அகத்தியர் பன்னிருகாண்டம் 136 - 140 of 12000 பாடல்கள்



136. கூறுவான் வாய்ஞான மிகவும்பேசி
    குவலயத்தில் காவி காஷாயம்பூண்டு
தூறுவான் மூடரிட வித்தைபேசி
    துடியான வார்த்தையது மிகவுங்கூறி
சீறியே பேச்சுகளா லடித்துருட்டி
    சிறப்பான தத்துவ வழிபோலேதானும்
மீறியே வரங்கடந்து யதிகம்பேசி
    மிக்காகி கலையில் நின்று வழிசொல்வானே.

விளக்கவுரை :


137. சொல்லவே அவரிட சீஷவர்க்கம்
    துறையான வழிபாடு யிதுதானென்று
வெல்லவே காவி காஷாயம்பூண்டு
    வேகமுடன் லக்கோடா ய்த்தானணிந்து
புல்லவே பதாம்புயத்தை முகவும்நண்ணி
    புகழான வட்சரத்தைக் கற்றோர்போலும்
நல்லதொரு கியானிபோல் இருந்துகொண்டு
    நவமான வரட்சரத்தை யோதுவானே.

விளக்கவுரை :


138. ஓதுவான் திரிமுர்த்தி சொரூபன்போலும்
    ஓகோகோ நாதாக்கள் தன்மைபோலும்
நீதமுடன் லபிகடந்த சித்தபோலும்
    நிலையான தம்பனத்தின் சித்துபோலும்
தீதமுடன் ஞானவா னாகவேதான்
    திறமான குளிகைகொண்ட சித்துபோலும்
சாதமது நீக்கினதோர் சற்குருவைப்போலும்
    சட்டமது வெகுநெடுவாய்ப் பேசுவானே.
 
விளக்கவுரை :


139. பேசுவான் குவலயத்தில் ஆசைதன்னை
    பேருலகில் மறந்தவன்போல் வாதுகூறி
மாசுடைய மூச்சதனை வுள்ளடக்கி
    மகத்தான வனாகதத்தை கீழேநோக்கி
மாசுடைய பற்றதுவும் நீங்கியேதான்
    மகத்தான சற்குருவின் பாதம்போற்றி
ஆசுடைய சீடவர்க்கம் நீதானென்று
    அப்பனே யுபதேசம் செய்வான்பாரே.

விளக்கவுரை :


140. பாரேதான் சண்முகத்தின் பூசையப்பா
    பாருலகி லெப்போதுஞ் செய்யவேண்டும்
நேரேதான் திரிபுரைதான் பூசையப்பா
    நெடிதான பராபரியாள் பூசைவேண்டும்
சீரேதான் அஷ்டமா சித்துவேண்டும்
    சிறப்பான சோடசமு மறியவேண்டும்
கூரேதான் அஷ்டவர்க்கந் தன்னைக்கண்டு
    கொற்றவனு முபதேசங் கூறுவானே.
       
விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 131 - 135 of 12000 பாடல்கள்


131. இருக்கலாம் புலஸ்தியா யின்னங்கேளு
    யெழிலான மார்க்கமொன்று சொல்வேன்யானும்
வருக்கமுடன் மானிலத்தில் ஞானிபோல
    வாறுடனே சகலநூல் கற்றோன்போலும்
திருத்தமுடன் தத்துவத்தில் கடந்தோனென்றும்
    தெளிவான பிரமலபி யறிந்தோன்போலும்
பொருத்தமுடன் பூமிதனி லாசைவிட்டுப்
    பூதலத்தில் முன்றாசை வெறுந்தோனாமே.

விளக்கவுரை :


132. ஆமேதான் பொய்வேட மிகவுமுண்டு
    அப்பனே சர்வக்கியானி போலேதானும்
தாமேதான் சர்வநூல் கற்றோன்போலும்
    சட்டமுடன் வாய்பினத்த லதிகம்பேசி
நாமேதா னுலகத்தில் கடந்தஞானி
    நாட்டிலே யாரேனு மொருவருண்டோ
போமேதான் மெய்ஞானி போலேயப்பா
    பொங்கமுடன் வெகுபேச்சு பேசுவானே.

