்கு முன்னே மாயை வந்து
          முற்றிமுதிர்ந் தளிவுதள்ளு மோசங் காணே.

விளக்கவுரை :
           
107. காணப்பா மனவரையை மாறுக் குள்ளே
          கடைத்தேறப் போகாது கறக்க மெத்த
ஊணப்பா வென்று சொன்னால் மனமூ ணாதே
          உற்றுமெள்ளப் பிடித்தாலும் மாயை கட்டும்;
வீணப்பா வுலகத்தோர் ஞான மெல்லாம்;
          வேதாந்த சித்தாந்த மென்பார் கோடி
தோணப்பா ஞானமென்ன கண்டிப் பில்லைச்
          சுடர்கோடி யொளிபோலத் தோன்றுந் தானே.

விளக்கவுரை :
           
108. தானென்ற நிர்மலமா மனத்தின் வீதி
          தாண்டரிது தாண்டினா லறிவு போற்றும்
கானென்ற மனத்தின்சா தகத்தைக் கேளு
          கற்பமுண்ண வந்துண்ணால் வாசிதோறும்
பானென்ற பாணத்தின் பாதை நில்லு
          பகலாலுங் கேசரத்தில் மனந்தா னெட்டும்
வானென்ற வெட்டவெளி வடிவு காணும்
          மாச்சல் மெத்த மாச்சல்மெத்த மருவி கூடே.

விளக்கவுரை :
           
109. கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டுங்
          கூப்பிட்டால் பூரணந்தான் கூடப் பேசும்;
ஆடுவது மனவரையில் மாயம் போக்கும்
          அருவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கும்
நாடுவது பூரணத்தி லேற்றிக் காட்டும்
          நலமான சாணையார் கெவுனஞ் சூதம்
தேடுவது சித்தருக்குக் குளிகை கெட்டுச்
          செகத்தோர்க்கு வாதமென்றே தேட்டுத் தானே.

விளக்கவுரை :

110. தேட்டான வரைகடந்து மனமுந் தாண்டித்
          தெளிவான அறிவினுடை வரையுந் தாண்டி
நீட்டான பூரணத்தின் வரைகா ணென்று
          நேரான மூன்றுவரை யேறிச் சொக்கிப்
பூட்டான பூட்டிறங்கி விட்டேன் மைந்தா
          புகழான வெறுவெளியி லேறப் போகா
ஆட்டான கைலாயப் பரம்பரை வந்த
          ஆச்சரிய மூலகுரு வாக்குங் கேளே.

விளக்கவுரை :

சட்டை முனி சித்தர் பாடல்கள்  101 - 105 of 203 பாடல்கள்

101. மருளாம லிருக்கவல்லோ வாதஞ் சொன்னார்?
          மாண்டிறந்து மாண்டிறந்து பிறக்கை நன்றோ?
வெருளாமல் மனம்பிடித்த வாதி யானால்
          வெகுசுளுக்கே யேறுதற்கு ஞான வீதி
அருளாமோ பொருளாமோ வென்றே யெண்ணி
          அலையாமல் நின்றவனே ஆதியோகி
இருளாமோ வெளியாமோ வென்றே யெண்ணி
          ஏகவெளி சுத்தவிரு ளாகிப் போமே.

விளக்கவுரை :

102. ஆகவப்பா விருப்பத்தோ டஞ்சு நூறும்
          அறைந்திட்டேன் வாதத்தை யறிந்து கொள்ளு;          
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம்நூறு
          அப்புறத்தே சொன்னதொரு ஞானம்நூறு
ஆகவப்பா இருபத்தோ டெழுநூ றுந்தான்
          அறிந்தமட்டும் சொல்லிவந்தேன் வல்லோருண்டோ
ஆகவப்பா பார்த்தேயிக பரமுஞ் சித்தி
          ஆதியென்ற குருவருளால் சொன்ன முற்றே.

விளக்கவுரை :

பின் ஞானம் நூறு

103. கைலாயப் பரம்பரத்தி லென்னை யாண்ட
          கடவுளெனுந் தெட்சணா மூர்த்தி பாதங்
கைலாயத் தெனையீன்ற ஆயி பாதங்
          கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன்;
கைலாய நிர்க்குணநிர் மலமே தேவர்
          காட்டுகின்றீர் கேசரியின் மயமாய்க் கையில்
கைலாய பரம்பரையாய் வந்த பேர்க்குக்
          கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே;

விளக்கவுரை :
           
104. பாடுகின்றேன் சரியையென்ன? தேவி தீட்சை
          பரிவாகக் கிரியையென்ன? தேவி பூசை;
பாடுகிறேன் யோகமென்மா சற்ற அமுதம்;
          பாங்கான ஞானமென்ன? மௌனத் தந்தம்
பாடுகிறேன் திடத்திரனா யீதோ கீதம்;
          பாங்கான அஞ்சலிதான் மனமாந் தேகம்
பாடுகிறேன் பரன்முனிவ ளுக்கே யென்றால்
          பரிவானால் ஞானவித்தை பலிக்குந் தானே.

விளக்கவுரை :
           
105. தானென்ற ஞானத்தின் பூமி கேளு;
          சாதகமா யோகமென்ற அபர வீடு
வானென்ற பூமியிலே வித்தை கேளு;
          அறிவிற்கு மறிவான வுகார விந்து
வேனென்ற வெளியெல்லாம் படைத்து நின்று
          வேதாந்த அண்டமென்ற மகார மாச்சு;
கோனென்ற நாதமங்கே குமுறி யாடும்;
          கூப்பிட்டாற் கேளாது கண்ணும் போச்சு.

விளக்கவுரை :
Powered by Blogger.