விளக்கவுரை :


133. பேசுவான் ஞானவழி காட்டுவான்போல
    பேரான மாய்கைதனை யவித்தோன்போலும்
கூசுதலு மிகப்படைத்த புத்திவான்போல்
    குவலத்தில் கீர்த்திபெற்ற பூபாலன்போல்
காசுபண மாசையது மற்றோன்போலும்
    காசினியில் பற்றாசை யில்லான்போலும்
மாசுமறு வில்லாத புண்ணியன்போல்
    மகத்தான ஞானிபோல் பினத்துவானே.

விளக்கவுரை :


134. பினத்தியே வாயாட்ட மிகவுங்கொண்டு
    பிரியமுடன் சீஷர்க ளனேகமுண்டு
கனத்துடனே கதைமிகவும் பேசியல்லோ
    கைலாச கிரிதனையே கண்டோன்போலும்
மனத்துயர மற்றவன்போ லுறுதிபேசி
    மகத்தான சின்மயத்தின் வெளிகண்டோன்போல்
சினத்துமே சீஷவர்க்கந் தர்க்கம்பேசி
    தினகாலம் வாசியைத்தான் மீட்டுவானே.

விளக்கவுரை :


135. மீட்டுயே தத்துவத்தை மிகவும்பேசி
    மேன்மையுடன் ஞானிபோல் வாதுகூறி
தாட்டிகமாய்ப் பூரணத்தின் பெருமைபேசி
    தகைமையுள்ள வாசியை மாசறச்சொல்லி
பூட்டகங்கள் காட்டுகின்ற சித்தன்போலும்
    பொலிவான ரேசக பூரகத்தைநாட்டி
நீட்டமுடன் பரிபோகஞ் செய்துமேதான்
    ...... ...... ...... ....வழி கூறுவானே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 126 - 130 of 12000 பாடல்கள்



126. வேண்டுமே குருவணக்கம் மிகவும்வேண்டும்
    விருப்பமுடன் மனதுவர நடக்க வேண்டும்
ஆண்டகைபோல் குருபாதந் தானினைத்து
    அப்பனே சிரங்குவித்து நமஸ்கரித்து
தூண்டியதோர் கருமான மறிவதற்கு
    துறையுடனே முறைபோல நூல்கள்கேட்டு
தாண்டமுடன் நூறாண்டு தானானாலும்
    தன்மையுடன் காத்திருந்து நூலைவாங்கே.
           
விளக்கவுரை :


127. வாங்கியே யவருக்கு முன்னேனில்லு
    வகையுடனே தொண்டுக்கு முதல்வனாக
தூங்கியே திரியாமல் முதலாய்நின்று
    துரைமுகத்தில் வூழியனாய்த் தானிருந்து
பாங்கியெனும் பெண்ணாசை விட்டொழித்துப்
    பாருலகி லிருப்பவனும் சித்தனாகும்
ஏங்கியே போகாமல் தீரவானாய்
    யெழிலுடனே யிருப்பவனே சீஷனாமே.

விளக்கவுரை :


128. சீஷனா யிருந்தாலு மவர்தமக்கு
    சீரலுடன் கேள்விகளுங் கேட்கும்போது
பாசமுடன் மனதுவந்து பட்சம்வைத்து
    பார்வைக்கு யெதிர்வார்த்தை மிகச்சொல்லாமல்
காஷாயமாம் வேடமதைத் தரித்துக்கொண்டு
    கவனசுத்தி கொண்டுதொரு ரிடிதமக்கு
தூஷணைக ளில்லாமல் சுகிர்தவானாய்
    துரைராஜ சுந்தரர்க்கு முன்னேநில்லே.

விளக்கவுரை :


129. நிற்கையிலே யெதிர்நின்று வாயாடாதே
    யென்மகனே புலஸ்தியனே செப்பக்கேளும்
அற்பமுடன் யென்மனதி லவரையெண்ணி
    அலட்சியமா யிருக்காதே மன்னாகேளு
சொற்பமென்று விடுகாதே தானாய்நின்று
    சுந்தரனே யவர்மனம்போல் நடந்துகொள்ளு
துற்பரவா வுன்மீதில் மனதுவைத்து
    துன்ப சாகரத்தைவிட்டு வாவென்பாரே.
    
விளக்கவுரை :


130. வாகவென்ற போதினிலே யுந்தனக்கு
    வாகான வரமுனக்கு வகுக்கலாச்சு
கோவென்ற ராஜனுந்தா னுனக்கீடுண்டோ
    கொப்பெனவே லோகமது வற்பவாழ்வில்
மாவெனவே அஷ்டாங்கம் யோகம்பெற்று
    மகத்தான பதவிகளும் உனக்குண்டாகும்
சாவென்ற நமனுமுன் கிட்டேவாரான்
    சதாகாலம் சமாதிதனி லிருக்கலாமே.
            
விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம்121 - 125 of 12000 பாடல்கள்



121. தாமான புலஸ்தியனே சாற்றக்கேளீர்
    தகைமையுள்ள தீவினைக்கு ஆளாகாமல்
நாமேதான் சொன்னதொரு கதையைப்போல
    நாட்டினிலே வரரிடியின் சாபத்தாலே
போமேதான் பொல்லாத தீவினைக்கு
    பொங்கமுடன் சாபத்தை நிவர்த்திசெய்து
ஆமேதா னப்போது மவனிதன்னில்
    அப்பனே யிருப்பதற்கும் யிடமுந்தேடே.

விளக்கவுரை :


122. தேடையிலே குருவின்மேல் பட்சம்வைத்து
    தேற்றமுடன் குருநூலை மெற்யென்றெண்ணி
பாடையிலே போமளவுங் கைவிடாமல்
    பாரினிலே சதாகாலம் அர்ச்சித்தேதான்
கூடையிலே வனுபோக நியமந்தன்னை
    கொற்றவனே யெப்போதுங் கொண்டணைத்து
மேடையிலே வாதியிடம் நின்றுகொண்டு
    மேன்மையுடன் சதாகாலம் பூசிப்பாயே.
     
விளக்கவுரை :


123. பூசிக்கும் வேளையிலே பராபரியாள்வந்து
    புகழுடனே யுந்தனுக்கு வரமுமீய்வாள்
ஆசித்து யெந்தனையுஞ் சதாகாலந்தான்
    அப்பனே வரங்கேட்டு யிருந்துகொண்டு
நேசித்து சித்தர்முனி ரிடிகளோடு
    நேசமுடன் தாமிருந்து கேள்விகேட்டு
பாசமது தானகற்றிப் பூலோகத்தில்
    பதவிவழி பெறுவதற்கு ஆளாவீரே.

விளக்கவுரை :


124. ஆளாவீர் புலஸ்தியனே சொல்வேன்பாரீர்
    அப்பனே யென்னூலை தோஷம் நீக்கி
பாளதுதான் போகாமல் மனதிலுன்னி
    பட்சமுடன் தியானித்து பெருநூல்தன்னை
நாளே தான் சதாகாலத் தவசிருந்து
    நன்மைபெற காவியத்தை மனதிலுன்னி
வீளேதான் அசுவனியின் கடாட்சத்தாலே
    விருப்பமுட னென்னாளும் வாழ்வீர்தாமே.
    

விளக்கவுரை :


125. தானான புலஸ்தியனே யின்னங்கேளீர்
    சாற்றுகிறேன் பண்டிதாளி லக்கணத்தைக்
கோனான யெனதையர் சொற்பழக்கி
    கூறுவேன் மாணாக்கள் பிழைக்கவென்று
மானான பண்டிதற்கு விதிகள்சொல்வேன்   
    மகத்தான நன்னடத்தை யாவுந்தேர்ந்து
பானான முறைப்படியே நடந்துகொண்டு
    பாரினிலே நூல்கேட்க வேண்டும்பாரே.
   
   விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 116 - 120 of 12000 பாடல்கள்



116. மிதந்திட்ட சாத்திரத்தை முனிவர்தாமும்
    மேன்மையுடன் கண்டெடுத்து குகைக்குள்வைத்து
பதமுடனே நமஸ்காரம் பூசைசெய்தே
    பட்சமுடன் னூலதனை மிகவாராய்ந்து
மதமுடனே நூற்கருவின் உருவைக்காணார்
    மார்க்கமுடன் நூலதனை  கவனியாமல்
சதமுடைய சாஸ்திரத்தைப் பொய்யென்றெண்ணி
    சட்டமுடன் வரரிடியைத் தூற்றினாரே.

விளக்கவுரை :


117. தூறினால் நாதாந்த சித்தொளியைக்கண்டு
    துப்புறவாய்ச் சாத்திரத்தைப் பொய்யென்றெண்ணி
கூறினதோர் படியாலே யுந்தமக்கு
    குவலயத்தில் தலைதெரித்துப் போகுமென்று
தூர்வாச முனிபோலே சாபஞ்சொல்லி
    துன்மையுடன் சமாதியிலே போகமென்று
மாறுபா டாகவல்லோ வதிதங்கூறி
    மானிலத்தில் வெகுசாப மிட்டார்தாமே.

விளக்கவுரை :


118. இட்டதோர் சாபத்தால் புலஸ்தியாகேள்
    யெழிலான சித்தொளியும் மண்ணாய்ப்போனார்
கெட்டலைந்து வெகுபேர்கள் தோஷஞ்சொல்ல
        கீர்த்தியுடன் மண்டலத்தில் மாண்டார்தாமும்
விட்டகுறை தானிருந்து வீம்புபேசி
        வெகுபாடு பட்டார்கள் மாந்தர்தாமும்
தொட்டமுறை குணமறிந்து செய்தால்சுத்தி
        தேற்றமுடன் செய்யாதார் காணார்பாரே.

விளக்கவுரை :


119. காணாத சாபத்தை அறியாமற்றான்
    கண்கெட்டான் போலிருந்து நூல்கள்தம்மை
வீணாக தோஷங்கள் மிகவுஞ்சொல்லி
    விருதாகச் சாபத்துக் காளுமானார்
வேணாத பொருட்கெல்லாம் மிகவும்பாரு
    மேன்மையுடன் பட்டுமல்லோக் கெட்டுமாண்டார்
தோணாத சரக்கெல்லா மதிலேதோயும்
    தொந்தமிட னறியாமற் கெட்டர்பாரே.

விளக்கவுரை :


120. கெட்டுமே வரரிடிமேல் தோஷஞ்சொல்லி
    கெடுதியுள்ள பாவத்துக் காளுமாகி
பட்டுமே சாபத்தால் முறிந்துஆளாய்
    பாருலகில் தீவினைக்கே யாளுமாகி
நட்டாற்றில் விட்டதொரு கதையைப்போல
    நாதாக்கள் நூலதனைப் பாராமற்றான்
சட்டமுடன் பழிபாவந் தலைமேற்கொண்டு
    சாங்கமுடன் தலைதெரித்துப் போனார்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 111 - 115 of 12000 பாடல்கள்



111. போமென்று விடுகாதே புலஸ்தியாகேள்
    புகழுடனே பெருநூல்யான் செய்வேனென்றேன்
தாமேதா னவரவர்கள் செய்தநூற்கள்
    தாரணியில் மெத்தவுண்டு யிதுபோல்சொல்வார்
வேமேதான் சூட்சாதி சூட்சம்யாவும்
    வெகுவிதமாய்ச் சொல்லிவைத்தேன் பெருநூல்தன்னில்
நாமேதான் சொன்னபடி பெருநூல்தன்னில்
    நாட்டிலே யாரேனுஞ் சொல்லார்தானே.

விளக்கவுரை :


112. சொல்லாத கருவா நூலுக்கெல்லாம்
    தோற்றமுட னின்னூல்தான் குருநூலாகும்
வெல்லவே சித்தர் முனி ரிடிகள் தாமும்
    வேதாந்தத் தாயினது கடா ட்சத்தாலே
புல்லவே போகரது பெருநூல் சாகரந்தான்
    பேரான னூற்கெல்லாம் பெருனூலாகும்
அல்லவே சாத்திரத்தைப் பாடினாலும்
    அவனியிலே கருவாளி காண்பான்பாரே.

விளக்கவுரை :


113. காண்பானே சாத்திரத்தை மதியூகிதானுங்
    கருவான கருவிகர ணாதியெல்லாம்
ஆண்மையுள்ள சிங்கந்தா னறிவானப்பா
    அப்பனே வீண்பிள்ளை அறிவானோசொல்
மாண்பான மாநிலத்தில் மெத்தகோடி
    மன்னர்கள் குருக்கள்மார் மாந்தர்யாவும்
தாண்பான சாத்திரத்தை யுகந்துப்பார்த்து
    தகைமையுள்ள சாத்திரத்தை தோடிப்பாரே.

விளக்கவுரை :


114. தோடித்தா ரானாலே பாவமெய்தும்
    தொல்லுலகில் தெரியாம லவலமென்பார்
தூடித்த பாவிகட்கும் கருமிகட்கும்
    தூருடனே இடிபோலே சாபம்நேரும்
பாடியங்கள் தெரியாமல் பலவாறாக
    பாரினிலே துடிப்பார் பலனூல்தன்னை
பூடிதமாய் யென்னூலைப் புகழ்ந்தோர்தாமும்
    பூதலத்தில் சித்தனைப்போல் வாழ்வார்தானே.

விளக்கவுரை:


115. வாழவே புலஸ்தியனே சொல்லக்கேளீர்
    வாகுடனே திரேதாயி னுகத்திலப்பா
நீழவே வரரிடியாம் சித்துதாமும்
    நீடாழி காலம்வரை யுலகிருந்தார்
ஆழவே வெகுகோடி சாத்திரங்கள்
    அப்பனே பாடியல்லோ சாகரத்தில்
சாழவே சமுத்திரத்தி லுருவிவிட்டார்
    சார்பான னூல்களெல்லாம் மிதந்துதாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 106 - 110 of 12000 பாடல்கள்



106. ஆனாரே நூல்களிலே தர்க்கம்பேசி
    அவனிலே வீணாகக் கெட்டலைந்தார்
போனாரே புதுநூல்கள் பழைய நூலும்
    பொங்கமுடன் வெகுசொச்சம் லெக்கோாயில்லை
நானான படியாலே சொச்சம்சொல்லி
    நாட்டினில் பிழைக்கவென்று மனதிறங்கி
தேனான மறைகளெல்லாம் தெரியவென்று
    தெளியவென்று செகதலத்தில் செப்பினேனே.

விளக்கவுரை :


107. செப்பினேன் தசலட்சம் காப்புதன்னை
    தெளிவாகப் புலஸ்தியனே சொல்லக்கேளீர்
ஓப்பமுடன் பத்துலட்சம் காப்புசெய்தேன்
    ஓகோகோ நாதாக்கள் செய்ததில்லை
நெப்பமுடன் பத்துலட்சக் கிரந்தந்தன்னை
    நேர்மையுடன் பாடிவைத்தேன் கோடிமார்க்கம்
சொற்பமென்று நினையாதே துரைமன்னாகேள்
    துறையோடு முறையோடுஞ் சொன்னேன்பாரே.

விளக்கவுரை :


108. பாரேதான் தசலட்ச கிரந்தந்தன்னை
    பாடிவைத்த ஔவையார் கண்டாரப்பா
சீரேதான் சித்தர்முனி ரிடிகள்தாமும்
    சிறப்புடனே யவரவர்கள் மனதுபோல
வேரேதான் சாத்திரங் களுண்டுபண்ணி
    வெகுமறைப்பு சூதுகளுஞ் செய்துபோட்டார்
நீரேதான் புலஸ்தியனே பிழைக்கவென்று
    நீணிலத்தில் பெருநூல்தான் செய்தேன்பாரே.

விளக்கவுரை :


109. செய்யவென்று யென்மனதி லெண்ணங்கொண்டு
    சேனை நாள் காத்திருந்தேன் வரைகோடிகாலம்
பய்யவே சித்தரெல்லாங் கூட்டங்கூடிப்
    பட்சமுட னெந்தனிடம் வந்தார்கண்டீர்
துய்யதொரு கடினமுள்ள சித்ததாமும்
    துரைராஜ சந்தரனே வாதுசொன்னார்
மெய்யான பெருநூல்தான் செய்தீரானால்
    மேதினி யெல்லாஞ் சித்தாய்ப் போமென்றாரே.

விளக்கவுரை :


110. போமென்று சொல்லுகையில் சித்தர்தாமும்
    பொங்கமுடன் .............. .......................................
.....................  ........................... ..........................
    ................ .............................. .....................................
.........குருக்களுமார் சீஷமார்கள்
    குவலயத்தில் மெத்தவுண்டு கூறக்கேளீர்
நாமொன்று சொன்னாலோ அவரொன்று செய்வார்
    நாதாக்கள் மறைப்பெல்லாம் வீணாய்ப்போமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 101 - 105 of 12000 பாடல்கள்



101. பாரேதான் லட்சண காவியந்தானாகும்
    பாங்கான ஞான காவியந்தானாகும்
தேரேதான் வாத காவியந்தானாகும்
    தெளிவான மாந்திரீக காவியந்தானாகும்
சீரேதான் தத்துவ காவியந்தானாகும்
    சிறப்புடனே சிறுகாவிய மாயிரமுமாகும்
நேரேதான் காவியங்கள் மார்க்கமெல்லாம்
    செப்பினேன் ஆயிரமாம் பாடல்தானே.

விளக்கவுரை :


102. பாடவே பெருநூல் செளமியந்தானாகும்
    பாங்கான செளமியமு மைந்நூறாகும்
நீடவே சிமிட்டுரத்தின முந்நூறாகும்
    நெடிதான பரிபாஷை ஐநூறாகும்
தேடவே ரத்தினமாஞ் சுருக்கமப்பா
    தெளிவான பள்ளு நாடகமுமாகும்
கூடவே மருத்துவ பாரதந்தானாகும்
    குறிப்பான ஆயுரு வேதமாமே.

விளக்கவுரை :


103. வேதமாம் நாற்காண்ட ஜாலமாகும்
    வெளியான நாடிநூ லெண்ணாயிரந்தான்
போதமாம் மணி நாலாயிரந்தானாகும்
    பொங்கமுடன் நிகண்டது தானிருநூறாகும்
நீதமுடன் கரசலையும் முந்நூறாகும்
    நிலையான வாகடிய மைந்நூறாகும்
தோதமுடன் யமகண்ட மெண்ணூறாகும்
    துறையான யேமதத்துவ மெண்ணூர்தாமே.

விளக்கவுரை :


104. தாமான கருக்கிடையு முன்னூறாகு
    ...... ..... ..... ..... ...று நூறாகும்
வாமான காவியந்தா னாயிரமுமாகும்
    வாகான மதிவெண்பா வாயிரமுமாகும்
காமான பெருநூல்கள் தொண்ணூற்றுச்சொச்சம்
    பாடிவைத்தேன் சிறுநூல்க ளாயிரத்துச்சொச்சம்
பூமான்கள் கண்டறிய மாநிலத்தில்
    புகழ்ச்சியுட னிகழ்ச்சியதாய் தூர்சொன்னாரே.


விளக்கவுரை :


105. தூரான மார்க்கமென்றா லேதுவென்னில்
    துப்புரவாய் சாத்திரத்தை முழுதுங்காணார்
தாராள மாகவல்லோ பார்த்தாரானால்
    சட்டமுடன் என்பேரிற் குற்றஞ்சொல்வார்
சீரான சாத்திரத்தின் கருவுகாணார்
    சிறப்புடனே தலையேடும் முதலேடுங்காணார்
கூரான சூத்திரத்தின் சூட்சங்காணார்
    குவலயத்தின் முழுமக்களானோர்பாரே.

விளக்கவுரை :


அகத்தியர் பன்னிருகாண்டம் 96 - 100 of 12000 பாடல்கள்



96. வாழவென்றால் முப்பூவை அறியவேண்டும்
    வையகத்தில் முப்பூவை அறியாவிட்டால்
 தாழவே சாத்திரங்கள் கற்றுமென்ன
    சதகோடி சூரியர்போ லிருந்துமென்ன
வீழவே முப்பூவைக் காணாப்பேர்க்கு
    விருதாவாய்ச் சாத்திரங்கள் பொய்யாப்போகும்
ஆழவே முப்புநூ லறியவேண்டும்
    அறியாட்டால் யோகமெல்லாம் பாழாய்ப்போமே.
         
விளக்கவுரை :


97. போமேதான் முப்பினிடனூலைப்பார்த்து
    பொலிவான முதலேடுங் கடையும்பார்த்து
நாமேதான் சொன்னபடி முப்புமார்க்கம்
    நாதாக்கள் செய்தமுறை ப........பார்த்து
தாமேதான் வைரவர்கள் நூல்கள் சொன்ன
    தகைமையுள்ள....... கருவை ......................
வேமேதான் மறைபொருளில் வினயங்
    வேதத்.... ..... ..... ........ ........ ...................

விளக்கவுரை :


98. உன்னவே நூலினுட விவரஞ்சொல்வேன்
    உத்தமனே புலஸ்தியனே செப்பக்கேளும்
பன்னவே சதுர்காண்டம் நாலாயிரந்தான்
    பாடிவைத்தேன் பற்பமது வைந்நூறாகும்
சொன்னேனே செந்தூரம் முன்னூறாகும்
    சொர்ணமென்ற திராவகமு மெண்ணூறாகும்
மன்னேகேள் காவியம் ஆயிரத்தைந்நூறாகும்
    மகத்தான நசகாண்டம் முன்னூறாமே.

விளக்கவுரை :


99. ஆமேதான் அசுவகாண்ட மைநூறாகும்
    அப்பனே கலைக்கியான மாயிரந்தானாகும்
தாமேதான் பூரணமும் நா நூறாகும்
    தாக்கான கருக்கிடையிரு நூறாகும்
நாமேதான் பூரண காவியந்தானாகும்
    நலமான ஆயிரத்துச் சொச்சமப்பா
போமேதான் தைலமது வை நூறாகும்
    பொங்கமுடன் சரக்குசுத்தி முந்நூறுதானே.

விளக்கவுரை :


100. தானான கருமகாண்டம் முந்நூறாகும்
    தகைமையுள்ள வல்லாதியை நூறாகும்
கோனான குருசொன்ன பாண்டுவைப்பு
    கொற்றவனே அறு நூறு யென்னலாகும்
தேனான ஜெனகருக்கு வுபதேசிக்க
    தெளிவான வறு நூறு வொன்றேயாகும்
பானான எட்சணியு மிருனூறாகும்
    பாங்கான சூத்திரமும் முந்நூற்பாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 91 - 95 of 12000 பாடல்கள்



91. கொதித்தவுடன் தானிறக்கி யெடுத்துப்பாரு
    கொற்றவனே பண்.... .... .............................
......... .......... .......... ........ ......... .............................
    .... .... ..... ..... .... ... .... ......................................
........... ...... .... ............ ... .......... .............................
    மாசற்ற தவளமது போலேயாகும்
கதிப்படியே பற்பத்தை யெடுத்துக்கொண்டு
    சாங்கமுடன் சிமிழ்தனிலே பதனம்பண்ணே.

விளக்கவுரை :


92. பண்ணவே சிலநாள்சென் றெடுத்துப்பாரு
    பாலகனே பற்பமது பூர்க்குங்காலம்
தண்ணமுடன் பற்பமதை யெடுத்துமைந்தா
    தகைமையுள்ள சரக்குகளில் கவசஞ்செய்து
உண்மையுடன் கனயெருவில் புடமேபோட்டால்
    வுத்தமனே சரக்கனைத்துங் கட்டும்பாரு
நண்மையுடன் சத்துரு மித்துருக்களெல்லாம்
    நளினமுடன் வழலைக்கு வணங்கும்பாரே.

விளக்கவுரை :


93. பார்க்கயிலே யின்னமொரு கருமானங்கேள்
    பாடுகிறேன் நாதாக்கள் ரிடிகள் வேதை
தீர்க்கமுடன் கருவதனா லெடுக்குமுப்பு
    திறமான வேதையிது சுளுக்குவேதை
ஆர்க்கமுடன் பரிபாஷை முப்புமார்க்கம்
    அப்பனே அனேகவழிக்கோடிபாதை
பார்க்கவே பாடிவைத்தார் சித்தர்தாமும்
    பண்பாக நாம்சொன்ன படிகாணோமே.  

விளக்கவுரை :


94. காணோமே சரக்குக்குச் சத்துருகாலன்
    கடிதான நரைதிரையும் மாற்றுங்காலன்
தோணவே முப்பூவிற் குன்றுவீதம்
    துறையோடும் முறையோடும் கொண்டாயானால்
பூணவே தேகமது கற்றூணாகும்
    பொங்கமுடன் வயததுவும் லக்கோயில்லை
வேணபடி யுபசார மிகநடக்கும்
    வேதமுடன் காயசித்திக் கிடங்கொள்வாயே.

விளக்கவுரை :


95. இடங்கொள்வாய்ப் புலஸ்தியனே மச்சகேந்திரா
    யெழிலான முப்பூவா லெல்லாஞ்சித்தி
திடங்கொண்ட காயமதை நிறுத்தலாகும்
    திரளான மனுக்களெல்லா முனக்கீடுண்டோ
தடங்கொண்ட சமாதியிலே யிருந்துகொண்டு
    தாரணியில் வெகுகோடி காலமப்பா
மடங்கண்டு தேகமதை நிறுத்திக்கொண்டு
    மானிலத்தில் சித்தனைப்போல் வாழுவாயே.

விளக்கவுரை :

Powered by Blogger.